ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஏப்ரல், 2025

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

 


நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் 

கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 

தெற்கு ஏர்பு இரங்கும் 

அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.


தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பாடல் எழுதியவர்:- பெருங்குன்றூர்கிழார். பாடல்https://youtu.be/6Md4pYjOjCY?si=yinS39I189kLUA8o

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

எனக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட விஷேச உலகம்...


இங்கே குடும்பத்தோடு 

ஏதோவொரு நிகழ்வில் 

பிணைத்துக் கொண்டு 

கொண்டாடும் சம்சாரிகளின்

ஒரு உலகம்...

அங்கே ஐபிஎல் ரசிப்பதை தவிர 

இங்கே வேறு ஒரு நிகழ்வும் 

பெரிதாக இல்லை என்று 

சிலாகித்து எழும் இளைஞர்கள் 

கூட்டத்தின் ஒரு உலகம்...

கடற்கரை மணற்வெளியில் 

தனக்கு பிடித்த வீடொன்றை 

கட்டி விட்டு அந்த வீட்டின் அருகே 

ஏதோவொரு மரத்தின் 

உடைந்த கிளையை 

மரமாக பாவித்து நட்டு 

வைத்து விட்டு தனக்கு பிடித்த 

ஒரு சிருஷ்டியை உருவாக்கி விட்ட 

பெருமிதத்தில் கை கொட்டி 

குதித்து அந்த அலையில் 

கால் நனைத்து 

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி

குதூகலித்து கொண்டாடும் 

அந்த சிறுமியின் உலகம்...

இப்படி ஆயிரம் ஆயிரம் உலகங்கள் 

நொடிதோறும் சிருஷ்டிக்கப்பட்டு 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லப்படுவதை

பிரமிப்போடு வேடிக்கை மட்டுமே 

பார்த்து விட்டு 

என்னால் சிருஷ்டிக்கப்பட்ட 

அந்த அதி அற்புதமான 

விசேஷமான உலகத்தை 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லாமல் 

பெரும் பிரயனத்தோடு 

மறைத்து வைக்கிறேன் நான்...

இங்கே எனது உலகத்தின் 

விசேட பார்வை ஒன்று 

அந்த காலத்தால் 

சிருஷ்டிக்கப்பட்டு 

களவாடப்படும் வரை 

அதை தினமும் 

நினைத்த போதெல்லாம் 

எடுத்து ரசித்து 

அதை என் சட்டை பைக்குள் 

பெருமிதத்தோடு 

சொருகி கொண்டு பயணிக்கும்

வாழ்க்கை பயணியாக ...

இல்லை இல்லை 

விசேஷ வாழ்க்கை பயணியாக

அந்த காலத்தின் சாலையில் 

இந்த பிரபஞ்சத்தின் வாசத்தை 

உணர்ந்து மெது மெதுவாக 

பயணிக்கிறேன் நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/04/25/திங்கட்கிழமை.




சனி, 12 ஏப்ரல், 2025

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...


ஒரு அற்புதமான விடியல் எப்போதும் 

சில பறவைகளின் 

மெல்லிய சத்தத்துடன் தான் 

துவங்குகிறது...

இலேசான குளிர் காற்றில் 

முழு வாழ்வின் பேரானந்த 

சுவையையும் 

இங்கே நாம் உணர்ந்து விடும் 

தருணத்தில் தான் 

ஜென் நிலைக்கு நம்மையும் 

அறியாமல் கடத்தப்படுகிறோம்...

அதோ அங்கே கத்திக் கொண்டே 

பறக்கும் பறவையின் 

இறகின் நிழலில் நான் இளைப்பாற 

முடிகிறது ஏதோரு தொந்தரவும் 

இல்லாமல் 

இங்கே...

வாழ்வின் பேராசை பசியின் 

அகப்படாமல் பயணிக்கும் நான் 

எப்போதும் என்னை...

என்னை சுற்றி நடக்கும் 

இயற்கையின் 

அசைவை அசைப்போட்டு 

பயணிக்கும் விஷேச பயணி நான்...

காலை கவிதை 🎉.

நாள் 13/04/25/ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 7 ஏப்ரல், 2025

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...


காற்றில் தன் தேகத்திற்கு 

எந்த பிடிமானமும் கிடைக்காதா 

என்று 

தேடி அலைகிறது 

அந்த சிறிய கொடி...

வெகுநேரம் அந்த கொடியின் 

தேடலில் 

புரிந்துக் கொண்டது 

ஒன்றேயொன்று தான்...

அந்த காற்றின் சூட்சம தழுவலே 

தனக்கான பிடிமானம் என்று...

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம் 

கட்புலனாகாத

அந்த காற்றில் 

ஒளிந்துக் கொண்டு 

நமக்கு காட்டும் 

வேடிக்கையை இங்கே 

யார் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைகவிதை.

நேரம்:பகலவனின் உதய வேளையில்...

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...