ஒவ்வொரு கோப்பை தேநீர்
பருகி முடிக்கும் போதும்
அடியில் தங்கும்
சில துளி தேநீர் போல
ஒவ்வொரு நாள் முடியும்
அந்த பொழுதின் எச்சத்திலும்
உன் நினைவுகள்
படிமமாக படிந்து
உன் பிரிவின் துயரத்தை
எனக்கு ஞாபகப்படுத்துவதை
தவறுவது இல்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக