ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

நேர்மறை எண்ணங்கள்

அன்புடையீர் வணக்கம்.
       இன்று நாம் பார்க்க இருப்பது நேர்மறை எண்ணங்கள். இன்று மனிதர்களிடையே நேர்மறை எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்களே அதிகமாக ஈர்க்கிறது. சமூக வளைத்தளத்தில் கூட நேர்மறை எண்ணங்களுக்கு கிடைக்கும் லைக்ஸைவிட எதிர்மறை எண்ணங்கள் சோகமான பதிவுகளே அதிக வரவேற்பை பெறுகிறது. அதை நீங்களே கூட கவனித்து இருக்கலாம். அதை தவறு என்று கூட சொல்லமுடியாது.ஏனெனில் இந்த உலகில் வாழ்வில் எந்த மூலைக்கு போனாலும் மனிதர்கள் தங்கள் உறவினர்களாலோ அல்லது சமூகத்தாலோ அல்லது நண்பர்களாலோ ஏமாற்றப்படுகிறார்கள்.அதனால் தான் அவர்கள் அந்த எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை அதிகமாக விரும்புகிறார்கள்.அட நம்மை போல தான் இவர்களும் என்று.
       ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே மனம் எதை அதிகமாக உள்ளே அனுமதிக்கிறதோ அதை அப்படியே உள்ளே  ஆழமாக புதைத்து கொள்ளும்.அதனால் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக உள்ளே அனுமதிக்காதீர்கள்.
    ஒரு காரியத்தை எடுத்து பல்வேறு தடங்கல் வந்தாலும் அதை எதிர்த்து சமயோசிதமாக அதை கையாள வேண்டுமேயொழிய அதற்காக சோர்ந்து உட்காரக்கூடாது.அப்போது அந்த காரியத்தை விட்டு விடலாமா என்று தான் மனம் யோசிக்கும். இது எதிர்மறை எண்ணம். இதை நாம் கண்டிப்பாக மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
   நம்மிடம் பேசுபவர்கள் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை நமது நேர்மறை எண்ணங்களை நோக்கி திருப்ப வேண்டுமேயொழிய நாம் அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு பலியாகிவிடக்கூடாது.இதில் நாம் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
    அதிகாலையில் எழுங்கள்.உற்சாகமான சொற்களை உங்கள் மனதிற்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள். இன்று ஏதோவொரு புதிய காரியத்தை நாம் தொடங்கி சாதிக்க போகிறோம் என்று நினையுங்கள். அல்லது ஏற்கனவே தொடங்கிய காரியம் நல்லபடியாக முடியபோகிறது என்று உற்சாகமாக நாளை தொடங்குங்கள்.
    எந்த நேரமும் நீங்கள் சோர்வடையாதீர்கள். போதிய ஓய்வு  எடுத்துக்கொண்டு மீண்டும் வேலைகளை உற்சாகமாக செய்யுங்கள்.நம்மை விட்டால் இந்த வேலையை செய்ய இங்கு வேறு எவருமே இல்லை என்று உத்வேகம் கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் அதிக நேர்மறை அதிர்வலைகளை பெறுவீர்கள்.
    எப்போதுமே உற்சாகமாக இருப்பவர்களை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த அதிர்வலைதான் இவர்களை காக்கும் பொன்வளையம் என்றே சொல்லலாம்.
   நேர்மறை எண்ணங்கள் கடுமையான நோயை கூட குணபடுத்திவிடுகிறது என்று பல ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளார்கள்.அதனால் தான் நானும் உங்களிடம் இதை வலியுறுத்தி கூறுகிறேன்.
         அன்பர்களே நீங்கள் எந்த அளவுக்கு நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்கிறீர்களோ நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பழகுகிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை படைப்பீர்கள்.இது நிச்சயம். அதனால் நீங்கள் இப்போதில் இருந்து இந்த எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
  சரி நேயர்களே!நேர்மறை எண்ணங்கள் மூலம் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று வாழ்த்துக்கள் கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.மீண்டும் ஒரு நல்ல பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக பிரிகிறேன்.மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.🙏👍🖐️🖐️🖐️.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

கலை

அன்பர்களே வணக்கம்.
   நாம் சந்தித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அனைவரும் அந்த இறைவன் அருளால் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.🙂🙏
       நாம் தற்போது பார்க்க இருப்பது கலை.இந்த உலகில் இறைவன் படைப்பில் நாம் பார்க்கும் அனைத்தும் ஒருவித கலைதான். ஆனால் என்ன நாம் இறைவன் அருளால் இருக்கும் அனைத்து படைப்புகளையும் கலையாக ரசிக்க நேரம் இல்லாமல் அலைகிறோம்.அதுதான் நமது ஒரே குறை.அதனால் என்ன நமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொண்டால் ஆயிற்று.
       நாம் தினமும் அலுவலகத்திற்கு ஒருவித பரபரப்போடு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருகிறோம்.இதுதான் நமது தினசரி கடமையாக வேலையாக இருக்கிறது. மாறிவரும் வாழ்வியல் சூழலில் நாம் இதற்கு பழக்கப்படுத்திக்கொண்டதால் நமது மனம் சோர்வடைகிறது.உண்மையில் இறைவன் நம்மை நல்ல நோக்கத்திற்காக படைத்துள்ளான் என்பதை நாம் நம்ப வேண்டும். அதை நமது மனமும் உணர செய்ய வேண்டும். அப்போது தான் நாம் மனசோர்வில் இருந்து விடுபட இயலும். நாம் வாழும் வீடு முதலில் சிறியதாக இருந்தாலும் புழக்கடை என்று ஒன்று வீட்டின் பின்புறத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நான் சொல்ல வந்த வாழ்க்கை கலை என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியும்.
     நாம் ஒரு வேலைக்கு செல்வது நமது அடிப்படை தேவைகளை பூர்த்திச் செய்து கொள்வதற்காக தான்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அதிலேயே நமது வாழ்க்கையை தொலைத்து விட்டு இறைவன் படைத்த பூமியில் உள்ள கலைகளை ரசிக்க மறந்து விடுகிறோம்.
   இந்த உலகில் கடல்,வானம், மரங்கள், சோலைகள் ,மலைகள், ஆறுகள், அருவிகள்,சூரியன், சந்திரன், நட்சத்திர கூட்டம்,மேகம்,மழை,தூறல், பூக்கள், புல்வெளி,......இப்படி எல்லாமே நாம் ரசிக்க தான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?.அனைத்தையும் கலையாக பார்க்காமல் வெறுக்கிறோம்.மேலும் அதை ரசிக்க தெரியாமல் நமது பேராசையால் இறைவன் கொடுத்த இந்த கலைப்பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க துணிந்துவிட்டோம்.இப்போது நடக்கும் இயற்கை பேரழிவிற்கு தயைகூர்ந்து இயற்கையை திட்டி தீர்க்காதீர்கள்.இதெல்லாம் நாம் கடந்த காலத்தில் இப்போது செய்து கொண்டு இருப்பதற்கு எதிர்வினை என்பதை நாம் புரிந்து கொண்டு இனிமேலாவது இயற்கையை பழைய நிலைக்கு கொண்டு வரமுயலுவோம்.அதற்கு கண்டிப்பாக நிறைய காலம் பிடிக்கும். நிறைய பொறுமை அவசியம்.
  ஒருகாலத்தில் நாம் ரசித்த இயற்கை இன்று நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பதாக நினைக்கிறோம்.உண்மையில் இயற்கை நம்மை ஏன் மிரட்ட வேண்டும்?.கொஞ்சம் யோசித்து பார்ப்போம். இனியாவது நாம் இறைவன் படைத்த பொக்கிஷமான கலைகளை நாம் நிச்சயமாக ரசித்து நமது சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டும். என்ன நேயர்களே!நாம் ஒரு அடியாவது எடுத்து வைக்க முயற்சி செய்வோமா?.
      இயற்கையை நேசிப்போம்!இறைவனையும் நேசிப்போம்!கலைகளை பாதுகாப்போம்!🙏👏👍
   நேயர்களே மீண்டும் ஒரு பதிவில் நான் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.உங்கள் அன்பான ஆதரவுக்கு எப்போதும் நான் தலை வணங்குகிறேன்.எனது எழுத்தை ரசிக்க இவ்வளவு ரசிகர்களா என்று நான் வியந்து அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.மிகவும் நன்றி.🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏🤝

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...