ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 மார்ச், 2023

கனவெனும் நீரோடையில்...

 


கனவெனும் நீரோடையில்

கனத்து ஓடுகிறது

ஏதேதோ நினைவுகள்...

அந்த நினைவுகள்

எந்த பாறையிலும் மோதாமல் 

காத்து நிற்கிறேன்...

என் இமைகளை 

கரைகளாக கொண்டு...

இரவெனும் தாயின் 

பேரன்பில் கரைகிறது

நான் நேசித்த இந்த நொடி

கூடவே சத்தம் இல்லாமல்

அந்த நினைவுகளும் தான்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...