பல முயற்சி எனும்
அற்புதமான பூக்கள்
கடும் வெப்பத்தால்
கருகி வீழ்வது போல
என் முன்னெடுப்பு
நிகழ்வுகள் எல்லாம்
என்னை துன்புறுத்தி
மகிழ்ந்த போதும்...
பெரும் அற்புதமான
அந்த அலையில்
கால் நனைத்தலில்
நான் என்னை மறந்து
இந்த சிருஷ்டிக்கு
நன்றி சொல்லிக் கொண்டு
இருக்கும் போதே
அதே அலை என்னை
கடலில் எங்கோ ஒரு மூலையில்
என்னை
இழுத்துக் கொண்டே போய்
போட்டது போல
தடுமாறி அதிர்ச்சி
அடைந்த போதிலும்...
நான் எனக்கான
சாதாரண உணவை
பெரும் பிரயத்தனப்பட்டு
சாப்பிட அமரும் போது
எங்கிருந்தோ வந்த நாய்
அதை வேகமாக இழுத்துக் கொண்டு
போய் என் வயிற்றின் அக்னியை
மேலும் தகிப்பூட்டி
நான் அதிர்ச்சியாக
வேடிக்கை பார்த்துக் கொண்டு
இருப்பதை
பலபேர் கலகலவென சிரித்து
நான் அங்கே
வேடிக்கை பொருளாக
காட்சியளித்த போதும்...
நான் இங்கே இம்மியளவும்
கலங்குவதே இல்லை...
இங்கே எனக்கு தோல்வி என்பதோ
என் முன்னெடுப்புகள் எல்லாம்
கானல் நீராகுவதோ
என்னை சற்றும் நிலைதடுமாறி
கீழே விழாமல்
மிகவும் கூடுதல் வலிமையாக
நின்று கொண்டு தான்
இருக்கிறேன்...
அந்த அற்புதங்கள்
எல்லாம் நிகழ...
அத்தனையும் சாத்தியமாக...
எனக்கு உதவிய தோல்வி எனும்
மனதை பக்குவப்படுத்திய
நண்பனால் தான்
இயன்றது...
தோல்வி எனும் நண்பனின்
கரம் பற்றி நான் எத்தனை தூரம்
செல்வேன் என்று தெரியாது...
அது வெற்றிகரமாக
கனியாகாவிட்டாலும்
ஒரு வித ஆழ்ந்த
பக்குவ நிலையை
உணர்த்தி என்னுள்
ஆழ்ந்த அமைதியை
அனுபவிக்க
உதவ தவறுவதில்லை...
அதனால் என் நிரந்தர தோழன்
அவன் ...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:29/04/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக