ஒவ்வொரு கோப்பை தேநீர்
பருகி முடிக்கும் போதும்
அடியில் தங்கும்
சில துளி தேநீர் போல
ஒவ்வொரு நாள் முடியும்
அந்த பொழுதின் எச்சத்திலும்
உன் நினைவுகள்
படிமமாக படிந்து
உன் பிரிவின் துயரத்தை
எனக்கு ஞாபகப்படுத்துவதை
தவறுவது இல்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக