ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 15 மே, 2024

இன்றைய தலையங்கம்

 

இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை நோகடிக்க வேண்டும் என்று எனக்குள் கேள்வி எழுகிறது...பாடகி சைந்தவி ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து தற்போது இணையதளத்தில் பெரும் விவாதமாக போய்க் கொண்டு இருக்கிறது... அவர்கள் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்தவர்கள்.. பதினோரு ஆண்டு காதல் வாழ்க்கையில் ஒரு அன்பு பரிசாக குழந்தையும் உள்ளது... பெரும் காதல் கொண்ட தம்பதிகள் ஏதோ அவர்களுக்குள் ஒத்து போகவில்லை தீர்க்கமாக ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்... இது முழுக்க முழுக்க அவர்கள் சொந்த பிரச்சினை... மேலும் அதீத காதல் கொண்டு நேசித்தவர் கள் பிரியக் கூடாது என்று இயற்கை விதிகள் ஏதும் இல்லையே... சொல்ல போனால் பெரும் காதல் கொண்ட தம்பதிகள் தான் மனதில் ஏதோ பாரத்தோடு பிரியவும் கூடும்... அது அவர்களின் பெரும் நேசம் கொண்ட இரு மனதிற்கு தெரிந்தால் போதும்... நீங்கள் ஏன் உங்கள் சொந்த கருத்துக்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்... ஒரு பிரபலமாக இருப்பது அவ்வளவு பெரிய கொடுமையான விசயமா என்று எண்ண தோன்றுகிறது... அவர்களின் காயத்திற்கு மருந்து கூட நீங்கள் போட வேண்டாம்... அந்த தம்பதிகளை நிம்மதியாக மன போராட்டம் இல்லாமல் வாழ விடுங்கள்..ஏதோ அவர்களின் நெருக்கத்திற்கு ஒரு ஆசுவாசமான இடைவெளி தேவைப்படுகிறது... அது அவர்கள் இருவருக்கும் தேவையாக இருக்கிறது... இதில் உங்களை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பது போல பதிவு போடாதீர்கள்...

உண்மையில் சைந்தவி யின் தேவாமிர்த குரலில் கண்களை மூடி மிதந்து செல்லுங்கள்... மற்ற படி அவர்கள் சொந்த வாழ்க்கையை பற்றி அவர்களும் அவர்களின் விதியும் தீர்மானிக்கும்...பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

#இன்றையதலையங்கம்.

#பாடகிசைந்தவி.

#ஜிவிபிரகாஷ்.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 12 மே, 2024

இரவு கவிதை 🍁

 


ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்

இருந்தாலும் 

என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில்

உங்களை மறந்து உறங்கி 

இருக்கிறீர்களா?

அவள் நிரந்தரமானவள்...

என்றும் நமது கவலைகளுக்கு 

கண்ணீருக்கு 

சூட்சும ஸ்பரிசத்தில் 

ஆறுதல் சொல்லி

நிச்சலனமான பேரமைதியோடு

உறக்கத்தை தருபவள்!

#இரவு கவிதை 🍁

முன்னிரவு பொழுது 10:00.

நாள்:12/05/24.

ஞாயிற்றுக்கிழமை.

இளைய வேணி கிருஷ்ணா.

வியாழன், 9 மே, 2024

பெரும் தவிப்போடு காத்திருக்கிறான் அவன்...


உள்ளேயும் வெளியேயும்

ஓடி ஓடி விளையாடும்

மூச்சுக் காற்றுக்கு தெரியாது

திக்கி திணறி தனது ஓட்டத்தில் இருந்து

விலகும் போது

எங்கே அருவமாக அலைந்து திரிந்துக் கொண்டு இருப்போம் என்று...

நிச்சயமாக எனக்கும் தெரியாது அதன் நிலை என்ன என்று...

ஆனால் இந்த ஆட வல்லவனுக்கு தெரியும்

இவள் ஒரு ஆழ்ந்த பித்து நிலையில் நம் மீது மோகம் கொண்டவள் என்று...

என் மூச்சு காற்று

ஓயும் போது இந்த உடல் கீழே வீழ்ந்து விடும் முன்

என்னை பற்றி பிடித்து

ஈர்த்து தனது

இதய கமலத்தில்

நோகாமல் இழுத்து இரண்டற கலந்துக் கொள்ளும் நொடிக்காக

அங்கே ஒருத்தன் ஏங்கி தவிக்கிறான்...

இங்கே வெறும் சம்சார கோட்டையை விட்டு விட்டு

விலகி வரும் நாளுக்காக

அவன் அங்கே பெரும் தவிப்போடு காத்திருக்கிறான்...

என் நிலைமையை இங்கே புரிந்துக் கொள்பவர்

அவனை தவிர வேறு யாராக இருக்கக்கூடும்???.

#ஆடவல்லானின்காதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

#ஆத்மவிசாரகவிதை.

#நாள்:09/05/24.

வியாழக்கிழமை.

முன்னிரவு 10:58.

பாடலும் பாடலின் வருடலும்

 


ஊரு சனம் தூங்கிடுச்சி ... பாடல் எஸ்.ஜானகியின் குரலில் கேட்கும் போது எப்போதும் அதை புதிதாக கேட்பது போலவே தோன்றும்.. அதுவும் இந்த இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்கும் போது அதன் மெல்லிய புல்லாங்குழல் இசை மற்றும் தேன் தடவிய குரலில் நமது செவிகளுக்கு மயிலிறகால் வருடுவது போல தோன்றும்... கண்களை மூடி கேட்கும் போது ஏதோவொரு அடர்ந்த காட்டில் நாம் மட்டும் உலாவுவது போல தோன்றும்..விரக தாபத்தில் திளைக்கும் அந்த நாயகியின் அருமையான உணர்வுகளை குரலில் கொண்டு வருவது எல்லாம் வேற லெவல்... இன்றும் என்றும் எப்போதும் இந்த பாடல் ஏதோவொரு மன கிறக்கத்தை நம்மை போன்ற இசை பிரியர்களுக்கு தந்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை 🎻🎻🎻🎻🎻🎻🍁🍁🍁🍁.

#பாடலும் #பாடலின் #வருடலும்.

#இளையவேணிகிருஷ்ணா.

முன்னிரவு 9:59.

நாள் 09/05/24.

வியாழக்கிழமை.

புதன், 8 மே, 2024

இரவு கவிதை 🍁


எத்தனையோ நட்சத்திர 

கூட்டங்களுக்கு

நடுவில் பிறையை தேடி அலையும்

 கண்களை போல...

அத்தனை சலசலப்பான உலகத்திலும்

பேரமைதியை தேடி அலையும்

என் மனதின் நிச்சலனமான

பயணத்தை எண்ணி

வியக்கிறேன் இங்கே...

இந்த இரவோ என்னோடு

கொஞ்சம் உரையாடக் கூடாதா

உன் மனம் வரும் வரை என்று

கெஞ்சுகிறது...

ஒரு தேடலும் ஊடலும்

இங்கே கலந்து என்னை 

திணறடிக்கிறது

இளம் தென்றல் என் நிலையை 

பார்த்து மெலிதாக தென்றல் எனும்

இசையை கொண்டு தாலாட்ட

நான் சற்றே கண் அயருகிறேன்...

#இரவு கவிதை 🍁.

நாள் 08/05/24.

புதன்கிழமை.

#முன்னிரவுப் பொழுது 10:15.

#இளையவேணிகிருஷ்ணா.

ஓவியத்தின் வண்ணத்தில் ஒரு தீராத காதல் 🍁

 இசையும் வாசிப்பும்

நம்மை வேறொரு உலகத்திற்கு

கடத்திச் செல்லும்...

என் உலகம் எப்போதும் பேரமைதியும் ஆனந்தமும் நிறைந்தது!

கீழேயுள்ள படத்தில் எனது கைவண்ணத்தில் பேரமைதியான உலகம் தெரிகிறதா நேயர்களே 🚴🍁🚣🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/05/24.

புதன்கிழமை.

முன்னிரவு பொழுது 9:56.



வெள்ளி, 3 மே, 2024

டிராவல்ல ஒரு காதல் திரை விமர்சனம்

 


திரை விமர்சனம்:-#டிராவல்ல #ஒரு #காதல் ரொம்ப நாட்களாக பயணத்தை பற்றிய ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்... அதற்கான வாய்ப்பு நேற்று அமைந்தது... ஆம் அந்த படம் டிராவல்ல ஒரு காதல்... படத்தின் பெயரே நிச்சயமாக இந்த படம் நமக்கு ஒரு பயண அனுபவத்தை கொடுக்கும் என்று நினைத்தேன்... ஆம் அந்த படம் என்னை ஏமாற்றவில்லை... இந்த கோடை கால இரவொன்றில் தென்றல் காற்று போல மனதை வருடி தோய்வில்லாமல் என்னையும் அவர்களோடு செலவில்லாமல் அழைத்து சென்றது...

கதை களம் இது தான்... அதாவது அது கொரணா இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்... திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் வீட்டில் வரன் தேடும் படலம் நடைபெறுகிறது... இருவருக்கும் அவ்வளவு எளிதாக வரன் அமையவில்லை அல்லது அவர்கள் எண்ணம் போல வரும் வரன் இல்லை...இரு வீட்டாரும் வரனின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு நாயகன் நாயகியை எப்படியாவது திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்... ஆம் சொல்ல மறந்து விட்டேன்.. கதாநாயகி #ராதிகா ஒரு வானொலி அறிவிப்பாளர்... கதாநாயகன் #கிருஷ்ணா பயணத்தில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு கணினி ஊழியர்... தான் கண்ட பயண அனுபவத்தை ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றம் செய்து வருபவர்.. அது ஒரு லாக் டவுன் காலம் என்பதால் கதாநாயகன் கிருஷ்ணாவின் தாயார் கதாநாயகி ராதிகாவை தன்னோடு காரில் அழைத்து வர சொல்கிறார்... மறுநாள் பேருந்து செயல்படாது என்பதால் கதாநாயகன் கிருஷ்ணா முதலில் இதற்கு மறுத்தாலும் தாயாரின் பேச்சை தட்ட முடியாமல் நாயகி ராதிகாவை தன்னோடு அழைத்து வருகிறார்...கதாநாயகியை அவரது சொந்த ஊரான கேரளாவில் விட்டு விட்டு தனது ஊர் செல்ல வேண்டும் இது தான் கதாநாயகனின் வேலை.. இருவரும் தனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் தமது இளமைக் கால பயணங்கள் இப்படி பயணம் முழுவதும் இயல்பாக உரையாடி நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை மறக்க செய்து விடுகிறார்கள்... பயணம் சிறப்பாக அமைந்து கதாநாயகியை எந்த சிரமமும் இல்லாமல் ஊரில் நமது கதாநாயகன் #கிருஷ்ணா வீட்டில் விட்டாரா அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா என்பது தான் கதையின் சாராம்சம்...அதை எல்லாவற்றையும் விட காட்சி அமைப்பு இயற்கையோடு இணைந்து எடுத்த ஒரு சினிமா மற்றும் பயணத்திற்கு இதமான பாடல்கள் என்று நம்மை வேறு உலகத்திற்கு கூட்டி சென்று விடுகிறார் #இயக்குநர் #கிருஷ்... நிச்சயமாக தற்போதைய சூழலில் தேவையான ஒரு படம் என்று சொல்லலாம்... அதுவும் நான் மிகவும் ரசித்து பார்த்தேன்... ஏனெனில் நான் ஒரு இயற்கையை ரசிக்கும் பெரும் பித்து பிடித்தவள்... மேலும் அந்த வானொலி அறிவிப்பாளர் கதாநாயகி என்பதால் மிகவும் ரசித்து பார்த்தேன்... படம் முடியும் போது ஏன் முடிந்தது... இன்னும் கொஞ்ச தூரம் நம்மை அவர்களோடு பயணத்தில் அழைத்துச் சென்று இருக்கலாமே என்கின்ற ஏக்கம் மட்டும் இருந்தது உண்மை...

இயற்கையை நேசிப்பவராக பயணத்தை நேசிப்பவராக அது எல்லாவற்றையும் விட நம்மோடு நம் இயல்பை 

ஒத்தவர்கள் பயணிப்பது எவ்வளவு இனிமை என்பது நிச்சயமாக உங்களுக்கு புரியும்...

நேரம் கிடைத்தால் இந்த திரைப்படத்தை பார்த்து ரசியுங்கள் நேயர்களே 🎻✨🎉🍁🦋.

#டிராவல்ல #ஒரு #காதல்.

#திரைவிமர்சனம்.

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...