ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 23 மார்ச், 2023

மெய் நிகரி

 


பொய்யென நினைக்க

முடியாது...

மெய் போல

நீ தழுவி சென்ற

அந்த தழுவலின் சுகந்தம்

இன்னும் என்னை விட்டு

நீங்கவில்லை...

மெய்யோ மெய் நிகரியோ

எனக்கு தெரியாது...

உன் தழுவலின் சுகந்தம்

என்னை விட்டு நீங்கும் போது

உணரக் கூடும்

அது மெய் நிகரி என்று...

அதுவரை இந்த குழப்பம் தீராது...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...