ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 4 ஜூலை, 2023

அந்த தவிப்பின் சாயல்...

 


அந்த பொருளற்ற தவிப்பை

தவிர்த்து விட்டால்

தாங்கொணா துயரம் எனும்

நெடுங்கடலை நீந்தி 

கடந்து விடுவேன்

என்றேன் காலத்திடம்!

காலமோ தவிப்புகளை 

 மனமெனும் கடலில் நீ

தாலாட்டி அழகு பார்க்கும் வரை 

அது உன்னை விட்டு 

நீங்காது என்றது! 

நானும் அது சொன்னதை 

ஏற்றுக் கொண்டு 

அந்த தவிப்புகள் கதறி அழ அழ

என் மனக்கடலில் இருந்து 

வெளியேற்றினேன்!

கொஞ்ச நேரம் அந்த தவிப்பின்

சாயல் கறையாக என் மனவெளியில்!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...