ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 ஜூலை, 2025

மர்ம வீடு பாகம் (1)


அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்களால் நம்பப்பட்டு வந்தாலும் நான் அங்கே தான் வசிக்க ஆயத்தம் ஆனேன்.. ஏன் என்று நீங்கள் கேட்டால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாதாக தான் இருக்கும்.. ஏனெனில் அந்த மரத்தின் அற்புதமான படர்ந்து விரிந்து இருந்த வசீகரம் மட்டும் அல்ல... அங்கே எப்போதும் குடிக் கொண்டு இருக்கும் பலவிதமான பறவைகள்... அதன் வாழ்வியல் என்று கூட சொல்லலாம்.தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்வியல் சூழலில் சலித்து கொஞ்சம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நான் வசிக்க வேண்டும் என்று நினைத்தபோது தான் இந்த வீடு பற்றிய தகவல் கிடைத்தது... உடனே நீங்கள் கேட்கலாம்..நீ மனநிலை பிறழ்வு உடையவரா என்று.. ஆமாம் என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்.. உங்கள் பார்வையில் நான் மனநிலை பிறழ்ந்தவர் தான்... நான் குடியேறி தற்போது சில நாட்கள் ஆகிறது.. ஆனால் அங்கே இந்த மக்கள் குறிப்பிட்டதை போல எல்லாம் ஒரு அமானுஷ்ய நிகழ்வுகளும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. நான் எனது அன்றாட பணிகளில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன்... அந்த வீட்டிற்கு சொந்தமாக காணி நிலம் ஒன்றும் இருந்தது... அந்த நிலத்தோடு தான் இந்த வீட்டையும் எனக்கு வசிக்க விட்டார்கள்.. அந்த நிலத்தை கொஞ்சம் சீர்திருத்தம் செய்து காய்கறி செடிகள் நடலாம் என்று திட்டமிட்டு அதை உழுது தயாராக வைக்க இன்று ஆளை கூப்பிட வேண்டும் என்று நினைத்து தற்போது எனது காலைப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறேன்...இதோ முடிந்தது.. பசியும் என்னை கொஞ்சம் கண்டுக் கொள்ளேன் என்று உரிமையோடு சிணுங்கியது..காலை உணவாக தயாரித்து வைத்து இருந்த இட்லியும் அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னியும் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியில் உள்ள கல்லுக் கட்டில் அமர்ந்து மிகவும் நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டே அந்த பறவைகளின் அற்புதமான குரலில் உரையாடலையும் கேட்டு ரசித்தேன்..என்ன அற்புதமான உலகம் இந்த இறைவன் படைத்து வைத்து இருக்கிறான்.. இந்த அற்புதத்தை தவற விட்டு விட்டு எங்கே இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக நினைத்தபடியே நான் சாப்பிட்டு முடிக்கவும் அங்கே நான் எதிர்பார்த்த உழவுக்கு டிராக்டரோடு ஆள் வரவும் சரியாக இருந்தது..என்ன அம்மா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார் அந்த மனிதர்.. ஆமாம் சாப்பிட்டு முடித்து விட்டேன்.. வாருங்கள் நீங்களும் சாப்பிடலாம் என்றேன்... அவர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் வேண்டாம் மா.. நான் முதலில் உழவை முடித்து விட்டு வருகிறேன்.. பிறகு தங்களது உணவை ருசி பார்க்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. நானும் சரி என்று ஆமோதித்து தட்டை கழுவி வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டே கழனிக்கு நடந்தேன்... 

அடுத்த நிகழ்வில் சந்திப்போம்...

அந்த மர்ம வீட்டில் நேயர்களே 🙏.


திங்கள், 21 ஜூலை, 2025

எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு என்ன


எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு அவரை தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தது அது என்ன என்று கீழேயுள்ள லிங்கில் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நேயர்களே 🙏 

https://youtu.be/Wq6LbQHDvMY?si=g-P3Vm3ECgpK2AZL


உயிர் நாடி சிறுகதை//


அந்த பச்சை வயல்வெளியை

பேருந்து பயணத்தில் நான் 

கடந்து செல்லும் போது 

அன்று என்னிடம் இருந்த 

என் வயலில் 

உழைத்து களைத்த 

காளை மாட்டின் சத்தம் 

இன்னும் என் காதில் 

ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இன்றோ நான் விற்ற வயலை 

அதே பேருந்து பயணத்தில் கடக்க 

நேர்ந்த போது 

அங்கே காணும் காட்சியில் 

டிராக்டர் உழும் சத்தத்தில் 

என் உயிர் நாடி சற்றே சில நொடிகள் 

அடங்கி போக 

என்னையும் அறியாமல் 

என் கண்களில் தாரை தாரையாக 

நீர் வழிந்தபோது 

என் அருகில் இருந்தவர் 

என்னாச்சு என்று ஆறுதலாக 

கேட்டபோது நான் சுதாரித்து 

கண்களை 

துடைத்துக் கொண்டு 

ஒன்றும் இல்லை ஐயா என்று 

சொல்லியபடியே பேருந்தை விட்டு 

இறங்கி அங்கிருந்த 

பயணியர் இருக்கையில் சற்றே 

ஆறுதலாக அமர்ந்தேன்...

என் வலியை சமிக்ஞையால்

உணர்ந்த ஏதோவொரு 

பறவையொன்று 

நான் அமர்ந்து இருந்த 

இருக்கை 

அருகே உள்ள மரத்திலிருந்து 

சற்றே சிறகை சிலிர்த்து எழுந்து 

தன் சிறகாலே என்னை மிருதுவாக 

வருடி கீச் கீச்சென்று 

என் காதருகே பேசி ஏதோ 

ஆறுதல் செய்ய முயன்றதில் 

மீண்டும் என் கண்களில் கண்ணீர்...

அந்த பறவையின் எச்சத்தை 

அங்கே வேகமாக வந்த 

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 

என்றோவொரு நாள் வரும் 

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தை 

ஸ்பரித்து சிலிர்த்து எழ காத்திருக்கும் 

ஒரு விதையின் சிறு முனகலின் 

வலியை நான் உணர்ந்ததை போல 

அதில் பயணித்த பயணிகளின்

செவிகளை எட்டி இருக்க 

நியாயமில்லை ...

மீண்டும் மீண்டும் 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

அங்கே இருந்த மரங்களும் ,

செடி கொடிகளும் செய்வதறியாது 

திகைத்தது...

அங்கே மழைக்கான

அறிவிப்பாக பறந்து திரிந்த 

தட்டான்களும் சற்றே 

என் சோகத்தை கடக்க முடியாமல் 

மௌன சாட்சியாக அங்கேயே 

என்னை விட்டு அகலாமல் என்னை 

சுற்றி சுற்றி பறந்ததை 

பெரும் வியப்போடு 

போவோர் வருவோர் பார்த்து 

கடந்து செல்கிறார்கள்...

அவர்களுக்கோ அது வியப்பு..

எங்களுக்கோ அது நுட்பமான 

உயிரை உருக்கும் வலி என்று 

அவர்களுக்கு யாரேனும் 

புரிய வைக்க முயற்சி 

செய்யுங்களேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/25/திங்கட்கிழமை.



வெள்ளி, 18 ஜூலை, 2025

சிறுகதை உலகம்: கட்டெறும்பு கனைக்கிறது..


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட குடும்ப கதையை வாசித்து இருக்கிறேன்.. வழக்கம் போல தங்களது மேலான பேராதரவு தந்து கருத்துக்களை கதையை கேட்டு விட்டு பதியுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🎉 🎻 ✨.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் நேயர்களே 🎉 🙏 🤝 

https://youtu.be/WhP9qjY-9AM?si=M15iOMtNpRYMmfRm

சிறுகதை உலகம்//ஆனந்தம்


வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு பள்ளி சிறுவனின் உருக்கமான கதை நேயர்களே 🙏🎉🎻.

கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🎻 

https://youtu.be/0lOM7F62jrc?si=6VsBOWFDz5mQh-FL

புதன், 16 ஜூலை, 2025

அந்த இருவரின் குணங்களும்...

எப்போதும் என் தவறுகளை

தன் நிர்மலமான 

புன்னகையால் 

குழந்தையும் தெய்வமும் 

மன்னித்து ஒருவர் பார்வையாலேயே 

அரவணைக்கிறார்...

இன்னொருவரோ 

தன் செயல்களாலே 

ஒரு குறுஞ்சிரிப்பை காட்டி

எனது காலை 

கட்டிக் கொள்கிறார்...

இந்த குணங்கள் இல்லாமல் தான் 

நான் பொழுது விடிந்து 

பொழுது மறையும் வரை 

எவர் எவருடனோ சண்டை போட்டு 

என் மனதை குப்பையாக்கி எதுவுமே 

நடக்காதது போல 

சென்று விடுகிறேன்...

மனமோ தான் போட்ட 

அன்றைய அந்த 

சண்டை குப்பைகளை 

வெளியேற்ற முடியாமல் 

அதனுள் அழுந்தி மூச்சடக்கி 

சாக கிடக்கும் போது 

நான் கொஞ்சம் என் உள்ளுணர்வால் 

அங்கே எட்டிப் பார்த்து 

மூர்ச்சையாகி கிடப்பதை 

அந்த சாலையில் 


போவோர் வருவோர் 

எல்லாம் 

வெறுமனே வேடிக்கை பார்த்து 

கலைந்து செல்வதை 

என்னை நேசிக்கும் காலம் 

கண்ணீர் வடித்து 

பெரும் மௌனத்தோடு 

என்னை 

அடக்கம் செய்கிறது...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:17/07/25/வியாழக்கிழமை.

செவ்வாய், 15 ஜூலை, 2025

அந்த குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்..


அந்த பேருந்து நிறுத்தத்தின் அரசு இயந்திரம் இயக்கிய காணொளி மூலமாக ஒலித்துக் கொண்டே இருந்தது அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் இனி வரும் சாதனை சார்ந்த விஷயங்கள் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டே இருந்தது அதிகமான சத்தத்தோடு...

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் சில பேர் அதை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள்..பல பேர் அங்கே அப்படி ஒரு காணொளி போய்க் கொண்டு இருக்கிறது என்கின்ற பிரஞ்ஞை கூட இல்லாமல் தமது ஊருக்கான பேருந்து வராதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மிகவும் சலிப்போடே...

என்னை போன்ற சொற்ப மனிதர்கள் மட்டுமே அதை கண்டும் காணாமல் அதில் லயித்தும் லயிக்காமல் போவோர் வருவோரை எல்லாம் சற்றே நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ...

விஞ்ஞானம் கையில் வந்து விட்ட காலத்தில் கூட இந்த பெரும்பாலும் கண்டுக் கொள்ளாத அல்லது கண்டுக்கொள்ள மனம் இல்லாத விசயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி அரசு இயந்திர விளம்பரங்களுக்காக செலவு செய்கிறார்களே என்கின்ற ஆதங்கம் என்னை போன்ற அரசியல் பார்வையாளர்களுக்கு இருந்தது...

ஆனால் அந்த ஆதங்கம் எந்தளவுக்கு எல்லோருக்கும் இருக்கிறது அப்படியே இருந்தாலும் அதனால் நமது வரிப் பணத்தை குறைக்க போகிறார்களா என்ன... ஒன்றும் ஆகப் போவதில்லை... நமக்கு கொஞ்ச நேரம் இரத்த அழுத்தம் அதிகமாவது தான் மிச்சமாக இருக்கும் இல்லையா இப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும் போது எனதருகே ஒரு பெண்மணி தோளில் சிறு குழந்தையை போட்டுக் கொண்டு அமர்ந்தார் அந்த பேருந்து நிறுத்தத்தில்... அந்த குழந்தைக்கு வாகாக பார்க்கும் திசையில் அந்த காணொளி இருந்தது... அதில் வரும் மனிதர்கள் மற்றும் ஆராவாரங்கள் அந்த குழந்தைக்கு ஏதோ ஒரு வேடிக்கை காட்டுவதாகவே இருந்தது.. இமைக் கொட்டாமல் தன் பசியை மறந்து அழுகையை மறந்து அந்த காணொளியை தன்னை மறந்து லயித்து பார்த்துக் கொண்டு இருந்தது அந்த தாயிற்கு சற்றே ஆறுதல் தந்ததில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை சற்றே மறந்தேன்..அதுவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு  இருந்த தனது குழந்தைக்கு ஏதோவொரு ஆறுதல் எது கொடுத்தது என்று சற்றே திரும்பி பார்த்து சற்றே சலிப்படைந்தாலும் சிறிது ஆறுதலும் அடைந்தார் என்பதை தவிர அந்த காணொளியை அங்கே பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தில் அந்த குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பை ரசித்துக்கொண்டே இருக்கும் போது நான் போகும் பேருந்து வந்தது... நான் சற்றே அந்த காணொளியை திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்கிறேன்...இனி இன்னும் அங்கே அநேக பேருக்கு அந்த காணொளி பலபேருக்கு மீண்டும் பலவிதமான உணர்வுகளை கடத்தினாலும் அந்த குழந்தையின் சிரிப்பின் சுவடில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்து சற்றே சிரிப்போடே பயணித்தேன் எனது ஊருக்கு செல்லும் பேருந்தில்.....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/25/புதன்

கிழமை.


மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...