ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 மார்ச், 2023

கனவெனும் நீரோடையில்...

 


கனவெனும் நீரோடையில்

கனத்து ஓடுகிறது

ஏதேதோ நினைவுகள்...

அந்த நினைவுகள்

எந்த பாறையிலும் மோதாமல் 

காத்து நிற்கிறேன்...

என் இமைகளை 

கரைகளாக கொண்டு...

இரவெனும் தாயின் 

பேரன்பில் கரைகிறது

நான் நேசித்த இந்த நொடி

கூடவே சத்தம் இல்லாமல்

அந்த நினைவுகளும் தான்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...