ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கடிதத்தில் மேலும் பிணைக்கப்பட்ட நட்பு..

 


யாரோ யாருக்கோ எழுதிய கடிதங்கள் கையில் கிடைத்து வாசிக்கும் போது உணர்வுப்பூர்வமாக மற்றும் சுவாரஸ்யமான வாசிப்பாக இருக்கிறது... கடிதங்களில் உள்ள வார்த்தைகள் அளவிட முடியாத ஆற்றுப்படுத்துதலை தந்து இருக்கிறது... கடிதங்கள் எழுதி விட்டு அது கிடைத்து விட்டதாக ஒரு கடிதம் நமக்கு வந்து சேர்ந்து சில பல நலம் விசாரிப்புகள் மற்றும் அங்கே நடந்த நிகழ்வுகளை கடிதத்ததின் வழியே வாசிக்கும் போது காட்சி படம் விரிகிறது நம்மிடையே.. சில நேரங்களில் நமக்கு வந்து சேர்ந்த கடிதங்களை எத்தனை முறை வாசித்து இருப்போம் என்று நமக்கே கணக்கு தெரியாது..

கடிதங்கள் நமக்கு ஆயிரம் ஆயிரம் உறவுகளை நிலைத்து இருக்க வைத்து இருக்கிறது.. அந்த வகையில் எனது கல்லூரி காலத்தில் எனது சகோதரி சத்திய பாமா எழுதிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது.. அவர் சென்னையில் வசித்து என்னோடு ஒரே கல்லூரியில் பயின்றவர்.. அவர் என்னை விட மூத்தவர்.. அவர் எம் சி ஏ மாணவி.. நானும் அவரும் தோழிகள்.. எங்கள் நட்பு மிகவும் பலமாக நெடுங்காலம் இருந்தது.. இன்றும் இருக்கிறது...

ஆனால் தொடர்பு தான் இல்லை..அவரை இங்கே முகநூலில் இன்ஸ்டாவில் டுவிட்டரில்...இப்படி தேடி தேடி தொலைகிறேன்...என்றோ ஒரு நாள் கிடைப்பார் என்று..எங்கள் நட்பை மேலும் மேலும் பிணைப்பாக்கியது எங்களது கடித போக்குவரத்து தான்.. ஆனால் அவர் திருமண பந்தத்தில் இணைந்து அமெரிக்கா சென்ற பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டோம்.. இப்போதும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.. அந்த மாதிரியான சிறந்த நட்பு என் மனதில் இருந்து எப்போதும் நீங்காது.. தற்போதும் என்னோடு அதற்கு நிகராக பயணம் செய்யும் நட்புகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால் கடித தொடர்புக் கொண்ட ஆழ்ந்த புரிதல் உள்ள ஒரே நட்பு அவரை இங்கே இந்த உலக கடித நாளில் நினைவு கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்...

#உலககடிததினம்.

#நீங்காதநினைவுகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 30 ஆகஸ்ட், 2023

அவளோடு ஒரு பயணம்

 


அவளோடு ஓர் பயணம்(7):-

நான் இன்று கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தேன். கடந்த சில நாட்களாக இருந்த வருத்தம் இல்லை இது.புது ஆங்கில வருட பிறப்பை நண்பர்களோடு வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்கின்ற வருத்தம் தான் அது. என்ன செய்வது நதி சொல்வது போல எல்லாம் விதி விளையாடும் விளையாட்டில் நாம் கைபொம்மைகளோ..என்று தத்துவம் எனது மனதை சாந்தமாக்கியது.இந்த தத்துவம் கூட நமக்கு நிறைய விசயங்களுக்கு வடிகால் போலும். இதனால் தான் எல்லோரும் தத்துவத்தின் பின்னால் ஓடுகிறார்களோ என்று நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டேன்..

  அப்போது நதியிடம் இருந்து அழைப்பு வந்தது அலைபேசியில்.நான் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.அலைபேசியை எடுத்து ஹலோ சொன்னேன்.கிருஷ் என்ன வருத்தம்.. குரல் கம்முகிறது...என்றாள்.

  அதெல்லாம் ஒன்றும் இல்லை நதி.கொஞ்சம் வெளியே போக முடியாமல் இருப்பதற்கான வருத்தம் தான்.வேறு ஒன்றும் இல்லை என்றேன்.

    சரி இங்கே வா ..என்றாள்..நானோ அங்கே செல்ல கொஞ்சம் தயக்கம் காட்டினேன். ஏனெனில் ஏதேதோ தத்துவம் பேசி நம்மை நோகடிப்பாளே என்று.. ஆனால் ஒருவரும் இல்லாமல் இருப்பதற்கு நதி வீட்டுக்கு செல்வது நல்லது என்று தோன்றியது எனக்கு. சரி வருகிறேன் என்றான்.. உடனே கிளம்பினேன்..தனது வண்டியை எடுத்து கொண்டு..

சரியாக பதினைந்து நிமிடத்தில் நதி வீட்டில் இருந்தேன்.. காலிங் பெல்லை அழுத்த போனேன். ஆனால் கதவு லேசாக திறந்து இருந்ததை பார்த்து உள்ளே நுழைந்தேன்.

  அங்கே நதி சோபாவில் அமர்ந்து தனது டைரியில் எதையோ எழுதி கொண்டு இருந்தாள்.. லேசாக தலை நிமிர்ந்து சிறு புன்னகை பூத்து வா கிருஷ்.. என்று தலையசைத்து கூப்பிட்டாள்.நான் நதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என்ன நதி இன்று நடந்ததை எழுதி இந்த வருடத்தின் இறுதி பக்கத்தை நிறைவு செய்கிறாயா என்றேன். சிரித்தவாறே..😊

நதியோ இல்லை கிருஷ்.. இந்த வருடத்தின் நினைவுகளை நிரப்பி அதை மகிழ்விக்கிறேன் என்றாள்.😊கொண்டே.

 சரி தான்..வார்த்தை ஜாலத்தில் நீ நாட்குறிப்பையே அதிரடிக்கிறாய்.என்றேன்.

 கொஞ்ச நேரம் இரு..இந்த நாட்குறிப்பை எழுதி விட்டு வருகிறேன். அதுவரை இந்த ஜே.கே..புத்தகத்தை படி என்று எனது கையில் ஒரு புத்தகத்தை திணித்து விட்டு எழுதினாள்..

நான் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.. சில பக்கங்களில் கண்களை ஓட விட்டேன்.. அதில் உள்ள கிருஷ்ணமூர்த்தி ஐயா படம் ஏனோ என்னை பார்த்து சிரித்தது..எனக்கும் சிரிப்பு வந்தது.

 நதி தனது நாட்குறிப்பை எழுதி விட்டு சமையலறை நோக்கி சென்றாள்.இருவரும் பருக இஞ்சி தேநீர் கொண்டு வந்து எனதருகே அமர்ந்தாள்.

நான் அவளிடம் இந்த வருடத்தில் நீ எதை முக்கியமாக செய்தாய் நதி..சென்ற வருடத்தில் நீ ஏதேனும் தீர்மானம் எடுத்து அதை நிறைவேற்றி விட்டாயா..என்றேன்..

நதி என்னை பார்த்து படுபயங்கரமாக சிரித்தாள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..ஏன் என்னாச்சு என்றேன்.

நதி என்னிடம் கேட்டாள்..நீ ஏதேனும் தீர்மானம் எடுத்தாயா என்று..நான் ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை நதி என்றேன்..

ஏன் என்றாள்..

எந்த தீர்மானமும் எடுத்து சில நாட்களில் காணாமல் போகிறது.. கடைபிடிக்காமல் என்றேன்.. நீ என்ன தீர்மானம் எடுத்து இருந்தாய். அதை முதலில் சொல் என்றேன்.

  நான் முதலில் கணந்தோறும் ஆனந்தமாக வாழ நினைப்பவள்.எனக்கு ஒவ்வொரு நாளும் புது வருட முதல் நாட்களே..😊அப்படி இருக்கும் போது நான் ஏன் பனிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒருநாளை கொண்டாட வேண்டும் என்றாள் கேலியாக.

அதெப்படி உன்னால் மட்டும் எல்லா நாட்களிலும் இனிமையாக கடத்த முடிகிறது என்றேன்.. ஆச்சரியமாக..

 கிருஷ் அதெல்லாம் அப்படி தான்.. வாழ்க்கை என்பது கணந்தோறும் நம்மை ஆனந்தத்தில் லயம் அடைய செய்கிறது. நாம் தான் அந்த லயத்தில் அடங்காமல் திமிறி திரிந்து துன்பத்தை அடைகிறோம்..என்று சொல்லி கொண்டே எனது கையை பிடித்து இழுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்..

அங்கே அவள் இரு நாற்காலிகள் ஏற்கனவே இருந்தது.அதில் ஒன்றில் என்னை அமர வைத்து அவள் அமர்ந்து கொண்டு இமைக்காமல் அங்கே இருக்கும் நிலவை பார்த்தாள்..மிகவும் உற்சாகமாக.. கொஞ்ச நேரம் அமைதி அமைதி...அங்கே..

  இந்த நிலவை நீ எப்போதும் ரசிப்பதற்கு காரணம் என்ன என்றேன்..

ஆனந்தத்தை அனுபவிக்க காரணம் தேவையில்லை கிருஷ். கணந்தோறும் இயற்கை ஆனந்தத்தில் தாண்டவமாடுகிறது..அந்த தாண்டவத்தில் நம்மை தொலைக்க மறுத்து சம்சாரம் எனும் துன்ப தாண்டவத்தில் துவண்டு போகிறோம்.. என்றாள்..சிரித்து கொண்டே..

கொஞ்ச நேரம் அந்த பனியில் நனைவதும் ஆனந்தமாக தான் இருந்தது.. தென்றல் காற்று இதமாக வருடியது..கொஞ்ச நேரத்தில் எனக்கு கொஞ்சம் குளிர ஆரம்பித்ததை அவள் கவனித்து விட்டாள்..

அருகே வந்து என்ன குளிர்கிறதா என்றாள்.எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.. மார்கழியில் குளிரால் வேர்க்கவா செய்யும்.. என்றேன்..

  குளிர்வது குளிராமல் இருப்பது இந்த இரட்டைகளை கடந்து விடு கிருஷ்.. அப்போது தான் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும்..என்று சொல்லி கொண்டே வா கீழே போகலாம் என்றாள்..

கீழே வந்தவுடன் நீ இப்போது இங்கே இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பு என்றாள்..

சொல்லி கொண்டே வேகமாக வேலைகளை முடித்து சப்பாத்தி செய்து அதற்கு நல்ல குருமா வைத்து கொண்டு வந்து கொடுத்தாள்..அதை ருசித்து சாப்பிட்டு முடித்தேன்..

கிளம்பும் வேளையில் எனக்கு ஏதேனும் புது வருட செய்தி உள்ளதா என்றேன்..

அதற்கு அவள் எப்போதும் கணந்தோறும் கொண்டாடிக் கொண்டே இரு.கடந்த காலங்களில் தேங்காதே;எதிர்காலத்தில் தொலையாதே..இதோ கடந்து சென்று கொண்டே இருக்கும் இந்த நிமிடத்தில் வாழ கற்று கொள் என்று சொல்லி கொண்டே என்னை புன்னகையோடே வழியனுப்பி வைத்தாள்..நானும் அந்த கணத்தில் நழுவ விடாமல் எடுத்து சென்றேன்..மிகுந்த மனநிறைவோடு..

#இளையவேணிகிருஷ்ணா.

#மீள்பதிவு

பயணங்கள் அலுத்த போதும்...

 


பிறவிகள் தோறும்

நம்மோடு

பயணிக்கிறது

இறப்பு...

இறப்பின் சூட்சுமத்தை

புரிந்துக் கொள்ள

முயற்சி செய்யாமலேயே

இங்கே 

பல கருவறையில்

பயணிக்கிறோம்...

பயணங்கள் 

அலுத்த போதும்

விடாமல் தொடர்கிறோம்

ஏதோவொரு ஆவலில்..

இங்கே 

அந்த பிறவியின்

சூட்சுமத்தை உணர்த்தும்

கருவறை 

கிடைக்கும் வரை

புனரபி ஜனமும்

புனரபி மரணமும்

யாகத்தில் இடைவிடாமல்

ஊற்றி பயணிக்க வைக்கும்

நெய்யை போல..

கொழுந்து விட்டு

எரியும் பிறவி எனும்

யாக தீயின் தணலை

இங்கே எவர்

இடைநிறுத்தக் கூடும்??

விடை தெரியா

கேள்வி இது...

#இளையவேணிகிருஷ்ணா.

ஜென் நிலை

 


சில நேரங்களில்

சில விரிசல்கள்

தேவைதான்...

அது ஆழ்ந்த புத்த தன்மையை 

உணர்த்தி...

வாழ்வின் தாத்பரியத்தை

உணர்த்தி ...

நிச்சலனமான

வாழ்வின் பயணத்தை

பேரமைதியோடு நிகழ்த்தி விடுகிறது...

#ஜென்நிலை..

30/08/2023.

நேரம் இரவு 9:25.

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வின் சுவை (5)

 


ஒரு நாள் எல்லாம் மாறும் என்று 

நினைக்காதீர்கள்!

இங்கே எது நடக்க வேண்டும் என்று 

விதி இருக்கிறதோ

அது நடந்து விட்டு போகட்டும்...

அதை திசை மாற்றி விடுவதால் அதன் தன்மையை மாற்றி விடலாம் 

என்று நினைக்காதீர்கள்...

அது ஒரு மோசமான நிகழ்விற்கு 

காரணமாக அமைந்து விடும்...

ஒரு நதியின் போக்கை மாற்றுவதை 

இங்கே ரசிக்க முடியாது...

அது ஒரு துன்புறுத்தல்...

அதனால் தான் சொல்கிறேன்

இங்கே எனது பயணத்தில் எவரும் 

குறுக்கே வராமல் 

இருந்து விடுங்கள் என்கிறேன்...

நான் ஒரு காட்டாறு

சில சமயங்களில்...

நான் அதை விரும்பி ஏற்பதில்லை...

நான் ஒரு அமைதியான 

நதியை போல 

மிதமான சலசலப்போடு ஓடவே 

 விரும்புகிறேன்...

#வாழ்வின்சுவை.

30/08/2023.

புதன் கிழமை

நேரம் இரவு 9:00.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு சிந்தனை ✨

 


ஆடிக் கொண்டார்

அந்த வேடிக்கை காண

கண் ஆயிரம் வேண்டாமோ?

பிரபஞ்சத்தின் நுட்பத்தை

இங்கே எவர் அறியக் கூடும்

உன்னை தவிர சித் சபேசா!

#சிதம்பரம்

#ஆடலரசன்.

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

இரவு சிந்தனை 🐾

 


எல்லா தேடலுக்கும்

தீர்வை தேடாதீர்கள்...

சில தேடல்கள் அப்படியே 

தொடர்ந்து

இருந்துக் கொண்டே இருப்பது தான் 

வாழ்வின் சுவாரஸ்யம்

மற்றும் அழகு ✨..

#இரவுசிந்தனை✨.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

இரவு சிந்தனை ✨

 


எப்போதும் ஜன நெருக்கடியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இப்படி ஒரு இயற்கை சூழ்ந்த தனிமை கிடைக்கும் போது வாழ்வின் பேரின்பத்தை உணர்கிறார்கள்..

எவ்வளவோ விசயங்கள் எத்தனையோ நிகழ்வுகள் மனதின் ஓரத்தில் சஞ்சலங்களை கொடுக்கும் போது இந்த மாதிரியான இடத்தில் அடைக்கலம் கிடைத்தால் அதை விட பொக்கிஷம் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் ✨🙏✨.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் பிரதிலிபி எழுத்தாளர் கல்பனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் ✨🙏✨.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் பிரதிலிபி எழுத்தாளர் கல்பனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

வணக்கம் நேயர்களே! 🙏

இன்று ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் ஒரு காட்சிப்படுத்தும் காணொளி பார்த்தேன்.... அந்த திரைப்படம் இறுகப் பற்று... அந்த சினிமாவை விளம்பரப்படுத்த உண்மையான தம்பதிகளை வைத்து சில கேள்விகள் கேட்டு நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்று பாருங்கள் முடித்து இருப்பார்கள் அந்த காணொளியில்.. அந்த காணொளியை மிகவும் நிதானமாக பார்த்தேன்.. அதில் தம்பதிகளுக்கான கேள்விகள் என்று கேட்கப்பட்ட கேள்விகள் பார்த்து எனக்கு சில இடங்களில் சிரிப்பும் சில இடங்களில் எரிச்சலும் வந்தது.. அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் பட்டியலிட்டு எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை... ஆனால் ஒரு சில கேள்விகள் உங்கள் முன் வைக்கிறேன்.. நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஊட்டி விட்டு இருக்கிறீர்களா என்று ஒரு கேள்வி மற்றொரு கேள்வி உங்கள் வாழ்க்கை துணை உறங்கும் போது ரசித்து இருக்கிறீர்களா என்பது...

இன்னொரு கேள்வி எந்த காரணமும் இல்லாமல் பரிசு பொருட்கள் கொடுத்து இருக்கிறீர்களா என்பது சில... இன்னும் நிறைய கேள்விகள் அதில் கேட்கப்பட்டு உள்ளது..அதை எல்லாம் நீங்களே சென்று அந்த காணொளியை பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்.. நான் அந்த காணொளியை பார்த்து அந்த காணொளியை தயாரித்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.. நீங்கள் கேட்ட அந்த கேள்விகள் அனைத்திற்கும் பூஜ்யம் என்றால் அவர்கள் நல்ல அந்நியோன்ய தம்பதிகள் இல்லையா என்று கேட்கிறேன்... அவர்கள் கேட்ட எந்த கேள்விக்குள்ளும் அடங்காமல் மிகவும் ஆத்மார்த்தமான நிம்மதியான அந்நியோன்யமான இல்லறம் நடத்தி வருபவர்கள் இங்கே மிகவும் அதிகம்.. புரிதல் ஒன்று மட்டும் தான் ஆத்மார்த்தமான தம்பதிகளுக்கு அந்நியோன்யமான தம்பதிகளுக்கு வேண்டுமே தவிர சில பல கேள்விகளால் அந்த திருமண உறவை நிச்சயமாக அடக்க முடியாது..நீ இதை எல்லாம் செய்யவில்லை அதனால் உன்னோடு வாழ இயலாது என்று அந்த காணொளியை பார்த்து கிறுக்குத்தனமாக விலகும் இணைகளும் இங்கே இருக்கிறார்கள் என்று யோசித்து அந்த காணொளியை வெளியிட்டு இருக்கலாம்..

ஏதோவொரு பிணைப்பு காதல் இணையின் குணத்தை புரிந்துக் கொள்ளுதல் இதில் தான் நல்ல தம்பதிகள் அடங்குவார்கள்..அதை விடுத்து ஒரு சில கேள்விகள் கேட்டு விட்டு நீங்கள் பாருங்கள் உங்கள் இணையிடம் இருந்து இவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று சொல்வது எல்லாம் மிகவும் அபத்தமான செயல்..

இங்கே தம்பதிகள் என்ற சொல் அதீதமான ஒரு நெருக்கத்தை இருவருக்கும் உணர்த்தும்.. அதை எவருக்கும் வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது என்பதே உண்மை..

வித்தியாசமான ப்ரமோ வெளியிட்டு இருக்கிறார்கள் உண்மை தம்பதிகளை வைத்து.. ஆனால் அதில் உள்ள கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை.. இங்கே அதனால் தான் உயிரோட்டமான நெருக்கம் நிறைந்த தம்பதிகள் வெளி உலகிற்கு தன்னை அறிவிக்காமல் அதீத காதலோடு பயணித்து மௌனமாக விடை பெறுகிறார்கள்..

#இறுகப்பற்றுதிரைப்படப்ரமோ.

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

புதன், 23 ஆகஸ்ட், 2023

இன்றைய தலையங்கம்

 


#இன்றைய #தலையங்கம்:-

ஒரு பக்கம் விஞ்ஞானத்தை நினைத்து பெருமைக் கொள்கிறோம்... இன்னொரு பக்கம் பூமியில் நாம் இது வரை மற்றும் இப்போது செய்துக் கொண்டு இருக்கும் செயல்களால் இயற்கை மிகவும் மோசமாக மாறுபாடு அடைந்து உள்ளதை நினைத்து கவலையடைகிறோம்... எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சூரிய பகவான் நமக்கு ஒவ்வொருவர் அருகிலும் மிதந்து பொசுக்கி விடுவேன் என்று தனது ஒளி கிரணங்களால் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.. எப்போதும் எல்லா சீதோஷ்ண நிலையும் ஒரே சீராக இருக்கும் நமது நாடு தற்போது திடீரென ஒரே இடத்தில் அதிக மழையை பொழிந்து எதுவுமே நடக்காதது போல ஓய்ந்து விடுகிறது..போன வாரத்தில் சென்னையில் இரவு முழுவதும் கடுமையான பேய் மழை பொழிந்ததாக எனது சகோதரி வசிக்கும் இடத்தில் இருந்து சொல்கிறார்.. என்ன தான் இயற்கையின் செயல்பாட்டில் நடக்கிறது என்று எவராலும் யூகிக்க முடியவில்லை... இந்த நிலையை முக்கியமாக உலக நாடுகள் ஒரு சீரான கால இடைவெளியில் விவாதிக்க வேண்டும்.. ஏனெனில் இயற்கை சமன்பாடு இல்லாமல் போக போக நாம் இந்த பூமியில் உயிர் வாழும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டு இருக்கிறோம் என்று சாதாரண மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த வேதனையும் கவலையையும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. இங்கிலாந்தில் தண்ணீர் பிரச்சினை எப்போதும் இல்லாத அளவுக்கு வர போகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. இப்படி மிகவும் முக்கியமான விசயத்தில் எல்லாம் கண்டும் காணாதது போல உலக நாடுகள் வெறும் பொருளாதாரம் மட்டுமே நினைவில் வைத்து பயணித்தால் நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தின் அழிவுக்கு உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்..இதோ இப்போது சந்திராயான்-3 வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்த தலையங்கத்தை எழுதிக் கொண்டு இருக்கும் என்னை காற்றின் சிறு தீண்டலும் இல்லாமல் வெறும் கொதிப்பை இயற்கை எனக்கு பரிசளித்துக் கொண்டு உள்ளது... இப்போது இதை பற்றி எழுதா விட்டால் எப்போதும் கவனத்தில் இருக்காது...

இயற்கையோடு வாழ்ந்த பசுமை மாறாத வாழ்ந்த அந்த நாட்களின் நினைவுகளை அசைப் போட்ட படி விண்ணை பார்க்கிறேன் ... சந்திரயான் நிலவில் எங்கே தரை இறங்கி இருக்கக் கூடும் என்று அல்ல.. இந்த வாயு பகவான் எங்கே இந்த விண்ணில் ஒளிந்து கொண்டார் என்று...

#இன்றையதலையங்கம்.

#விஞ்ஞானமும்வாழ்வும்.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

இசையில் கரையும் காதல்..

 


நீ இசைக்கிறாய்...

நான் அதில் கலந்து

காதல் துடிப்பை

ரசிக்கிறேன்...

இசையில் நம் காதல் கரைகிறது...

அந்த சமுத்திரம் சாட்சியாக

என்றேனும் ஒரு நாள்

நமது காதலின் இசையை

கரையில் சேர்க்கக் கூடும்...

அன்று நீ எங்கே இருப்பாயோ

நான் எங்கே இருப்பேனோ

தெரியாது...

எவரேனும் அந்த இசையை கேட்டு நம்மை தேடி வரும் போது நம் நிலை என்னவாக இருக்கும் என்று

இந்த சமுத்திரமே மீண்டும்

சாட்சியாக சொல்லக் கூடும்...

நாளைய நிலையை இங்கே

நம்மில் ஒருவரில் யாரேனும்

அறிந்து இருந்தால் சுகம்...

#இசையில்கரையும்காதல்.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

22/08/2023.

நேரம் இரவு 8:40.

இரவு சிந்தனை ✨


வாழ்வில் சம்சார துக்கமே

எல்லா துக்கங்களையும்

விருத்தி செய்ய ஆதாரமாக

இருக்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

22/08/2023.

நேரம் மாலை 6:40.

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

பகலும் இரவும் களைப்பில்லாத பயணத்தில்..


எந்த ஆராவாரமும்

இல்லாத

இந்த சூட்சம

அமைதிக் கொண்ட

இரவை உறங்கி வீணாக்க விரும்பாமல்

விழித்து இருக்கிறேன்...

இந்த சூழலை நேசித்து கிடக்க காரணம்

வெயில் நனைத்த பகல் பொழுதில் மனிதர்கள் சஞ்சாரம் மிகுந்த வெளியில்

போட்டி பொறாமைகள்..

ஒருவரையொருவர் சந்தேகத்துடனேயே பார்க்கும் பார்வை...

புறம் பேசி ஒரு மனிதனின் மதிப்பிழக்க செய்து மகிழ்வது..

இப்படி எத்தனையோ அழுக்குகளை

இந்த சூட்சம அமைதிக் கொண்ட இரவு தான்

எந்த தொந்தரவும் இல்லாத 

இந்த நேரத்தில் தான் 

தனது பேரமைதியால்

சுத்தம் செய்து பகலுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது...

எந்தவித சச்சரவும் இல்லாமல் பகல் அதை சுவீகரிக்கிறது...

மீண்டும் பகல் பொழுது

மனிதர்கள் சஞ்சாரத்தில்

அழுக்காகி முடிவில்

இவரிடம் தாரை வார்க்கிறது...

ஒரு வித நெருடலோடே..

இந்த பயணத்தின் ஓட்டத்தை

காலம் ஆழ்ந்த அமைதியோடு வெறும் சாட்சியாக சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்க்கிறது...

#பகலும்இரவும்

#களைப்பில்லாதபயணமும்.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வின் வறட்சியை மட்டுமே எதிர் கொள்கிறீர்கள்..

 


இரவின் நீட்சியை

மனம் நாடி தவம் இருக்கிறது..

ஒரு நட்சத்திர கூட்டத்தின்

உயிரோட்டமான தேடலை

இங்கே என்னால் அவ்வளவு

எளிதில் ஊதாசீனப்படுத்த

இயலவில்லை...

ஒரு வகையான காதல் இது...

இரவை நேசிப்பதற்கு இங்கே பலபேர் பல காரணங்கள் சொல்லலாம்...

எனக்கும் அந்த நட்சத்திர கூட்டத்திற்கும் ஒரே காரணம் தான் இருக்க முடியும்...

நான் எனது பார்வையால் கடத்துகிறேன் என் காதலை

ஒரு நொடியும் வீணாகாமல்..

அதுவும் என் காதலை

உள் வாங்கி கொண்டு

என் காதலை வாங்கி கொள்கிறது...

பேரமைதிக் கொண்ட

இந்த இரவை தவிர

வேறெதுவும் மதிப்பு வாய்ந்ததாக தெரியவில்லை

எங்கள் இருவருக்கும்...

இந்த பிரபஞ்சத்தின் சூட்சம அமைதியை

இங்கே நீங்கள் ரசிக்க மறந்து தவற விட்டு விட்டு

வாழ்வின் வறட்சியை மட்டுமே எதிர் கொள்கிறீர்கள்...

ஆழ்ந்த உறக்கத்தில் கோடான கோடி மக்கள் அடுத்த நாள் கவலையோடு

இமையை மூடி உறக்கத்தை

வலுக்கட்டாயமாக வரவழைத்து

போராடும் போது

நாங்கள் இங்கே இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் வேடிக்கை பார்க்க

காதலோடு கசிந்துருகி லயிக்கிறோம்..

விடை பெறா முடிவில்லாத

இந்த பெருவெளி காதல் பயணத்தை இங்கே யார் புரிந்துக் கொள்ளக் கூடும்??

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏✨🎻💐.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் #சுடர் ஒளி அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.


கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻✨🎉.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

இனிது இனிது ஏகாந்தம் இனிது ❤️

 


ஒரு நாளோ யுகமோ எதுவாக இருந்தாலும் நிச்சயமாக தனியாக இருந்தால் நமக்கு பிடித்த விசயங்களை மிகவும் ரசித்து செய்ய இயலும்..அதை விட நாள் முழுவதும் உற்சாகமாக இருப்போம்...

இனிது இனிது தனிமை இனிது ❤️.

ஏனெனில் அங்கே காயப்படுத்தவோ சஞ்சலப்படுத்தவோ ஆள் இல்லை ...

இசையை கேட்கலாம் நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம்.. உறக்கம் கண்களை தழுவும் போது மணிக்கணக்கில் உறங்கி விடலாம்...

தேநீர் ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டோ அல்லது இயற்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டோ அணு அணுவாக ரசித்து பருகலாம்..

இரவெனும் பெருவெளியை மிகவும் மிகவும் நிம்மதியாக ஆனந்தமாக விண்ணில் உள்ள விண்மீன்களை நிலவை ரசித்து கொண்டு உறங்கலாம்..

எப்போதும் ஆனந்தமாக இருக்க ஏகாந்தம் தான் மிகவும் மிகவும் உறுதுணையாக இருக்கும்...

#இனிதுஇனிதுதனிமைஇனிது. ✨❤️✨.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் மாலை:6:30.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

விலகி இருங்கள் 🍁

 


என்னை பின்பற்றுபவர்களுக்கான பதிவு:-

சில மனிதர்கள்; சில நிகழ்வுகள்; சில எண்ணங்கள்; சில சிந்தனைகள்;... இப்படி நீங்கள் அதை விடுத்து வெளியே வர நினைக்கும் போது அது உங்களை மேலும் அதிக கவர்ச்சியை மாயை தூண்டும்.. ஆனால் கவனமாக கையாண்டு அதை விட்டு விலகி இருங்கள்... ஏனெனில் இந்த உலகில் எல்லாமே மாயை சொரூபம் தான்.. இது விரக்தி பதிவு இல்லை.. வாழ்க்கையை கையாளும் பதிவு.

📖✍️#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய சிந்தனை ✨

 


ஆழ்ந்த அமைதியும்

சில தருணங்களில் வாய்க்கும் 

ஏகாந்தமும்

வாழ்வின் துளியின் இசையை 

உங்களுக்கு

இனிமையாக அறிவிக்கிறது!

#சிந்தனைதுளி.

#இளையவேணிகிருஷ்ணா.

பேரன்பு கொண்ட நட்புகளே!

இனிய பொழுதாக தங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் ✨☕🎉🎶🐾.

#இளையவேணிகிருஷ்ணா.

ரூமியின் வழியில் பயணிப்பவள் ✨


அந்த வாழ்வின் இறுதி நொடியில்

என்னிடம் ஏதேனும் 

சொல்ல விரும்புகிறீர்களா என்று 

கேள்வி கேட்கப்பட்டது...

ஆம்...

இந்த வாழ்க்கை 

பெரும் ஊழி பயணம்...

இதில் நான் இலகுவாக

எனது சிறகை விரித்து

எந்தவித சஞ்சலமும் இல்லாமல் 

விண்ணுலகில் 

பயணிக்க இருக்கிறேன்..

எனது சுவாரஸ்யமான பயணம் 

இன்னும் முடிந்து விடவில்லை 

என்றேன்...

இதை கேட்ட அந்த

ஊழி அதிகாரி சற்றே நடுக்கமுற்றார்...

#ரூமியின்வழியில்

#பயணிப்பவள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் நள்ளிரவு:12:23.

நான் சம்சாரி அல்ல ✨

 


நான் அந்த விசயத்தை பற்றி

என்ன நினைக்கிறேன் என்று

அறிந்துக் கொள்ள அங்கே

அனைவரும் ஆவலோடு 

காத்திருக்கிறார்கள்!

நான் அந்த விசயத்தை மட்டும் அல்ல

வாழ்க்கையே வெறுமனே வேடிக்கை 

பார்த்துக் கொண்டு தான்

இருக்கிறேன்...

அது பற்றி வேறு அபிமானம் 

இல்லை என்று

அவர்களிடம் தீர்க்கமாக யாரேனும் 

சொல்லுங்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் நள்ளிரவு 12:00.

ஆவணி 1.

நடுநிசி கவிதை 🍁


 ஒரு சாம்ராஜ்யம்

 பிரமிக்க வைக்கிறது!

இன்னொரு சாம்ராஜ்யம் 

அதிசயிக்க வைக்கிறது !

இங்கே இந்த இரண்டுக்கும் இடையே

ஒரு மெல்லிய கோடாக

துருவ நட்சத்திரமாக 

எப்போதும் ஒளிரும்

சாம்ராஜ்ஜியம் மட்டும்

நடப்பதை தமது பிரகாசமான 

ஒளியால்..

அளவிடுகிறது...

எல்லா ராஜாக்களுக்கும் 

ஒரு அழிவு நிச்சயம்

துருவ ராஜா மட்டும் 

எப்போதும் பிரகாசமாக

அந்த விண்ணில்

எந்தவித ஆரவாரமும் இல்லாமல்

பிரகாசித்து அந்த விண்ணுகத்தை

தனது ஒளியால் வசீகரிப்பார்..

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி


 வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழுங்கள் 🙏✨🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

இரவு கவிதை 🍁


இந்த பிரபஞ்சத்தின்

சிருஷ்டியில் உள்ள 

அத்தனை நரகங்களும்

பரிசளிக்கப்படுகிறது...

ஒரு நொடி வாழ்வின் மீது கொண்ட

வெறுப்பு நிலையில்..

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் மகிழ்ச்சியும் சேர்க்கும் நிகழ்ச்சி இது..

கீழேயுள்ள லிங்கில் இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻✨🎉.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 16 ஆகஸ்ட், 2023

இரவு சிந்தனை ✨

 


இந்த பிரபஞ்சம்

என்னை கவர்வதற்காக

தன்னால் முடிந்த வரை

அழகை 

வெளிப்படுத்திக் கொண்டே தான் 

இருக்கிறது..

அதன் அழகை ரசிக்க மறந்து

ஒரு கூண்டுக்குள்

நான் புதைந்து கொள்ளும்

எனது இயல்புக்கு

இந்த பிரபஞ்சம் எப்படி 

பொறுப்பாக முடியும்?

#இரவுசிந்தனை.

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம்: இரவு 10:10.

கிருஷ்ணா இணையதள வானொலி


 நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

இளைப்பாறுதலின் சுகம்

 


ஒரு அமைதியான நதி..

யாருமற்ற தனிமையில்

ஒரு இளைப்பாறுதலின் சுகம் இங்கே 

அலாதியானது...

#காலைசிந்தனை✨.

#இளையவேணிகிருஷ்ணா.

அசாதாரண இணை ✨

 


அந்த மழை இரவில்

உன்னோடு நான் நடந்து வந்த காலத்தை

மீண்டும் மீண்டும்

அசை போடுகிறேன்..

நீ எத்தனை எத்தனை 

கதைகளை பேசி குதூகலித்து 

விழும் மழைநீரை 

கையில் ஏந்தி நடந்தாய்...

அந்த தருணத்தில்

நாம் நனைந்து 

இந்த பிரபஞ்சம் மறந்து

இரவின் நிழலில் கொஞ்ச நேரம் 

இளைப்பாறி

ஒரு தேநீர் கடையில் தேநீர் பருகி 

நீண்ட தூரம் நடந்து

இரவை நொடிக்கு நொடி

ரசித்து கடந்தோம்...

அந்த ஒரு இரவு நீயும் நானும்

வாழ்வின் மொத்த ரசனையையும் 

ரசித்து முடித்து விடை பெற்றோம்...

நம்மை காதலர்கள் என்று

அந்த தேநீர் கடைக்காரரோ

அல்லது அந்த இரவோ நினைத்து 

இருக்கக் கூடும்..

நாம் இருவரும் அதை ரசித்து 

சிரித்து கடந்தோம்..

உண்மையில் நாம் இருவரும் 

காதலர்களா என்று 

நமக்கு நாமே 

கேட்டுக் கொண்ட போது உடனே 

நாம் இருவரும்

அந்த எண்ணத்தை மறுத்தோம்...

அப்போது நாம் யார் என்று 

மீண்டும் மீண்டும்

கேட்ட போது நீ உடனே பதில் 

அளித்தாய்...

நாம் இருவரும் காதலர்களாக 

இருந்து இருந்தால் 

இந்த இரவை இவ்வளவு 

ரசனையோடு

ஒரு சஞ்சலமின்றி கடந்து 

இருக்க மாட்டோம்...

நாம் அதீத,

அபூர்வ உணர்வுள்ள இணை...

இந்த பெயரையோ உறவையோ 

எவரும் சரியாக கணிக்க தெரியாமல்

அவரவருக்கு தோன்றும் விதத்தில் 

நம்மை நினைத்து கொள்கிறார்கள்..

நாம் நம்மை கணிக்க வேண்டுமா 

அல்லது

நம்மை நாமே 

ரசிக்க வேண்டுமா என்று 

நீயே முடிவு செய்து கொள் என்றேன்...

ஒரு ரசனையான இணையின் பயணத்தை இங்கே யார் 

அசாதாரணமாக 

அதே நிலையில் உணரக் கூடும்?

#அசாதாரண #இணை.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு இரவை சுகமாக்கும் பயணத்தில் இணைந்துக் கொள்ள பேரன்போடு அழைக்கிறோம் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻.🥳🍁🎉🦋📻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

எனது சுதந்திர தின நாளின் தொடக்கம்

 


இன்று எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் பாகவத உபன்யாசம் கேட்பதற்காக திருப்பதி தேவஸ்தான சேனலை மாற்றினேன்.. அது ஒரு தொடர் நேரலை நிகழ்ச்சி.. தினமும் காலையில் எட்டு மணிக்கு ஆடிமாத புருஷோத்தம மாதமாக கொண்டாடும் போது பாகவதம் உபன்யாசம் கேட்பது சிறப்பு.. அப்போது எனது கணவர் செய்தி சேனலை ஒரு பத்து நிமிடம் வை இளையவேணி என்றார்.. சரி என்று சேனலை மாற்றினேன்.. அப்போது தீவிரமாக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின உரையாற்றிக் கொண்டு இருந்தார்.. நான் ஒரு நிமிடம் அவரது பேச்சை கேட்டு விட்டு இவர் குரலை கேட்டாலோ இவர் பேசுவதை கேட்டாலோ இதய துடிப்பு அதிகமாகி எனக்கு இரத்த கொதிப்பு வந்து விடுகிறது என்றேன்..உடனே எனது கணவர் அப்படியா இளையவேணி..நீ பேசும் போது மட்டும் இரத்த கொதிப்பு வராதா என்றார் சிரித்துக் கொண்டே.. நான் வானொலியில் பேசும் போது இரத்த கொதிப்பு வந்ததாக எவரும் பதிவு செய்யவில்லை என்றேன் மிகவும் நிதானமாக.. அது வானொலியில் நேரில் உன்னோடு பேசினால் நிச்சயமாக இரத்த கொதிப்பு வந்து விடும் என்றார்... எனக்கு வந்த கோபத்தினை நான் கட்டுப்படுத்திக் கொண்டு எனது பணிகளை பார்க்க அங்கிருந்து நகர்ந்து விட்டேன்... என்ன இந்த உலகம் உண்மையை சொன்னால் நம்ப மறுக்கிறது? இல்லை எனக்கு மட்டும் தான் பிரதமர் பேசும் போது கேட்க முடியாமல் நகர்ந்து விடுகிறேனா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்...😌

#எனதுசுதந்திரதினநாளின்தொடக்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி


 நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு சுந்தர் மதுரை அவர்களின் விருப்ப தேர்வு பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

இது இரவை இனிமையாகும் சுகமான இசை பயணம் 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻🤝🦋.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

சிறைப்படுதல் பிடிப்பதில்லை..

 


நான் காதலுக்கு பயப்படுபவள்

ஏனெனில் எனக்கு சிறைப்படுதலும்

பிடிப்பதில்லை!

யாரையும் சிறைப்படுத்துதலையும்

விரும்புவதில்லை!

இரண்டுமே 

இந்த காதலில் நிகழும் 

அல்லது 

ஏதோவொன்று நிகழும்!

வாழ்க்கையை ஒரு பெரிய 

அழகிய நதி பிரவாகமாக

நேசிக்கும் எனக்கு 

இது எப்படி ஒத்து வரும்?

#14/08/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

காதலும் காதலில் இருந்து பிரிதலும்

 


ஒரு காதல் வாழ்க்கை;

மறு காதல் அதிலிருந்து முற்றிலும் ஒட்டாமல் பயணிப்பது...

தீவிரமாக காதலியுங்கள்

தீவிரமாக அதிலிருந்து விடுவித்து கொண்டு மிகவும் இலாசான இறகை கொண்டு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் பயணியுங்கள்...

வாழ்க்கையை நேசியுங்கள்

ஆனால் அதை சிறைப்படுத்த முயலாதீர்கள்;

இங்கே எந்த சிறைப்படுதலும் சிறைப்படுத்துதலும் இல்லாமல் இருக்கும் நிகழ்வொன்றில் தீவிரமாக ஒன்றோடொன்று கலந்து விடுங்கள்...

அதை தவிர இங்கே பெரிய ரசனை வேறில்லை...

#காதலும் #காதலில் #பிரிதலும்

#இளையவேணிகிருஷ்ணா.

14/08/2023.

பிற்பகல்:3:11.

வாழ்வின் சுவை (4)

 

மேலேயுள்ள வாசகத்தை ஒட்டி நான் சொல்வதும் ஒன்று தான்.. தயவுசெய்து பாதுகாப்பாக வாழ நினைக்காதீர்கள்... வாழ்க்கை போரடித்து விடும்..ஒரே மாதிரியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயமாக சுகத்தை தருவதை விடுத்து சோகத்தையே தரும்.. ஆனால் இங்கே ஒரே மாதிரியான வாழ்க்கையை தவிர வாழ வேறு வழியில்லை பல கோடி பேருக்கு...ஒன்று மட்டும் நிச்சமாக சொல்வேன்... வாழ்வின் சுவாரஸ்யங்கள் எப்போதும் உங்களை தவிர வேறொருவர் அனுபவிக்க முடியாது.. அப்போது நீங்கள் பல வித புது தருணங்களை எதிர் கொள்ள வேண்டும்..சம்சாரிகளால் நிச்சயமாக முடியாது.. ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பயணிக்கும் அந்த வாழ்வின் ரசனையான பயணிக்கு சாத்தியம் ஆகும் போது அவனை கொண்டாடுங்கள்.. அவன் நிச்சயமாக நேசிக்கப்பட வேண்டியவன்... நான் அப்படி தான்.. நான் வாழ்வின் சூட்சமத்தை உணர்ந்து கொண்டு அந்த நதியில் மிகவும் நிதானமாக ரசனையோடு நீந்துகிறேன்... நான் எப்போதும் வேறொருவரின் வாழ்க்கையை வாழ விரும்புவதில்லை... நான் என்றால் அது நான் மட்டும் தான்.என்னை போல இன்னொன்று எப்போதும் கிடையாது.. அப்படி இருந்தால் அது போலி... வாழ்வின் இறுதி பயணத்திலும் இந்த பிரபஞ்சத்திற்காக ஒரு கவிதை எழுதி காற்றில் மிதக்க செய்வேன்.. நான் எப்போதும் தனித்துவமானவள்... இந்த சமுதாயமோ எனது வீடோ என்னிடம் ஏதோ எதிர் பார்த்து சோர்ந்து விடுகிறது... அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ? என்னை புரிந்துக் கொள்ள உங்களில் பலபேருக்கு ஒரு யுகம் தேவைப்படலாம்... அது தான் உண்மை...

#வாழ்வின்சுவை(4).

14/08/2023.

பிற்பகல்2:50.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

இறுகிய மனதிற்கு


குமுறும் எரிமலையின்

வெப்பம் கூட சலனப்படுத்தாது...

இறுகி போன

மனதினை பெற்ற

ஒரு சாதுவான மனிதனுக்கு...

#இரவுசிந்தனை.

நேரம் இரவு 8:40.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏


இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் உங்கள் செவிகளுக்கு இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் சேர்க்கும் வகையில் இருக்கும் நேயர்களே 🎻🙏🎻.

இது தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணமிது ✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையில் இணைந்து கொள்ளுங்கள் நேயர்களே ✨🎻💐.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

இரவு சிந்தனை ✨

 

எல்லாவற்றையும் வெறுத்து

ஒரு சித்தநிலை கைகூடும் போது

அதை அப்படியே உடும்புபிடியாக

பிடித்துக் கொள்ளுங்கள்!

#இரவுசிந்தனை.

நேரம் இரவு 7:58.

11/08/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

கண்மூடித்தனமான பிரதிபலன் பாராத நேசம் ✨

 


என்னோடு இணையத்தில் பயணிக்கும் நேசம் மிகுந்த பிரதிலிபி பெண் எழுத்தாளர் தோழி கல்பனா மோகன்ராஜ் அவர்கள் வெகு காலத்திற்கு பிறகு ஒரு ஹாய் சொல்லி என்னை ஞாபகம் இருக்கிறதா என்று மட்டும் கேட்டு விட்டு போய் விட்டார்.. எனக்கு பெரும்பாலும் என்னோடு பயணிக்கும் எழுத்தாளர் ரசிகர்களை மறப்பது இல்லை.. ஏனெனில் எழுத்து எனது உயிர் மூச்சு.. நான் தங்களை மறக்கவில்லை தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்து விட்டு கொஞ்சம் குறுந்தகவல் மூலம் பேசினோம்.. நிறைவாக I miss u your voice என்றார்...அடடா இவர் எனது வானொலி நிகழ்ச்சியும் கேட்டு இருக்கிறார் என்று பிறகு தான் ஞாபகம் வந்தது.. நிச்சயமாக தாங்கள் நேரம் கிடைக்கும் போது ஒரு பாடல் பாடி அனுப்பி வையுங்கள் என்று பேரன்போடு கேட்டுக் கொண்டார்.. நிச்சயமாக அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்... இப்படி தான் பாருங்கள் நம் மீது எத்தனையோ உள்ளங்கள் நேசிப்பதை நிறுத்தாமல் பெரும் நேசத்தை திகட்ட திகட்ட கொடுத்து விட்டு நொடி பொழுதில் மறைக்கிறார்கள்... ஆனால் அவர்கள் நேசம் மட்டும் எப்போதும் நிலையாக என்னோடு பேசாமல் பேசி எவருக்கும் தொந்தரவு இல்லாமல் பயணிக்கிறது... இது தான் நான் இந்த பிரபஞ்சத்தின் கொடையாக நினைக்கிறேன்.. என் எழுத்துக்கோ குரலுக்கோ இங்கே அதிகாரபூர்வ அங்கீகாரம் தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது இவர்கள் போன்ற பெரும் நேசமிகுந்த தோழமைகளால்...

#கண்மூடித்தனமானநேசம். ❤️

நேரம் மாலை:5:10.

11/08/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் ரூபா அவர்களின் விருப்ப பாடல்களோடு இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு இரவை இனிமையாகும் சுகமான இசை பயணத்தில் கலந்துக் கொள்ள பேரன்போடு அழைக்கிறோம் நேயர்களே 🎻🙏🎻.

இது நம்மை நாமே ஆசூவாசப்படுத்திக் கொள்ளும் நேரம் அல்லவா ✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🎻🙏🎻.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஒரு அர்த்தமும் தேவையில்லை..


எதை எதையோ தேடி தேடி அலைகிறது

எனது கால்கள்...

அந்த தேடலில் 

ஒரு சுவாரஸ்யமான இடத்தையும் 

அடைய இயலாமல்

சலித்து அமரும் நேரத்தில்

அந்த இடத்தில் நான் தேடிய

அற்புத நிகழ்வொன்று

சத்தம் இல்லாமல் 

அரங்கேறி வருகிறது...

அதை பார்த்து 

சிரித்துக் கொள்கிறேன்...

இத்தனை தூரம் 

பயணித்து பயணித்து 

கால்கள் ஓய்ந்து இருக்க வேண்டாமே 

என்று...

ஒரு அர்த்தமும் தேவையில்லை 

நாம் வாழும் வாழ்க்கைக்கு...

இதோ அப்படியே நம்மை உள்வாங்கி கரைக்கும் 

இந்த நொடியை தவிர 

வேறென்ன அற்புதம் 

இங்கே நிகழ்ந்து விட போகிறது 

என்று

ஒரு தேறுதல் தான்

என்னை கைபிடித்து

வழி நடத்தி செல்கிறது..

நானும் இலகுவாக பயணிக்கிறேன்

வாழ்வெனும் அந்த நீண்ட நீண்ட 

சாலையில்...

#வாழ்வின்அற்புதம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருவில் புகாத காற்று

 


காலத்தில் கரைந்து விடும்

நான் வாழும் வாழ்வின்

அந்த துடிப்பற்ற உயிர் நாடி...

கேட்பாரற்று கிடக்கிறது

இங்கே எனது சுவை மிகுந்த

அந்த வாழ்வின் பக்கங்கள்..

குறையொன்றுமில்லை என்று என்னை நானே

தேற்றிக் கொண்டு

பயணிக்க தான் வேண்டும்

என் மனதை

கல்லாக்கிக் கொண்டு...

காலம் என்னை கடத்துகிறது

ஒரு நீராவி போல

என்னை அந்த அதீத மேக நிலைக்கு அப்பால்...

நான் சலனமற்ற பயணத்தை

மேற்கொள்ள என்னை யுகம் யுகமாக பழக்கி வைத்து இருக்கிறேன்...

ஏனெனில் நான் மீண்டும் கருவில் புகாத காற்று...

#ஆத்மஞானம்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் p.அஜித்குமார் அவர்களின் பாடல் தேர்வுகளோடு கவிஞர் இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளுங்கள்...

இது இரவை இனிமையாகும் சுகமான இசை பயணம் இது ✨🎉🦋.

கீழே உள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻✨🎉.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வாழ்வின் சுவை (3)

 

என் இயல்போடு உங்களை

பயணிக்க 

கட்டாயப்படுத்தவில்லை...

நான் உங்களிடம் எதிர்பார்க்கும் விசயமும் அதே தான்..

இங்கே இயல்பு மாறி பயணித்து பயணித்து

வாழ்வை அர்த்தமற்றதாக்கி

வாழ்ந்து மறைந்து விடும் கூட்டத்திற்கு மத்தியில்

நான் எனது இயல்பு மாறாமல் இந்த வாழ்வெனும் சாலையில் நெடுந்தூரம் பயணித்து முழுமையடைய நினைப்பதில் அப்படி நீங்கள் என்ன தவறு கண்டுபிடித்து விட்டீர்கள்??

உங்கள் கேள்விகளுக்கு விடை தரும் எண்ணமில்லை எனக்கு...

இதோ சற்றே களைப்பில்லாமல் என் பயணத்தை தொடர

கொஞ்சம் அனுமதி தாருங்கள் என்று கோரிக்கை அல்ல கட்டளையிடுகிறேன்...

சுவையற்ற இயல்பை நீங்களே வைத்துக் கொண்டு

என்னை உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விடுங்கள்...

என் இயல்பு ஆக்ரோஷமாக உங்களிடம் கோபமாக மாறுவதற்குள்.....

#வாழ்வின்சுவை(3).

#இளையவேணிகிருஷ்ணா.

ஒரு கோப்பை தேநீர் ☕


அத்தனை சஞ்சலங்களும் 

என்னுள் இளைப்பாறுகிறது! 

என் வேதனையை 

புரிந்துக் கொள்ளாமல்! 

ஒரு கோப்பை தேநீர்..

துரத்தி விடுகிறது 

இங்கே ஒரு ஆறுதலாக 

என்னுள் குடி கொண்டு இருக்கும் 

சஞ்சலங்களை ...

என் மீது கொண்ட 

காதல் உணர்வால்! 

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் மாலை4:40

09/08/2023.



இயல்பாக இருந்து விட்டு போவதில்...

 

இயல்பாக இருந்து விட்டு போவதில் 

எப்போதும்

எந்த தொந்தரவும் இல்லை

எனக்கு ...

கூடுதலான உணர்ச்சிகளை

சூழலுக்கு தகுந்தார் போல

கூட்டியோ குறைத்தோ 

காட்டுவதில் தான்

நான் திக்கு தெரியாத 

காட்டில் விட்டதை போல

தட்டுத்தடுமாறி போகிறேன்...


09/08/2023.

நேரம் மாலை 4:19.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நான் தேடியலையும் இரை

 


நான் வரையும் ஓவியத்தில்

என் வாழ்வின் சுவை

முழுவதையும் மீட்டெடுக்க

பிரயத்தனம் செய்கிறேன்!

என் வாழ்வின் சுவை ஏனோ

ஒரு நிலையில் இருந்து 

இன்னொரு நிலைக்கு 

நொடிக்கு நொடி 

மாறி மாறி பயணிக்கிறது... 

ஒரு வேளை அது தான் 

நான் தேடியலையும் 

என் வாழ்வெனும் 

புத்தகத்திற்கான இரையோ?

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

08/08/2023.

நேரம் இரவு 8:39.

கிருஷ்ணா இணையதள வானொலி


 வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏✨🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் கவிஞர் இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு ரூபா மதுரை அவர்களின் விருப்ப பாடல்களோடு இன்றைய இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🎻🙏🎻.

இசையோடு ஒரு சங்கமத்தில் கலந்து கொண்டு ஆனந்தமாக பயணம் செய்ய தங்களை பேரன்போடு அழைப்பது உங்கள் அறிவிப்பாளர் இளையவேணி கிருஷ்ணா ✨.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/


இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...