ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


நான் எத்திசையில் 

பயணித்தாலும்

உன் நினைவுகள்

என்னோடு சேர்ந்து 

பயணிப்பதை

நிறுத்த இயலவில்லை!

#இரவுகவிதை.🦋

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 30/01/24.

செவ்வாய் கிழமை.

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


என் தேடலும்

உன் தேடலும் ஒன்று தான்...

எனினும் நீ தள்ளி நின்று

என்னை வதைப்பதில் மட்டும்

மாறுப்பட்டு 

இருப்பதில் தான்

நான் தோற்று விட்டேன்...

உன்னிடம்...

#இரவு கவிதை 🍁

நாள் 28/01/24.

ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 27 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


 சமுத்திரத்தின் 

வற்றாத ஈரம் போல

கசிந்துக் கொண்டே

இருக்கிறது...

என் உள் மனதில் 

உன் நினைவுகள்....

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்க்கையில் ஒன்றும்

வேண்டாம்...

இல்லை எல்லாம் வேண்டும்

என்பதற்கு இடையில் தான்

நாம் வாழ்ந்துக் கொண்டு 

இருக்கிறோம்

நாம் அமைதியாக 

பேரானந்தமாக வாழ 

இதில் எதை 

தேர்ந்தெடுக்கிறோம்

என்பதில் நமது வாழ்வின் 

தன்மை உள்ளது..

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 26/01/24.

வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணா இணையதள வானொலி


 நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🦋🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🤝.

இன்றைய படைப்பாளி கவிஞர் #ரேணுகாஸ்டாலின்.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻🙏🦋.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 25 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


பட்ட மரம் என்றாவது

துளிர்க்க கூடும் என்று

நம்பிக்கையோடு

கூட்டை மட்டும்

அந்த மரத்தில் விட்டு 

சென்ற பறவைகள்...

நம் தைரியத்தை சோதிக்கிறது..

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/01/24.

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🦋🎉.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🤝.

இன்றைய படைப்பாளி கவிஞர் #ரேணுகாஸ்டாலின்.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻🙏🦋.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 24 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இந்த பிரபஞ்சத்தின்

மொத்த ரசனையையும்

நான் வியந்து சிலிர்க்கும் போது

என் காதருகே ஒரு மின்மினி பூச்சி

கொஞ்சம் கிசுகிசுப்பாக 

கேட்டு வைக்கிறது

என்னை விடவா இந்த பிரபஞ்சம்

உன் கண்களுக்கு

ரசனையாகி விட்டது என்று....

#இரவு கவிதை 🍁

நாள் 24/01/24.

புதன்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻.

இதில் இன்று படைப்பாளி #ரேணுகாஸ்டாலின் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்கலாம் மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🦋.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்கள்

 ✨

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/


செவ்வாய், 23 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


அனைத்து கோலாகாலமும்

முடிந்த பிறகு

எஞ்சிய அமைதிக்கு

இந்த சிறு சிறு வண்ண 

விளக்குகளே

துணையாக அமைதியாக

உடன் இருக்கிறது!

#இரவு கவிதை 🍁

நாள் 23/01/24.

செவ்வாய் கிழமை.

#இளையவேணி கிருஷ்ணா.

திங்கள், 22 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இந்த பிரபஞ்சத்தின்

மாயா சொரூபத்தில் இருந்து

விடுபடுதல் மிக பெரிய வரம்!

விடுபடுதலின் விதியைத் தான்

தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்

மூச்சிரைக்க...

அதுவும் அகப்படாமல் 

வேடிக்கைக் காட்டி

நம்மை மகிழ்விப்பதாக நினைத்து

சோதிப்பது தான் 

மிகப் பெரிய கொடுமை..

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம்


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🦋🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻✨.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி ✨🎻✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 

🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


அந்த தேநீர் கோப்பையின்

பிடியில் சில நிமிடங்கள்

இருந்தது

உன் நினைவுகள் பற்றி

மறக்க போதுமானதாக 

இருந்தது!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/01/24.

ஞாயிற்றுக்கிழமை.

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- மதம் வேறு; ஆன்மீகம் வேறு; அரசியல் வேறு... இங்கே இதை புரிந்துக் கொண்டு பயணிப்பவர்கள் மிகவும் சொற்பம்... ஒரு ஆன்மீகவாதி மிக சிறந்த நாத்திக வாதியும் கூட... அதாவது ஒரு சித்தர் சிவலிங்கத்தின் மீது கால் வைத்து உறங்கினால் அவர் சித்தர் இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா அப்படி தான்...இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...அரைகுறை ஆன்மீகவாதிகள் தான் ஆன்மீகத்தை போட்டு குழப்புகிறார்கள்...

இங்கே ஒரு விசயத்தை நீங்கள் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்... ஒரு அரசியல்வாதி ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை... அவர் மக்கள் பணிகளில் சிறந்த பங்காற்றினால் வள்ளுவர் சொல்வது போல தெய்வத்துள் ஒருவராக இயல்பாகவே வைக்கப்படுவார்...இதை நாட்டு மக்கள் எப்போது புரிந்துக் கொள்வார்களோ அப்போது தான் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் செழித்து விளங்கும்...

#மக்கள்பணியேமகேசன்

#பணி.

#இன்றையதலையங்கம்.

#நாள்21/01/24.

#ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 20 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


இரவின் பசியை

கண்டுக் கொள்வார்

இங்கே எவரும் இல்லை...

தெரு விளக்கு மட்டும்

வெளிச்சத்தை உணவாக

இரவுக்கு அமைதியாக

ஊட்டி விட்டு

விடியும் வரை 

காவல் காக்கிறது....

#இரவு கவிதை 🍁

நாள் 20/01/24.

சனிக்கிழமை.

#இளையவேணி கிருஷ்ணா

வெள்ளி, 19 ஜனவரி, 2024

பிரிய மனமில்லாமல்...

 


அந்த அசாதாரண நிகழ்வொன்றில்

நானும் தனிமையும்

பேசாமல் பேசிக் கொள்கிறோம்...

எவ்வளவு நேரம் கணக்கில்லை...

காலம் தான் 

தொணதொணவென பேசி

எங்களை ஒரு நிகழ் கால 

உணர்வு நிலைக்கு

கொண்டு வந்தது...

நாங்கள் பிரிய மனமில்லாமல் 

பிரிந்து

செல்கிறோம்...

அங்கே ஒரு கூட்டம்

என்னை பார்த்து

ஹோவென சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறது...

ஏன் இவ்வளவு நேரம் என்று...

நானும் அமைதியும்

பேசாமல் பேசி மகிழ்ந்த ரகசியத்தை

சொல்ல தோன்றாமல்

ஒரு மெல்லிய சிரிப்புடன்

அவர்களோடு கலக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

எனக்கு இயல்பென இருப்பது....


 சாதாரணமாக வாழ

உனக்கென்ன கஷ்டம்

என்று என்னை சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறார்கள்...

எனக்கு அசாதாரணத்தை தவிர 

வேறு எப்படியும்

வாழ தெரியாது என்கிறேன் நான்..

இங்கே எனக்கு இயல்பென

இருப்பது அவர்களுக்கு

இயல்பில்லை...

இங்கே ஒரே நிகழ்வு

பல பேருக்கு பல வகைகளில் காட்சி

தருவது யாருடைய பிழை?

பதில் இங்கே வெறும் 

ஆழ்ந்த அமைதி மட்டுமே...

#இளையவேணிகிருஷ்ணா.

நனைக்கும் மழைத் துளி ஒன்றின் ஈரத்தில்...


 நனைக்கும் 

மழைத்துளியொன்றின் ஈரத்தில் 

உன் பேரன்பு மட்டுமே தனித்து 

என்னை

குளிர்விக்கிறது...

அந்த குளிரின் தன்மை

நீடித்து இருக்கக் கூடாதா என்று 

ஏங்கி தவிக்கும்

மனதை கொஞ்சம் 

அமைதிப்படுத்தி செல்கிறது

அந்த காற்றினூடே கலந்த

உன் நேசத்தின் வாசம்...

#இளையவேணிகிருஷ்ணா.

மூன்றாம் மனிதன்

 


மூன்றாம் மனிதனின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த பதிவை நீங்கள் கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் ✨🎻.

#மூன்றாம்மனிதன்.

கீழேயுள்ள லிங்கில் கேட்டு தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நேயர்களே 🎻✨🎉.

https://youtube.com/shorts/cW2jWEjTAYc?si=X9nO5d1KGLY7a9uL

இரவு கவிதை 🍁

 


சிறிதேனும்

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

ஆயத்தமாகும் போதும்

அலைந்து திரிகிறது

என் மன வெளியில்

உன் நினைவுகள்...

#இரவு கவிதை 🍁

நாள்:19/01/24.

வெள்ளிக்கிழமை

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 18 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


சில நிமிட பிரிவு தான்

என்றாலும்

பல யுக வலியை கொடுத்து

சென்று விடுகிறாய்

மிகவும் இயல்பான

புன்னகையுடன்...

நான் அந்த புன்னகையை

வைத்துக் கொண்டு

இன்னும் சில யுகங்கள்

கதியற்று திரிவதை தவிர

வேறு என்ன பரிசு

உன்னால் எனக்கு

கிடைத்து விட போகிறது???

இரவு கவிதை 🍁

நாள் 18/01/24.

வியாழக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 17 ஜனவரி, 2024

காலம் தானே பதில் சொல்ல வேண்டும்...


ஹமாஸை போல விடாமல்

உன் கண்களால் போர் 

தொடுக்கிறாய்...

நானோ இஸ்ரேலை போல 

பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...

வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து

எல்லாவற்றுக்கும்

அந்த காலம் தானே பதில் சொல்ல 

வேண்டும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁


அந்த முன்னிரவு நேரத்தில்

நீயும் மெல்ல மெல்ல

என் செவிகளில் அபஸ்வரம்

பாட நெருங்குகிறாய்...

நானோ உன்னை 

மற்றவர்கள் போல

இரக்கம் இல்லாமல் 

தள்ளி விட மனமற்று 

ரசித்துத் தொலைகிறேன்...

அபஸ்வரமாக இருந்தாலும்

உன் ரீங்காரமும் 

இசை தானே கொசுவே🎻😌.

#இரவு கவிதை 🍁

நாள் 17/01/24.

புதன்கிழமை.

நேரம் முன்னிரவு 8:30.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻✨.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள்

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 16 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


தனித்து சுற்றுசூழலை

மறந்து

இந்த பிரபஞ்சத்தின் ருசியை

அளவற்று ரசித்து ருசித்துக் கொண்டு

இருக்கும் போது

அந்த மரண தேவனும்

தன் கடமையை மறந்து

என்னை இந்த பிரபஞ்சத்தின்

உயிர் நாடியாக விட்டு

சென்று விட்டான்...

அங்கே தன் மேலதிகாரியின்

கோபத்திற்கு 

என்ன பதில் சொல்லி தப்பிப்பான்

என்று இங்கே யாரேனும் 

தெரிந்து இருந்தால் கொஞ்சம் 

சொல்லுங்கள்!

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 15 ஜனவரி, 2024

இரவு சிந்தனை ✨

 


உங்களை துரத்துவது ஒன்றேயொன்று தான்.. அது எந்த நிகழ்விலும் திருப்தி இல்லாமல் இருப்பது.. அதனால் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்..

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

 


இங்கே தேவை

ஒரு இளைப்பாறுதல்!

அதை விட தேவை

கொஞ்சம் தனிமையோடு

கனிந்து களித்திருத்தல்...

எப்போதும்

ஒரு ஊடலும் இல்லாத 

ஒரு ஜென் நிலையில் 

சுகித்திருத்தலே

என் வாழ்வின் அடையாளம்...

இதைத் தவிர வேறு எந்த வித

தேவையோ சலசலப்போ

இல்லாத நதியின் பயணமிது

என் வாழ்வின் ஒரு பெரும் பயணமான

துயரமற்ற பயணமது....

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வானத்தில் சிறகடித்து

பறந்து செல்லும்

அந்த பறவையின் சிறகசைவில்

என் வாழ்வின் பெரும் சுமையை

சுகமாக உணர்ந்து 

என் மனமும்

சிறகின்றி பறக்கிறது..

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 13 ஜனவரி, 2024

நிகழ்வு பறைசாற்றும் உண்மை

 


நேற்று அரங்கன் கோயிலுக்கு சென்று இருந்தேன்... ஸ்வாமி தரிசனம் செய்வதற்காக அல்ல.. ஒரு பணி நிமித்தமாக நேற்று திருச்சி செல்ல வேண்டி இருந்தது.. நானும் என் கணவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று இருந்தோம்.. பணிகள் கிட்டத்தட்ட மதியம் நெருங்கும் வேளையில் முடிந்தது.. சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னிடம் என் கணவர் சொன்னார்.. சரி அதனால் என்ன திருவரங்கம் கோயில் மண்டபத்தில் சிறிது நேரம் சயனம் கொண்டு எழுங்கள் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றேன் கோயிலுக்கு... கோயிலுக்குள் செல்லும் போதே அங்கே வந்து நான் பெருமாளை பார்த்து விட்டு தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யக் கூடாது என்று சொல்லி தான் அழைத்துச் சென்றார்.. சரி எனக்கும் பெருமாளை பார்க்கும் எண்ணம் இல்லை என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்தேன்.. கையில் வைத்திருந்த பையில் புதிதாக வாங்கிய காலணி அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது..உள்ளே நுழைவதற்கு முன்னர் எனது கணவர் காலணி எல்லாம் எடுத்து சென்றால் உள்ளே விட மாட்டார்கள் இளையவேணி என்றார்...அட வாங்க அதெல்லாம் விடுவார்கள் என்று சொல்லி போனால் அங்கே பரிசோதகர் உங்கள் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.. நான் செருப்பு இருக்கிறது என்று சொன்னேன்.. அதெல்லாம் உள்ளே அனுமதி இல்லை அம்மா..அதை அங்கே வெளியே காலணி பாதுகாக்கும் இடத்தில் வைத்து விட்டு வாருங்கள் என்றார்..நானோ இது புதிதாக வாங்கிய காலணி தானே இதை ஏன் அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்றேன்..புதிதோ பழையதோ செருப்பு செருப்பு தானே அம்மா..அதை வெளியே வைத்து விட்டு வாருங்கள் என்றார்.. என் கணவரோ என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீ வா போகலாம்... இளைப்பாறிய வரை போதும் என்று வெளியே வந்து வண்டியை அதி வேகமாக ஓட்டி இல்லம் வந்து சேர்ந்து தான் ஓய்வெடுத்தார்...இதை எதற்காக சொல்ல வருகிறேன் என்றால்.........

வேண்டாம் உங்கள் கணிப்பிற்கே அதை விட்டு விடுகிறேன்...

இதில் அரசியல் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல 😌😌😌.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/01/24.

#நிகழ்வில்ஒருநிதர்சனம்.

இரவு கவிதை 🍁


வாழ்வின் சுவாரஸ்யமான 

பகுதிகளில்

ஒரு சிறு துளி 

அனுபவித்துக் கொண்டு

இருக்கும் போதே

காலம் இந்த பிரபஞ்சத்தை விட்டு

என்னை கடத்திக் கொண்டு

நகர்வதை பாவம் அந்த பிரபஞ்சம்

வேடிக்கை மட்டுமே பார்க்க

முடிகிறது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/01/24.

சனிக்கிழமை.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


தேசம் விட்டு தேசம்

எங்கோ வாழ்கிறார்கள்

ஒரு சிறு துளி ஞாபகத்தில்

தாயகத்தின் நினைவுகள் பற்றிய

தாபம் தீர்ந்து விட வேண்டும் 

என்கின்ற பேராசையோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 11 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்வென்றால் சிறு அர்த்தம்

ஏதேனும் இருக்க வேண்டும் என்பது

என்னை பொறுத்தவரை

நான் அதை மதிப்பதே இல்லை...

நான் வாழ்ந்து முடித்த பின்

என் வாழ்வின் பயணத்தில்

என்ன தான் சுவாரஸ்யமான விசயங்கள்

இருந்தது என்று தேடி 

திரிபவர்களுக்காக

நான் ஒரு துளி சிந்தி அவர்கள்

சுவாரஸ்யத்தை கூட்டிச் செல்வதில் தான்

அலாதி சுகம் எனக்கு!

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு கவிதை 🍁

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🙏🎻✨

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 10 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


யாரோ ஒருவரின் 

தேடலில் தான்

இங்கே 

சில பேரின் சுவாசம்

நிம்மதியாக இயங்குகிறது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் ஒன்பது மணிக்கு (9:00pm-10:00pm)இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் #சரக்கொன்றை #நிழற்சாலை என்கின்ற புத்தகத்தை எழுதிய படைப்பாளி ஹைகூ கவிஞர் #ஷர்ஜிலா பர்வீன் யாகூப் அவர்களின் அருமையான ஹைக்கூ கவிதைகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻✨.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 9 ஜனவரி, 2024

இசையோடு ஒரு பயணம் 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் ஒன்பது மணிக்கு (9:00pm-10:00pm)இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் #சரக்கொன்றை #நிழற்சாலை என்கின்ற புத்தகத்தை எழுதிய படைப்பாளி ஹைகூ கவிஞர் #ஷர்ஜிலா பர்வீன் யாகூப் அவர்களின் அருமையான ஹைக்கூ கவிதைகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🙏🎻✨.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 8 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


அரசியல் எனும்

முட்டாள்களின் கூடாரங்களில்

இளைப்பாறும் பறவைகள்

தேசத்தின் மக்கள்!

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/01/24.

திங்கட்கிழமை.

இசையோடு ஒரு பயணம் 🎻

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏✨.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🙏.

இது படைப்பாளிகளின் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சி ✨🎻✨.

அந்த வகையில் இன்றைய படைப்பாளி கவிஞர் #ஷர்ஜிலாபர்வீன்யாகூப் அவர்களின் படைப்பு நூலான சரக்கொன்றை நிழற்சாலை என்கின்ற படைப்பில் இருந்து ✨🎉.

வாருங்கள் சரக்கொன்றை நிழலில் கொஞ்சம் இளைப்பாறலாம் ✨🎉🦋🎻.

#krishnafm.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

வாழ்வின் இரகசியம் 🦋

 


எல்லாமே காட்சிக்குள்

அடங்கி விடுமா தெரியாது...

காட்சிக்கு அப்பாற்பட்ட 

ஏதோவொன்று

நம் மனக் கண்ணில்

விரிவடைந்து நம்மை

ஆச்சரியப்படுத்தும் ஒன்று தான்

நம் வாழ்வின் உயிரோட்டமான

பயணத்திற்கு உயிர் நாடி என்று

நான் சொல்வேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/01/24.

அந்தி மாலை பொழுது 5:00.

சனி, 6 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


ஒரு சிறு இளைப்பாறுதலின்

எனது நிம்மதியான நொடிகளை

இங்கே அளவற்ற சொத்துகளை

சொந்தம் கொண்டாடி

தீர்ப்பவர்களுக்கு

இந்த பிரபஞ்சம் கொடுத்ததாக

எனக்கு நினைவில்லை!

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு கவிதை 🍁.

நாள்:06/01/24.

சனிக்கிழமை

நேரம் முன்னிரவு 9:30.

வெள்ளி, 5 ஜனவரி, 2024

இசையோடு ஒரு பயணம்

 


வணக்கம் நேயர்களே 🙏🤝🎻.

இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் ✨.

இன்றைய படைப்பாளி கவிஞர் ச.ராஜ்குமார் அவர்கள் ✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

இரவு கவிதை 🍁

 


ஒரு தேநீர் கோப்பை

என் வாழ்வின் 

மீளா துயரத்தை

ஆவியாக்கி

அதன் சுவையை மட்டும்

ஆறுதலாக எனக்கு பருக

கொடுப்பதில்

இன்னொரு ஜென்மத்தின்

ஜனனத்தை உணர்ந்தேன்...

நாள் 05/01/24.

அந்தி மாலை நேரம் 6:20.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 4 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இரவெனும் உணவை

மெது மெதுவாக சுவைத்து

உண்ணும் போது

அங்கே தெரு நாய்களின் கதறலில்

உணவின் சுவை குன்றியது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏

இன்று இரவு இந்திய நேரம்(இரவு9:00-10:00) ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இதில் #கவிஞர் ச.ராஜ்குமார் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி ✨🎉🦋🎻.

கீழேயுள்ள வானொலி லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் மகிழலாம் வாருங்கள் 🙏✨🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 3 ஜனவரி, 2024

பெரும் தாகத்தோடு...

 


பெரும் தாகங்களோடு தான்

நான் அந்த பயணத்தை

தொடர்ந்தேன்...

எந்த வஸ்துவின் துணையே

இல்லாமல் என் தாகம்

கரைந்தது அந்த பயணத்தில்...

என் தாகம் கரைந்து விழுந்த

அந்த பயணத்தின் பாதையை தான்

தற்போது தேடி அலைகிறேன்...

என் பெரும் தாகம் தீர்ந்த பிறகும்

இது என்ன விசித்திரமான பயணம்

என்று அங்கே கேட்பவர்களுக்கு

எவரேனும் தெரிந்தால்

பதில் சொல்லுங்களேன்...

நாள்:04/01/24.

வியாழக்கிழமை.

நேரம் அதிகாலை 5:52.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு (இரவு9:00-10:00)உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் #எழுத்தாளர் ச.ராஜ்குமார் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு மகிழலாம் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்கள் ✨🎉🦋🙏.


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 2 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


அந்தி சாயும் நேரத்தில்

விடியும் வரை இளைப்பாற

ஒரு கிளை தேடி

அலையும் பறவையின் வலியை

இங்கே அந்த உயிரற்ற கட்டிடங்கள்

அறியக் கூடும்...

அந்த வானில் சிறிது நேரம் தோன்றி

மறையும் பிறை நிலவும்

அறியக் கூடும்...

அறிந்தும் பயன் இல்லை

அதன் உயிர் எங்கோ தொலைவில்

காய்ந்த மரத்தில் பயத்தில் 

நடுங்கி கீச்சிட்டு

மெல்லிய குரலில்

தன் குஞ்சு பறவையிடம்

கொண்டு சேர்ப்பார்கள்

யார் இங்கே?

எல்லோரும் உயிரோடு வெறும் மூச்சை

இழுத்து விட்டு 

ஓடிக் கொண்டு இருக்கும்

ஜடங்களாகிய மனிதர்கள் ஆயிற்றே...

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

 


இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் ஒன்பது மணிக்கு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻🙏✨.

இது படைப்பாளிகளின் படைப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி... ✨.

கீழேயுள்ள கமெண்ட்டில் வானொலி ஒலிபரப்பு சேவை லிங்க் ✨🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...