பக்கங்கள்

வெள்ளி, 10 மார்ச், 2023

ஒவ்வொரு நாளின் முடிவிலும்

 

ஒவ்வொரு கோப்பை தேநீர்

பருகி முடிக்கும் போதும்

அடியில் தங்கும்

சில துளி தேநீர் போல

ஒவ்வொரு நாள் முடியும்

அந்த பொழுதின் எச்சத்திலும்

உன் நினைவுகள் 

படிமமாக படிந்து 

உன் பிரிவின் துயரத்தை

எனக்கு ஞாபகப்படுத்துவதை

தவறுவது இல்லை...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக