ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 9 ஜூலை, 2023

இரவு சிந்தனை ✨

 

இரவெனும் சூட்சுமங்கள்

இங்கே ஆயிரம் உயிர்களின் 

பயணத்திற்கு

சாட்சியாக இருக்கிறது!

இருளெனும் 

மாயையின் பிடியில்

உருவாவதாலோ என்னவோ

இறக்கும் வரை அந்த ஜீவன்

ஆத்ம ஞானத்தை பற்றி 

கவலைக் கொள்ளாமல்

விறகில் வெந்து மீண்டும் மீண்டும்

கருவறை பயணத்தை 

சலிப்பில்லாமல்

தொடர்கிறது!

என்னே மாயையின் வீரியம்!

இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...