அன்பான விஜய் அண்ணா
நாளை தாங்கள் பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்கள் 🎉
நாளை சனிக்கிழமை... மக்கள் சேவைக்கு உகந்த நாள்...
எப்போதும் சனி கடும் உழைப்பாளி... மேலும் அவர் கீழ் மட்டத்தில் உள்ள சாதாரண மக்களோடு எப்போதும் சுற்றுபவர்...
அவருக்கு கண்ணாடி மாளிகையில் இருந்துக்கொண்டு எதையும் செய்ய பிடிக்காது...
காசு பணம் பதவி மரியாதைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...
அவருக்கு தேவை நீதி நேர்மை மட்டும் தான்...
அகங்காரம் ஒரு சிறு துளி இருந்தாலும் அதை நசுக்கி விட்டு எதுவுமே நடக்காதது போல தனது பாதையில் செல்பவர்...
நிற்க...
ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் சொல்ல தான் இந்த கடிதம்..
அது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ராகுவின் அம்சம்... லாட்டரி டிக்கெட் விற்பவர் ஒருவர்...அது ராகுவின் அம்சம்..
அந்த ராகுவின் அம்சத்தை முதலில் நீங்கள் கழற்றி விட வேண்டும்...கலியுக ராஜா அவர்...
இந்த கலியுக ராஜா என்ன செய்வார் என்று போக போக தெரியும்... அந்த போக போக தெரிவதை விட நீங்கள் முதலிலேயே இவரை கழற்றி விட்டு விடுங்கள்...
அடுத்து புஸ்ஸி ஆனந்த்... இவர் விஸ்வ கர்மா அல்லவா... ஒரு விஸ்வகர்மாவால் தான் ஒரு அழகான மாளிகை பாண்டவர்களுக்கு உருவானது... அவர் ஏதோ பாண்டவர்கள் மீது உள்ள பேரன்பில் ஒரு மாய மாளிகை கட்டி கொடுத்து விட்டார்... அந்த மாளிகையினால் அகங்காரம் கொண்ட பாஞ்சாலி துரியோதனனை வம்புக்கு இழுத்து மகாபாரதம் எனும் பெரும் போருக்கு காரண கர்த்தா ஆக்கி விட்டு விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார்...
அப்புறம் ஒருவர் இருக்கிறார்...
அவர் யார் என்றால் செங்கோட்டையன்..இவர் சகுனி அம்சம்... அவர் வழிகாட்டுதல் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் உங்களை நிச்சயமாக அவர் அதாள பாதாளத்தில் தள்ளி விட்டு சிரித்துக்கொண்டே போய் விடுவார்...
பிறகு பெண்கள் ஓட்டு பெரும்பாலான சதவீதத்தில் வாங்கி வெற்றி பெற்று இருக்கிறீர்கள்... இவர்களும் ராகுவின் அம்சம் தான்.. இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.. இல்லை என்றால் அவர்கள் சீற்றம் உங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தி விடும்...
அதனால் நீங்கள் உங்களை சுற்றி உள்ள கலியுக ராஜாக்களை கழற்றி விட்டு மக்கள் தொண்டே மகேஸன் தொண்டு என்று தொடர்ந்து உங்கள் பயணத்தில் தெளிவான பாதை வகுத்துக் கொண்டு நேர்மையாக அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து ஆட்சி நடத்த வேண்டும்...
இரண்டு எதிர் கட்சிகள் சட்டசபையில்... அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.. இந்த சோதனையை எல்லாம் அவர்களே சந்தித்தது இல்லை என்பது தான் உண்மை... ஆனால் நீங்கள் இந்த இரும் பெரும் கட்சிகளை சமாளித்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மனம் கோணாதபடியும் நடந்து மிகவும் வேகமாக சாலையில் போகும் போது திடீரென ஒரு சிகப்பு லைட் விழுந்து நம்மை நிலைதடுமாற வைக்குமே அப்படி மத்தியில் உள்ள அரசு எனும் டிராபிக் போலீஸ்...
இப்படி இவர்கள் எல்லோரையுமே சமாளித்து நீங்கள் இந்த ஒரு ஐந்து வருடம் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சர்...
ஆம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்...
இந்த பத்திரிகை சந்திப்பில் எல்லாம் நீங்கள் நிச்சயமாக கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.. இல்லை என்றால் பெரும் விமர்சனத்தை சந்திப்பீர்கள்... அது நீங்கள் முன்னாடியே தயாராக வைத்துக் கொண்ட கேள்வி பதிலாக கூட இருக்கலாம்... ஏனெனில் கடந்த காலங்களில் அப்படி தான் நடந்தது...
இல்லை இல்லை நான் பத்திரிகையாளரையே சந்திக்க மாட்டேன் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா அல்ல...
ஜெயலலிதாவை விட்டு விட்டு கலைஞரை தேடி போய் விடுவார்கள் அன்றைய பத்திரிகையாளர்...
இன்றைய நிலையில் இரண்டு எதிர் கட்சிகள் மூத்த தலைவர்கள் தேடி போய் உங்களை சிக்கலில் மாட்டி விடும் கேள்விகள் அவர்களிடம் கேட்டு பதில் வாங்கி விட்டு அதை தலைப்பு செய்தியாக போட்டு விட்டு இதற்கு நீங்கள் பதில் அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி இதற்காவது முதலமைச்சர் பதில் அளிப்பாரா என்று கேள்வி குறி போட்டு விட்டு மக்களை யோசிக்க வைத்து விடுவார்கள்...
எது எப்படியோ மக்கள் சார்பாக நீங்கள் நீண்ட நெடிய மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐🙌🙏.
✍️ #இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/05/26.