#இன்றைய #தலையங்கம்:-
எடப்பாடியார் பேசுவதை மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்... அவர் கொரணா சமயத்தை நான் சரியாக கையாளாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதற் கொண்டு எல்லோரும் காணாமல் போய் இருப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் சொன்னார்...
இப்போது மீண்டும் போய் கேட்டு பாருங்கள்...
யார் பேசுவதையும் திரித்து தயவுசெய்து பரப்பாதீர்கள்...
அது எந்த அரசியல் தலைவர் பேச்சாக இருந்தாலும்...
முதலில் தரம் தாழ்ந்து ஏன் பேச வேண்டும்?
தனிநபர் விமர்சனம் பொது மக்களாகிய வாக்காளர்களுக்கு தேவையா?
அவர்களுக்கு தேவை அவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் தவிர உங்களது தனி நபர் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அல்ல...
எடப்பாடியார் சசிகலா காலை வணங்கி அரசியலுக்கு வந்தார் என்று சொல்லும் போது அந்த நிகழ்வு அவர் மட்டுமா வணங்கினார்கள்...
மேலும் அந்த நிகழ்வு நடந்து தான் அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...
அவர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றியவர்...
அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்..
குறிப்பாக விவசாயிகளுக்கு..
அதற்காக அவரை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள்?
ஏன் தினகரன் எவ்வளவு பிரயத்தனம் செய்தும் கட்சியை கைப்பற்ற இயலவில்லை...
இங்கே அடிமட்டத்தில் இருந்து யார் ஒருவர் மக்களின் உணர்வுகளோடு பயணிக்கிறார்களோ அவர்கள் தான் மக்களின் தலைவராக வருவார்கள்...
ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள்..
இது வரை உங்களுக்கு இதை இதை எல்லாம் செய்தோம்... இனியும் செய்வோம் என்றும் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் மக்களிடையே நடந்த தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்து ஓட்டு கேளுங்கள்...
அதை விடுத்து எப்போதும் தனி நபரை துதி பாடியோ அல்லது அசிங்கப்படுத்தியோ ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்...
மக்களுக்காக தான் அரசியல் தவிர
அரசியலுக்காக மக்கள் இல்லை...
ஒவ்வொரு விவசாயின் துயரம் எல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டே ஆய்வு செய்பவர்களுக்கு தெரியாது..
இந்தியா இயல்பிலேயே விவசாய நாடு... அதன் உயிரோட்டத்தை கெடுக்காத மனிதன் தான் தற்போதைய அரசியல் தலைவராக தேவை...
மற்றவை எல்லாம் பிறகு தான்..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்...
#விவசாயிமரியாதை
#மாண்பபுமிகுவிவசாயி.
#இன்றையதலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:12/04/26.