ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 11 அக்டோபர், 2023

என்னை நானே விடுவித்துக் கொள்ள...

 


எனக்காக படைக்கப்பட்ட

அந்த இலக்கியத்திற்குள்

நான் ஒளிந்துக் கொண்டேன்...

இளைப்பாறுதலின் 

ஒரு தேவையை இங்கே

எனக்கு காலம் உணர்த்துகிறது...

ஆனால் நான் நானாக தான்

 அந்த இலக்கியத்தில் இருக்கிறேனா 

என்கின்ற

சந்தேகம் மட்டும் ஓய்ந்தபாடில்லை...

வரும் விமர்சனத்தில் 

ஆயிரம் ஆயிரம் பிம்பங்களாக 

நான் அவர்களுக்கு 

காட்சி அளிக்கும் போது

என்னை நானே 

விடுவித்துக் கொண்டு பயணிக்க 

பெரும் பிரயத்தனங்கள் 

தேவைப்படுகிறது இங்கே...

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை 🍁

நாள் 11/10/2023.

நேரம் மாலை 5:20.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...