ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 ஏப்ரல், 2026

போர் நிறுத்தம்...

 




இத்தனை நாள் தூரமாக நின்று 

வேடிக்கை பார்த்த 

அமைதி 

இன்று எந்த தயக்கமும் 

இல்லாமல் என் கைகளில் 

வேகமாக ஓடி வந்து 

பேரன்பு கொண்டு 

என்னை அணைக்கிறது...


ஏதேதோ நிம்மதியை தரும் 

என்று இத்தனை நாள் 

தேடி அலைந்த 

நாட்களை பார்த்து 

நான் வெட்கம் அடைகிறேன்...


என் வீட்டின் முற்றத்தில் 

நான் நட்டு வைத்து 

பாசமாக நீருற்றி வளர்த்த 

மரத்தின் நிழலில் 

வெகு நாட்களுக்கு பிறகு 

என் ஆசுவாசத்தை 

கொஞ்சம் புதைத்துக் கொள்கிறேன்...


எங்கோ கேட்ட மரண ஓலங்களின் 

சத்தத்திற்கு விடுதலை 

கிடைத்த கொண்டாட்டத்தின் 

உதிரல்களாக அங்கே 

பூத்து குலுங்கும் வசந்தத்தின் 

வாசத்தை சுவாசிக்கிறேன்...


இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்த மனதின் 

ஸ்திர தன்மையை மட்டும் 

காலம் நொடிக்கொரு முறை 

நினைவூட்டிக் கொண்டே 

இருந்தால் போதும்...

இங்கே என் வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும் 

புதைந்து கிடக்கும் அமிர்தத்தை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

நான் கொஞ்சம் சுவைக்க....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/04/26.


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...

 


#இன்றைய #தலையங்கம்:-

எடப்பாடியார் பேசுவதை மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்... அவர் கொரணா சமயத்தை நான் சரியாக கையாளாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதற் கொண்டு எல்லோரும் காணாமல் போய் இருப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் சொன்னார்...

இப்போது மீண்டும் போய் கேட்டு பாருங்கள்...

யார் பேசுவதையும் திரித்து தயவுசெய்து பரப்பாதீர்கள்...

அது எந்த அரசியல் தலைவர் பேச்சாக இருந்தாலும்...

முதலில் தரம் தாழ்ந்து ஏன் பேச வேண்டும்?

தனிநபர் விமர்சனம் பொது மக்களாகிய வாக்காளர்களுக்கு தேவையா?

அவர்களுக்கு தேவை அவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் தவிர உங்களது தனி நபர் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அல்ல...

எடப்பாடியார் சசிகலா காலை வணங்கி அரசியலுக்கு வந்தார் என்று சொல்லும் போது அந்த நிகழ்வு அவர் மட்டுமா வணங்கினார்கள்...

மேலும் அந்த நிகழ்வு நடந்து தான் அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...

அவர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றியவர்...

அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்..

குறிப்பாக விவசாயிகளுக்கு..

அதற்காக அவரை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள்?

ஏன் தினகரன் எவ்வளவு பிரயத்தனம் செய்தும் கட்சியை கைப்பற்ற இயலவில்லை...

இங்கே அடிமட்டத்தில் இருந்து யார் ஒருவர் மக்களின் உணர்வுகளோடு பயணிக்கிறார்களோ அவர்கள் தான் மக்களின் தலைவராக வருவார்கள்...


ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள்..

இது வரை உங்களுக்கு இதை இதை எல்லாம் செய்தோம்... இனியும் செய்வோம் என்றும் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் மக்களிடையே நடந்த தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்து ஓட்டு கேளுங்கள்...

அதை விடுத்து எப்போதும் தனி நபரை துதி பாடியோ அல்லது அசிங்கப்படுத்தியோ ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்...

மக்களுக்காக தான் அரசியல் தவிர 

அரசியலுக்காக மக்கள் இல்லை...


ஒவ்வொரு விவசாயின் துயரம் எல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டே ஆய்வு செய்பவர்களுக்கு தெரியாது..

இந்தியா இயல்பிலேயே விவசாய நாடு... அதன் உயிரோட்டத்தை கெடுக்காத மனிதன் தான் தற்போதைய அரசியல் தலைவராக தேவை...

மற்றவை எல்லாம் பிறகு தான்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 

மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்...

#விவசாயிமரியாதை

#மாண்பபுமிகுவிவசாயி.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/04/26.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம்... எடப்பாடியார் வாக்கு..

 


#இன்றையதலையங்கம்

#ஒருவிவசாயியின்துயரம்:- விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வாக்கு கொடுத்து இருக்கிறார்...

இது ஒன்று போதும் அஇஅதிமுக வெற்றி பெற...

கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் விவசாயிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள்..

அதுவும் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது சகோதரர் இரவில் எந்த நேரம் என்று பாராமல் தூக்கத்தை தொலைத்து தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் அவரது மற்ற பணிகளை பார்த்து தந்தையின் உடல் நலன் மிகவும் மோசமான தருணத்தில் அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த குறித்த நாளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு இல்லத்திற்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று மும்முனை மின்சாரம் வந்து விட்டதா என்று பார்த்து விட்டு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்ச வயலில் இறங்கினால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது...

ஒரு மனிதன் விவசாயம் பார்ப்பதே மிகவும் மோசமான நிகழ்வாக இன்றைய காலகட்டத்தில் மாறி விட்டது... அதிலும் இயற்கை இடர்பாடுகள் தாண்டி இடுப் பொருள் விலையேற்றம் ஆள் பற்றாக்குறை விளைச்சல் கைக்கு வந்தவுடன் விலை இல்லை... இப்படி இத்யாதி இத்யாதி சொல்லி கொண்டே போகலாம்... இத்தனை விஷயங்கள் நடக்கிறது...

ஒழுங்கான மும்முனை மின்சாரம் கொடுக்க கூட மனமில்லை... மேடைக்கு மேடை எங்கள் ஆட்சியில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பேசுவதை மக்கள் சரியான கிறுக்குப் தரமான பேச்சாக தான் பார்க்கிறார்கள்..

ஆமாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...

வயலுக்கு நடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தண்ணீர் பாய்ச்ச போனால் அங்கே சாலையை ஆக்கிரமித்து போதை இளைஞர்கள்...

அவர்களை பார்த்து பயந்துக் கொண்டு தான் வயலுக்கு போக வேண்டும்...

நல்லா ஆட்சி நடத்தினீர்கள் ஐயா 🙏 

இதே இடத்தில் இதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்...

கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுத்தார்.. நீங்கள் அவரது மகனாக இருந்துகொண்டு விவசாயியை துயர கடலில் மூழ்கடித்தீர்கள்...

ஆட்சி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் இல்லை...

அதற்கு மிக பெரிய அனுபவம் மக்களோடு மக்களாக உண்மையான உணர்வோடு பழகி இருக்க வேண்டும்.. வெறும் போட்டோ சூட் நிச்சயமாக களத்தில் வெற்றி பெற உதவாது...

இங்கே அரசியல் பேச்சு கலையில் தேர்ந்தவர்களை மதித்த காலம் போய் செயலில் யார் மக்களின் உணர்வுகளோடு ஒட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

#ஒருவிவசாயியின்துயரம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/04/26.

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...