ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 12 ஏப்ரல், 2025

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...


ஒரு அற்புதமான விடியல் எப்போதும் 

சில பறவைகளின் 

மெல்லிய சத்தத்துடன் தான் 

துவங்குகிறது...

இலேசான குளிர் காற்றில் 

முழு வாழ்வின் பேரானந்த 

சுவையையும் 

இங்கே நாம் உணர்ந்து விடும் 

தருணத்தில் தான் 

ஜென் நிலைக்கு நம்மையும் 

அறியாமல் கடத்தப்படுகிறோம்...

அதோ அங்கே கத்திக் கொண்டே 

பறக்கும் பறவையின் 

இறகின் நிழலில் நான் இளைப்பாற 

முடிகிறது ஏதோரு தொந்தரவும் 

இல்லாமல் 

இங்கே...

வாழ்வின் பேராசை பசியின் 

அகப்படாமல் பயணிக்கும் நான் 

எப்போதும் என்னை...

என்னை சுற்றி நடக்கும் 

இயற்கையின் 

அசைவை அசைப்போட்டு 

பயணிக்கும் விஷேச பயணி நான்...

காலை கவிதை 🎉.

நாள் 13/04/25/ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 7 ஏப்ரல், 2025

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...


காற்றில் தன் தேகத்திற்கு 

எந்த பிடிமானமும் கிடைக்காதா 

என்று 

தேடி அலைகிறது 

அந்த சிறிய கொடி...

வெகுநேரம் அந்த கொடியின் 

தேடலில் 

புரிந்துக் கொண்டது 

ஒன்றேயொன்று தான்...

அந்த காற்றின் சூட்சம தழுவலே 

தனக்கான பிடிமானம் என்று...

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம் 

கட்புலனாகாத

அந்த காற்றில் 

ஒளிந்துக் கொண்டு 

நமக்கு காட்டும் 

வேடிக்கையை இங்கே 

யார் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைகவிதை.

நேரம்:பகலவனின் உதய வேளையில்...

வெள்ளி, 28 மார்ச், 2025

கடனை தீர்த்து விட்ட நிம்மதியில்...


மனிதர்களின் அகங்காரம் 

அந்தோ எவ்வளவு கொடியது?

இங்கே தற்போது 

பூமியின் ஒரு மூலையில் 

ஏதும் அறியாத மக்களின் 

நாடித் துடிப்பு 

நின்று விட்டது...

அந்தி மயங்கும் வேளையில் 

பறவைகள் வருகைக்காக 

காத்திருந்த சாலை 

விரிவாக்கத்திற்காக 

சாலையோரம் வெட்டப்பட்ட 

மரத்தின் சாபமாக கூட 

இது இருக்கலாம்...

அல்லது அந்த பறவைகள் 

சிந்திய கண்ணீர் துளிகளின் 

வெப்பமாக கூட இருக்கலாம்...

யார் கண்டது இங்கே 

எதுவும் மிச்சம் இல்லாமல் 

கடனை தீர்த்து விட்ட நிம்மதியில் 

எந்தவித சலனமும் இல்லாமல் காலம் நம்மையும் 

ஒரு தீர்க்க பார்வை பார்த்துவிட்டு 

செல்வதில் 

நானும் கொஞ்சம் 

மிரண்டு தான் போனேன்...

நாளை காலத்தின் கணக்கில் 

பலியாவது நானாகவும் 

இருக்கலாம் என்று...

#மியான்மர்நிலநடுக்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 21 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏


வணக்கம் நேயர்களே 🙏 உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று கோர்டானும் அந்த குரங்கும் ஓஷோ சொன்ன கதை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏 🎉 🎻 https://youtu.be/Pq9Cdw0UFio?si=5DuoOr7Y9q4bmheX

நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை...


நான் வாழ்வை சலித்து நதிக் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!

நதி எப்போதும் சலித்துக் கொள்வதில்லை!

தன் தொடர் பயணத்தை நினைத்து என்று 

அங்கே கரை மீது யாரோ யாரிடமோ பேசி சிரித்துக் கொண்டு செல்கிறார்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/03/25/வெள்ளிக்கிழமை.

வியாழன், 20 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏


வணக்கம் நேயர்களே 🤝 🦅 💫.

இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று புத்தர் சொன்னது என்ன என்கின்ற தலைப்பில் ஓஷோ சொன்ன தத்துவ வார்த்தைகளை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎻 🎉.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🙏 🎻 🎉.https://youtu.be/FwiiEZlpwnY?si=NtrytM9n1fPxywJr

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இந்த வார படைப்பாளி: கவிதாயினி #மஹா #செல்வம்.

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 19 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏


வணக்கம் நேயர்களே 🙏 உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று சீடனின் கடிதமும் குருவின் செயலும் தலைப்பில் ஓஷோ சொன்ன கதை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎻 🎉. கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🤝 😊 🙏 

https://youtu.be/fBTkzuAOObE?si=vnw9JHZXgeUhdC9I

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.


இன்றைய இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு படைப்பாளி கவிதாயினி #மகாசெல்வம் அவர்களின் அழகான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது படைப்பாளிகளை மகிழ்வித்து மகிழும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎉❤️🎻🎻🎻.

நிகழ்ச்சி கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 18 மார்ச், 2025

கவிதை நேரம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் நிஷா ராஜேஷ் அவர்கள் கவிதை தொகுப்பு கேட்டு மகிழுங்கள் 🙏. நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎻 🎉.கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு ஊக்கம் அளியுங்கள்... https://youtu.be/Bna4fKc5mmA?si=VSRDAt2CKUzzfzIF

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

பங்கு பெறும் கவிதை தொகுப்பு வழங்கியவர் கவிதாயினி மஹாசெல்வம் அவர்கள் 🎉.

உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் 

இன்று இரவு இந்திய நேரம் #ஒன்பது மணி முதல் #பத்துமணி வரை 🎻.

இணைந்துக் கொண்டு இளைப்பாறலாம் இசையின் நிழலில் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் 🎉🎻🎉.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎉🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 17 மார்ச், 2025

கவிதை நேரம் நிகழ்ச்சி நேயர்களே 🎻🙏.


இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் ரா.சண்முகவள்ளி அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இணைந்துக் கொண்டு பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.https://youtu.be/6Mr2ELnhxQ0?si=upBnxHMpq2BblH1c

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻🎉

 வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.


இன்றைய இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் இரவு ஒன்பது மணிக்கு படைப்பாளி கவிதாயினி #மகாசெல்வம் அவர்களின் அழகான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

இது படைப்பாளிகளை மகிழ்வித்து மகிழும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎉❤️🎻🎻🎻.

நிகழ்ச்சி கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 13 மார்ச், 2025

இங்கே நான் இந்த பிரபஞ்சத்தில் வாழாவெட்டியாக...


அவர்கள் கேட்ட 

எத்தனையோ கேள்விகளுக்கு

என்னால் திணறாமல் 

பதில் சொல்ல முடிந்த என்னால் 

நீங்கள் எந்த ஊர் என்று 

திடீரென கேட்கும் கேள்விக்கு மட்டும் 

என்னால் பதில் சொல்ல முடியாமல் 

திகைத்து நிற்கிறேன்...

பின்பு சுதாரித்து 

நான் நிரந்தர வைகுண்டவாசி என்று 

சொல்லி முடிப்பதற்குள் 

அவர்கள் கலகலவென்று 

நகைக்கும் ஒலியில் 

அங்கே சாலையில் 

போவோர் வருவோர் 

எல்லாம் திரும்பி பார்த்து 

தம் பங்கிற்கு நகைத்து கடந்து 

செல்கிறார்கள்...

மீண்டும் என்னிடம் அதே கேள்வி 

கேட்கிறார்கள் நான் புரியாமல் 

பதில் சொல்வதாக நினைத்து...

மீண்டும் நான் நகைத்துக் கொண்டே

இங்கே நான் வாழாவெட்டியாக 

இந்த பிரபஞ்சத்தில் அலைகிறேன் 

என்று சொல்லி வைத்தேன்...

அவர்கள் சரிதான் என்று 

தம்மை நொந்துக் கொண்டு 

மீண்டும் அந்த கேள்வியை

கேட்பதை விட்டு விட்டு 

தங்களோடு இதுவரை 

உரையாடியதில் பெரும் மகிழ்வும் 

ஆனந்தமும் என்று சொல்லி 

விடைபெற்று வேகமாக 

நடக்கிறார்கள்...

நானோ அப்படி என்ன நான் 

அதிசயமாக 

சொல்லி விட்டேன் ...

நான் சொன்ன பதிலில் அவர்கள் 

திருப்தி இல்லாமல் போகிறார்கள் 

என்று யோசித்து நானும் 

அந்த சாலையில் இறங்கி 

நடக்கிறேன்...

என்னை பார்த்து ஓடோடி வந்து 

ஆர தழுவிக் கொண்டது 

அந்த காலம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/03/25/வியாழக்கிழமை.


காலத்தின் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வொன்றில்...


வாழ்நாள் முழுவதும் அத்தனை 

வாகனங்களிலும்

பயணித்து விட்டேன்...

ஒரு குதிரை பாய்ச்சல் பயணத்தின் 

அனுபவத்தை 

தந்து மிரள வைத்தது 

சில பல அந்த வாகனங்களின் 

பயணம்...

காலத்தின் வெள்ளத்தில் 

மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வொன்றில் 

நான் மூழ்கிக் கொண்டே 

போகிறேன் என்பதை 

வருவோர் போவோர் எல்லோரும் 

கிசுகிசுத்து 

கொஞ்சம் பயத்தோடேயே 

விலகி செல்கிறார்கள்...

அந்த வழியாக பறந்த 

பறவையின் கண்கள் மட்டும் 

எனை ஊடுருவி பார்த்து 

மெல்ல மெல்ல தரை இறங்குகிறது...

நான் என்றோவொரு நாள் 

அந்த பறவைக்கு வைத்த உணவின் 

கடனை தீர்க்க 

அது என் உயிரை காப்பாற்ற 

பலமணித்துளிகள் போராடி 

தன் சிறகுகளால் எனை மேலே 

கூட்டி வந்து கரை சேர்த்தது...

நான் சுற்றும் முற்றும் பார்க்கிறேன் 

கொஞ்சம் பயத்தோடே...

என் பயத்தை போக்கி 

அது தன் சிறகுகளால்

எனை தாங்கி விண்ணில் பறந்தது...

அந்த பயணத்தின் ருசியை 

இங்கே நானும் 

அந்த பறவையும் தவிர இங்கே 

பரந்து விரிந்த அந்த பிரபஞ்சம் 

மட்டுமே 

அறிந்து கொண்டது ...

ஜட வாகன சங்கமத்தில் எல்லாம் 

கிடைக்காத 

அந்த பயணத்தின் ருசியை 

இன்னும் எத்தனை யுகங்கள் 

கடந்தாலும் என்னோடு 

பயணிப்பதாக சபதம் 

எடுத்துக் கொண்டு 

அந்த பறவை என்னிடம் இருந்து 

விடைபெற்று கொண்டதில் 

என் கண்ணோரத்தில் துளிர்த்தது 

கண்ணீர் துளிகள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/03/25/வியாழக்கிழமை.

அந்தி மயங்கும் வேளையில்...

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிதாயினி #நிவேதிகாபொன்னுசாமி அவர்களின் மனதை மயக்கும் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉🎻.

இது இரவை ரசித்து பறக்கும் பறவை அல்லவா 🎻🐦🐦🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏🎻🎉.

அது படைப்பாளிகளின் படைப்புகளை நீங்கள் உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் 🎻🎉.

நன்றி 🎻🎉🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 12 மார்ச், 2025

கவிதை நேரம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏.

இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் கி.கவியரசன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏.

இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🙏 🎻 🎉.

https://youtu.be/VtJEqCSYMmk?si=9_7752DDaLDHMu_f

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இதில் இந்த வார #படைப்பாளி #கவிதாயினி #நிவேதிகாபொன்னுசாமி.

இவரின் அற்புதமான கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழ காத்திருங்கள் இன்னும் சில மணி நேரம் நேயர்களே 🙏🎻🎉.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் 🙏🎻🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

உணர்வற்ற மானிடர்களிடம் ஆறுதல் தேடி அலைகிறீர்கள்...

 

ஒரு இளைப்பாறுதல் தான் 

இங்கே எத்தனை வகை 

நிகழ்வுகள் நடந்தாலும் 

நமக்கான ஆறுதலாக 

உடன் இருந்து பயணிக்கிறது!

அந்த மரத்திற்கு மட்டும் என்ன 

வேறு வகையிலா இளைப்பாறுதல் 

கிடைத்து விடப் போகிறது?

கிளைகளை அசைத்து 

ஏதோ நம்மிடம் உள்ள குமுறலை 

கொட்டி விட்டு தானே சில நிமிடங்கள் 

அசைவை நிறுத்தி விட்டு 

எனது உள்ள கிடக்கையை 

தெரிந்துக் கொள்ள ஆவலாகிறது!

நானும் என் வயது முதிர்வை

கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு 

அதை கட்டியணைத்து 

ஆறுதல் சொல்லி 

விடை பெற மனமில்லாமல் 

அதனடியில் இளைப்பாறுகிறேன் 

இங்கே யாருக்கும் யாரும் 

துணையின்றி தவிப்பதாக 

ஏன் புலம்புகிறீர்கள் ...

இங்கே அநியாயக்காரர்களின் 

கண்ணில் படாமல் 

ஓராயிரம் மரங்கள் 

உங்களை அரவணைக்க 

மௌனமாக காத்திருக்கிறது...

நீங்களோ இங்கே உணர்வற்ற 

மானிடர்களின் மடியில் 

ஆறுதல் தேடி சோர்கிறீர்கள்?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/03/25/புதன்கிழமை.



திங்கள், 10 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🎉🙏


வணக்கம் நேயர்களே 🙏.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று ஓஷோ சொன்ன அற்புதமான கதை மூலம் நாம் தெளிவு பெறலாம்...கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

https://youtu.be/iuGfFHUdNWw?si=uSrkRMmr4E2YPhiz

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #கவிதாயினிநிவேதிகாபொன்னுசாமி அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இரவை இனிமையாக்கும் சுகமான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🎉.

இந்த வார படைப்பாளி கவிதாயினி #நிவேதிகாபொன்னுசாமி அவர்களின் கவிதை தொகுப்பு நிகழ்ச்சியில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு அவர்களை ஊக்குவித்து சிறப்பியுங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இது படைப்பாளிகளின் படைப்புகளை வானொலியில் வாசித்து அவர்களை மகிழ்வித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏.

இன்று #இரவு இந்திய நேரம்:9:00-10:00மணி.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வெள்ளி, 7 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று//ஜென் சொல்லும் அழகிய வாழ்வியல் 🎉

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் ஜென் சொல்லும் அற்புதமான வாழ்வியல் தத்துவம் சொல்லும் அற்புதமான கதை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎻 🦋 😍 https://youtu.be/0_VzU7nwbdE?si=uyyOQ-ZXZTcrQrVb

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இந்த வார படைப்பாளி கவிஞர் ரா.வெங்கடேஷ்வரன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இந்த வார படைப்பாளியின் நிறைவு நாள் படைப்புகளை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎻🎉.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻✨🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 6 மார்ச், 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை//அந்த அழகிய மாய பெண் உணர்த்தும் புத்தமத கதை


நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏. 

இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் அந்த அழகிய மாய பெண் உணர்த்தும் தத்துவம் ஓஷோ சொன்ன புத்த மத கதை சொல்லும் அற்புதமான வாழ்வின் ருசி கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎻 🦋 💫.

https://youtu.be/agPszOjUItU?si=doJx4IOP_9_vU_ey

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏🎻🎉.

இன்றைய உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் படைப்பாளி கவிஞர் #கா_வெங்கடேஷ்வரன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்பு இடம் பெறுவதோடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இது இரவை இனிமையாக்கும் சுகமான இசைப் பயணம் மற்றும் கவிதை பயணம் 🎻🎉🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 5 மார்ச், 2025

நான் ஒரு சிறைக்குள் அகப்படும் பறவையல்ல...

 


நான் எப்போதும் 

ஒரு சிறைக்குள் அகப்படும் 

பறவையல்ல!

இந்த அகண்ட பிரபஞ்சத்தில்

ஆக்ரோஷமாக தாவி

பறந்து ஆள பிறந்த பறவை நான்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/03/25/

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை//நம்பிக்கை தான் வாழ்க்கை

 


வணக்கம் நேயர்களே 🤝 🦅 💫.

வாழ்க்கையின் பல தருணங்களை எதிர் கொள்ள நம்பிக்கை தேவைப்படுகிறது அல்லவா..அப்படியான நம்பிக்கை வரிகளை இங்கே தெரிந்துக் கொண்டு பயணியுங்கள் நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 https://youtu.be/Z7-95G419es?si=B5qyYkJQdz1CzXQ1

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இன்றைய படைப்பாளி கவிஞர் #கா_வெங்கடேஷ்வரன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் உங்கள் உள்ளடக்கத்தை கொள்ளைக் கொள்ள வருகிறது... கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் 🎻🙏🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 3 மார்ச், 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்றைய இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #கா.#வெங்கடேஷ்வரன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இன்றைய வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 2 மார்ச், 2025

அந்த ஒரு மரத்தின் கிளையின் ஏக்கம் ...

 


அந்த இரவு பயணத்தில் 

அங்கே கடந்து செல்லும் 

அத்தனை வாகனங்களின் 

வெளிச்சத்தின் ஊடுருவலில் 

சற்றே லயித்து ரசிக்கும் வேளையில் 

அந்த ஒரு மரத்தின் கிளை மட்டும்

எனை தொட்டு ஏதோ சொல்ல வந்து 

சோர்ந்து கடந்து செல்கிறது...

ஏனோ அதை அவ்வளவு எளிதாக 

என்னால் கடந்து செல்ல 

இயலவில்லை...

ஒரு வேளை அதன் சுவாச பாதையை 

அந்த வெளிச்சத்தின் ஊடுருவல் 

கிழித்து இருக்கக்கூடும் அல்லது

அதன் தனிமையை 

அந்த வாகனத்தின் வெளிச்சம் 

திருடிக் கொள்வதை என்னிடம் 

சொல்ல வந்திருக்குமோ என்று 

அந்த மரத்தின் கிளை மட்டும் 

என்னோடு நீங்காத நினைவாக 

பயணித்து விடுகிறது 

நான் அறியாமலேயே ...

இங்கே என்னால் அதற்கு ஒன்றும் 

உதவி செய்ய இயலவில்லையே

என்கின்ற ஏக்கத்துடன் 

இறங்கிய போது அந்த சாலையின் 

ஓரத்தில் இருந்த 

மரத்தின் கிளையின் 

தீண்டலில் சுயநினைவுக்கு வந்து 

அந்த கிளையை வருடிக் கொடுத்து 

கடத்துகிறேன் எனது பேரன்பை 

அந்த பயணத்தில் என்னிடம் ஏதோ 

சொல்ல நினைத்த 

அந்த மரத்தின் கிளைக்கு ...

என்னால் இதை தவிர வேறு என்ன 

அதிகபட்சமாக செய்து விட முடியும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/03/25/ஞாயிற்றுக்கிழமை.





பலகோடி மதிப்புள்ள கட்டிடகாரனும் அந்த பிச்சைக்காரனின் பிரபஞ்ச பயணமும்...


அந்த பிச்சைக்காரரின் 

பிரபஞ்ச பயணத்தை 

தற்போது தான் கூர்ந்து கவனித்து 

பார்த்தேன்...

அத்தனை கோடி மதிப்புள்ள 

கட்டிடத்தின் அருகில் 

தனது பிச்சை பாத்திரம் யார் 

களவாடக் கூடும் என்கின்ற 

தைரியத்தில் நிம்மதியாக 

அங்கே இருந்த மரத்தின் அடியில் 

நிம்மதியாக உறங்கி கிடக்கிறான் 

சற்றும் சஞ்சலங்கள் ஏதுமின்றி...

அந்த எத்தனையோ கோடி மதிப்புள்ள 

கட்டிடத்தின் உள்ளே இருந்த 

மனிதனோ தனது கட்டிடத்தின் 

ஒரு முனை சுவரோரம் 

சென்று கொண்டிருந்த 

அந்த கறுப்பு பூனையின் 

கண்களின் ஒளியில் 

மிரண்டு உறக்கத்தை தொலைத்து 

விடியலில் எழுகிறான் சற்றே 

அயர்வோடே...

அங்கே வெளியே இருந்த 

பிச்சைக்காரனோ சூரிய ஒளி 

தனது உடலில் ஊடுருவி பரவ

எழுந்து அந்த இரவில் 

தொலையாத 

பிச்சை பாத்திரத்தை மெல்ல 

எடுத்துக் கொண்டு நகர்கிறான் 

புதிய உற்சாகத்துடன்...

இன்றைய இரவில் அவனுக்கு 

அடைக்கலம் தருவது எந்த இடம் 

என்று கவலைக் கொள்ளாமல்...

அந்த பல கோடி மதிப்புள்ள 

கட்டிடக்காரனோ இன்று இரவும் 

அந்த கறுப்பு பூனையின் 🐱 

மிரட்டும் விழிகளில் இருந்து 

தப்பிப்போமா என்று சற்றே 

எரிச்சலோடு அன்றைய கடமைகளை 

செய்ய ஆயத்தமாகும் போது 

அந்த பூனை அவனுக்கு குறுக்கும் 

நெடுக்குமாக கம்பீரமாக நடமாடி 

திரிந்ததை மட்டும் அவனால் 

ஜீரணிக்கவே முடியவில்லை...

என்ன செய்வது 

அந்த கட்டிடத்தின் மதிப்பு பற்றி 

அதுக்கு என்ன கவலை 

இருக்க போகிறது?

தற்போது அது தனது பசியை 

தினமும் தீர்க்கும் 

அந்த பிச்சைக்காரனின் 

பிச்சை பாத்திரம் தானே 

அந்த ஜீவனுக்கு 

மதிப்பற்ற செல்வம் ?

இங்கே இவற்றை எல்லாம் வேடிக்கை 

பார்த்துக் கொண்டே 

சற்றே சிரிப்போடு 

கடந்து செல்கிறது காலம் 

இங்கே அதை தவிர வேறு என்ன 

செய்ய இயலும் அதனால் 

நீங்களே சொல்லுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/02/25/ஞாயிற்றுக்கிழமை.





அந்த சாம்பலில் கசிகிறது ஒரு உயிர் துளியின் சுவாச காற்று...


அந்த சாம்பலில் கசிகிறது 

ஒரு உயிர் துளியின் சுவாச காற்று 

இங்கே ஜனிப்பது என்பது 

இயல்பான விதியாக 

நடந்து விடுகிறது என்றாலும் 

விடை பெறுதல் என்பதில் தான் 

மூச்சு முட்டி செய்வதறியாது 

திகைத்து திக்கற்ற நிலையில் 

இருக்கிறோம்...

நாம் அனைவரும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/03/25/ஞாயிற்றுக்கிழமை.



சனி, 1 மார்ச், 2025

என் பயணத்தின் மேலான அமிர்தம்...

 


எனது அமைதியான 

சூழ்ச்சியற்ற பயணத்தை 

அங்கே ஆயிரம் ஆயிரம் பேர் 

மூர்க்கத்தனமான பயணம் என்று 

சொல்லி திரிகிறார்கள்...

நானோ அதை விட ஆனந்தமான 

சூழ்ச்சியோடு அடுத்தவர் மனதை 

ஆழமாக இரத்தம் வழிய வழிய 

துன்புறுத்தி சிரித்து மகிழும் 

உங்கள் சம்சார பயணத்தை விட 

எதனோடும் ஒப்பிட முடியாத 

என் பயணத்தின்  

மேலான அமிர்தத்தை 

உங்களிடம் இருந்து 

பாதுகாத்துக் கொள்வதற்காக 

அந்த அமைதியான கடல் 

பயணத்தில் 

அதை எடுத்துக் கொண்டு 

பயணிக்கிறேன்...

எவரது சச்சரவான பேச்சையும் 

காதில் வாங்கிக் கொள்ள 

முடியாத அந்த அற்புதமான 

இடத்திற்கு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :02/03/25/ஞாயிற்றுக்கிழமை.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஒரு வழிப்போக்கனின் கனவு....

 

அந்த வழிப்போக்கனின் 

அத்தனை கனவுகளையும் 

மௌனமாக குறித்துக் கொள்கிறது 

அந்த நெடுஞ்சாலை...

அவன் கனவுகளில் ஒன்றிரண்டு 

ஏதேனும் சிதறி விழுவதை 

எவர் கால்களும் படாமல் 

காத்து கரை சேர்க்கிறது

ஒரு ஓரமாக அந்த காலம் ...

இங்கே பழுதடைந்த கனவுகளை 

தன் போக்கில் ஓடும் அந்த நதியில் 

கரைத்து விட்டு சலனமற்று 

பயணிக்கிறான் 

அந்த வழிப்போக்கன் ...

இங்கே அவன் போகும் சாலையோ 

பெரும் துயரத்தோடு அவனது 

கனவுகளை சுமந்த கால்களை 

வருடிக் கொடுத்து மௌனமாக 

தேம்பி அழுகிறது...

இங்கே எதையும் கண்டுக் கொள்ள 

மனமில்லாமல் அவன் போகிறான்

நெடுந்தூர பயணமாக...

எங்கே என்று மட்டும் 

அந்த வழிபோக்கனிடம் மட்டும் அல்ல 

அந்த சாலையிடம் கூட 

கேட்டு வைக்காதீர்கள்...

ஏனெனில் 

உறவுகளில் சில அபூர்வமானது..

அதில் அந்த நெடுஞ்சாலையும் 

அந்த வழிப்போக்கனின் உறவும் 

அதீத அபூர்வமானது...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள 

இலட்சோப இலட்சம் கோடி 

மனிதர்களின் உறவுகளையும் விட 

இவர்கள் உறவு மகா உத்தமமானது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/02/25/செவ்வாய் கிழமை.

நடுநிசி நெருங்கிய வேளையில்...




உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻


வணக்கம் நேயர்களே 🎻 🙏 🤝.

வாழ்வின் பிரச்சினைகள் இங்கே நம்மோடு பயணிப்பது ஏராளம் தற்போதைய சூழலில் இன்னும் இன்னும் அதிகம்...அவற்றை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை ஓஷோவின் கதையின் மூலம் உணர்ந்துக் கொள்ளலாம் நேயர்களே..கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.https://youtu.be/yTv_vCIVi1E?si=NySdejcFXkRxnY0y

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻


வணக்கம் நேயர்களே 🙏🎻🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் பிரபு வேலூர் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🎉.

இந்த நிகழ்ச்சி படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் வகையில் எடுத்துச் செல்கிறோம் நேயர்களே 🙏🎻🎉.

அந்த வகையில் இன்றைய படைப்பாளி #கவிஞர்பிரபுவேலூரில் இருந்து அவரது கவிதை தொகுப்பு கொடுத்து சிறப்பிக்கிறார்...

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள்... தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவியுங்கள் நேயர்களே நன்றி 🙏🎻🎉.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 24 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை:எது உண்மையான மகிழ்ச்சி 🎉

 


உண்மையான மகிழ்ச்சி என்பது எது என்று புரியாமல் தான் இங்கே பல வழிகளில் நாம் தேடி அலைகிறோம் அல்லவா நேயர்களே...அந்த உண்மையான மகிழ்ச்சி எதில் எங்கே உள்ளது என்று அற்புதமாக விளக்கி உள்ளார் ஓஷோ அவர்கள்..அவர் பார்வையில் என்ன சொல்ல வருகிறார் என்று கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏 😍.

https://youtu.be/giYQJJY2nAE?si=AndNnp_E8mB6kD2p

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏🎉🎻.


இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இணைகிறார் படைப்பாளி #கவிஞர்நிஷாராஜேஷ் அவர்கள்... 🎉

கவிஞர் நிஷா ராஜேஷ் அவர்கள் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு களியுங்கள் 🎉🎻.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

மாயையின் சுவாசத்தின் வீரியத்தை...


அந்த எத்தனையோ 

மாபெரும் சாதனையாளரின் உடலும் 

புகழ் மனிதனின் உடலும் 

தோற்றுக் கொண்டு தான் 

இருக்கிறது... 

அந்த மயானத்தில் எரியும் தணலில்!

இங்கே அந்த தணலோ 

எந்த மனிதனின் சாதனையையோ 

புகழையோ 

உரிமைக் கொண்டாடாமல் 

எந்தவித அகங்காரமும் இல்லாமல் 

அமைதியாக தின்று தீர்க்கிறது 

அந்த உடல் எனும் ரதத்தை...

இங்கே மாயையின் 

சுவாசத்தின் வீரியத்தை 

யாரும் கொல்ல இயலாமல் 

இங்கும் அங்கும் அலைந்து 

திரிகிறது...

நானோ இதை எல்லாம் 

வேடிக்கை பார்த்து 

பொழுதை போக்கும் 

சாதாரண மனுஷியாகின்றேன்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்23/02/25.

அந்தி மாலைப் பொழுதில்...

வலிகளையும் தாண்டி மௌனமாக நகர்கிறது வாழ்க்கை...


வலிகள் தான் பெரும்பாலான 

வாழ்க்கை பயணங்களை 

நிர்ணயிக்கின்றது!

அந்த வலிகளையும் தாண்டி 

மௌனமாக நகர்கிறது...

இங்கே வாழ்க்கை!

எதுவும் புரிந்துக் கொள்ள 

முடியாத சூழலில் சில...

எதையும் உணர முடியாத 

சூழலில் பல!

இங்கே எதுவாயினும் 

எனை தாக்காத துயரென்று 

இங்கே ஏதும் இல்லை!

வாழ்க்கை எனை மயான அமைதிக்கு 

மெல்ல மெல்ல எடுத்து 

செல்வதை மட்டும் 

உணர முடிகிறது...

இங்கே அந்த மாயையின் 

பிடியில் இருந்து 

நழுவி போக வழி தேடி அலையும்

சிறகொடிந்த பறவை நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/02/25.

அந்திமாலை நேரம்...

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻

 


இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் யார் உண்மையான ஞானி என்பதை ஓஷோ சொன்ன கதை மூலம் உணரலாம் நேயர்களே 🙏 கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🎻 🙏 🦋 

https://youtu.be/MaH8gf1Yi20?si=IMz3Ed8MJlDfyATr

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில்


இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் ஜேபி நீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

இந்த நிகழ்ச்சி படைப்பாளிகளின் படைப்புகளை சிறப்பிக்கும் விதமாக வார நாட்களில் தினமும் இந்திய நேரம் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை கேட்டு ரசிக்கலாம்... 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 20 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🎻

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று எல்லா ஆசையும் வீண் தான் -ஓஷோவின் பார்வையில் எப்படி என்று தெரிந்துக் கொள்ள கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

https://youtu.be/r25DEQeP5QU?si=lewWuLh5Fn6Dudch

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎉🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் ஜேபிநீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏🎉🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 19 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻

 


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று உங்கள் கிருஷ்ணா எப்.எம் சேனலில் பயத்தினால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லும் கதை நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 https://youtu.be/cLLTy3TZ-m4?si=83Xt0mAYqn806K8k

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் #ஜேபிநீக்கிழார் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சி//சிரிப்பு பிரார்த்தனையை விட மேலானது


வணக்கம் நேயர்களே 🙏.

இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் சிரிப்பு எப்படி பிரார்த்தனையை விட மேலானதாக இருக்க முடியும் என்பதை ஓஷோ தனது பாணியில் மிகவும் அற்புதமாக விளக்குகிறார் கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🦋 💫 https://youtu.be/XyBSuSLTR2Q?si=abEvvwphXe9-AGYB

அந்த ஓரிரு வார்த்தைகளில் தான்...


அந்த ஓரிரு வார்த்தைகளில் தான் 

எல்லாமே உயிர்ப்போடு 

பயணிக்கிறது...

அந்த ஓரிரு வார்த்தைகளில் தான் 

எல்லாமே முடிந்தும் விடுகிறது...

இங்கே வார்த்தைகளால் 

தீர்மானிக்க முடியாத 

நிகழ்வொன்றில் தான் 

நான் அகப்பட்டு கிடக்கிறேன்...

அந்த நிகழ்வும் சத்தமில்லாமல் 

எந்த சலனமும் இல்லாமல் 

பெரும் காதல் கொண்டு 

பயணிக்கிறது 

மிகவும் ரகசியமாக ...

அங்கே பலகோடி பேரை 

வார்த்தைகள் வதம் செய்து 

இளைப்பாறுகிறது...

இங்கே நானும் அந்த மௌனமும் 

அந்த வதம் செய்யப்பட்ட 

பலகோடி பேரை புதைப்பதற்காக

இடம் தேடி அலைகிறோம்...

அந்த வார்த்தைகளால் 

வதம் செய்யப்பட்ட மனிதர்களின் 

உடல்கள் மீது எங்கள் கால்கள் 

கூச கூச நடந்து ...

எங்கள் இருவரையும் 

அந்த தேவர்களின் பிள்ளைகள் 

என்று வர்ணிக்கிறது ஒரு அசரீரி 

நாங்களோ அதை செவி மடுத்தும்

பெருமைக் கொள்ள வழியில்லாமல் 

செய்வதறியாது திரிகிறோம் ...

கண்களில் நீர் வழிய வழிய 

இங்கே இறந்து கிடக்கும் 

இத்தனை கோடி பேருக்குமான 

இடத்தை தேடி அலைந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/02/25/செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில்...



திங்கள், 17 பிப்ரவரி, 2025

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நேயர்களே 🎻🙏


வணக்கம் நேயர்களே 🙏. உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் இன்று உங்கள் கிருஷ்ணா எப்.எம் சேனலில் எறும்பு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம் கதை...இந்த கதையை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 😊 🤝.https://youtu.be/F3dcowSLo5k?si=UdgrCXAnQtulichv

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி நேயர்களே 🎻

 


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #வழிப்போக்கன் அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎉🎻✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி 🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...

ஒரு அற்புதமான விடியல் எப்போதும்  சில பறவைகளின்  மெல்லிய சத்தத்துடன் தான்  துவங்குகிறது... இலேசான குளிர் காற்றில்  முழு வாழ்வின் பேரானந்த  சு...