ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 3 அக்டோபர், 2023

இந்த பிரபஞ்சத்திற்கான ஆறுதல்...

 


யாருமற்ற தனிமையில்

எனக்கான தேடல்

தொடங்குகிறது...

நான் முழு நிறைவை

அடைவதற்கு

எனக்கு கிடைத்த

தனிமை துளிகளை விட

தனிமை சாகரமே

பேரானந்தத்தை கொடுத்து

அந்த பேருணர்வில் கரைந்து

பேச்சற்ற பொழுதை

கழித்து உவகை கொள்ளும்

இந்த தருணத்தில்

நான் மெய்யுணர்வு 

இல்லாமல் இல்லை என்பதே

இந்த பிரபஞ்சத்திற்காக 

ஆறுதல் என்று கூட

சொல்லலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/10/2023.

நேரம் 7:00.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...