ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

வேள்வி தீயில் உதித்த நான்..

 

வேள்வி தீயில்

உதித்து விட்ட என்னிடம் 

தீயின் தாகத்தை

அறிந்திருக்கிறாயா என்று

அங்கே கேட்கும் குரல்கள்

எல்லாமே வெற்று 

ஆராவாரங்களாகவே

என் காதில் விழுந்து

நான் உதித்த தீயின் நாவிற்கு 

சத்தம் இல்லாமல்

இரையாவதை பார்த்து

பேச்சற்ற நிலையில்

கண்களில் கண்ணீரோடு

பிரார்த்தனை 

செய்துக் கொள்கிறேன்...

அந்த ஆராவாரங்கள்

ஞானம் பெற்று

அந்த தீயில்

அமைதியடையட்டும் என்று ...

#நான்எனும்பெரும்யாகத்தீ.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...