ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

வறண்ட மனம்

 


அங்கே இரு நாட்டிற்கு

இடையே சண்டை

என்கிறார்கள்...

மனிதத்தை தொலைத்து 

அரசியல் பேச முடிகிறது 

அவர்களால்...

மனிதத்தை வைத்துக் கொண்டு 

இங்கே இருந்து

நடக்கும் அவலங்களை

விண்ணில் உலாவிக் கொண்டு 

இருக்கும்

என்றோ செலுத்திய 

செயற்கை கோள் மூலம்

கண்ணீர் மட்டுமே வடிக்க முடிகிறது 

என்னால்...

இங்கே எது தான் அவசியம் என்று 

தெரியாமல்

கருத்து சுதந்திர போர்வையில் 

ஆயிரம் ஆயிரம் அரசியல் பேசி

குளிர் காய்கிறோம்...

அத்தனை வறண்ட மனதை

உடையவர்களாக இங்கே

இந்த பிரபஞ்சத்தில் வலம் வந்து 

எதைத் தான்

சாதிக்க போகிறோம் என்கின்ற 

கேள்வி குறைந்தபட்சம் 

ஒரு மனிதனுக்கு கூடவா எழவில்லை 

என்பதே இங்கே 

எனக்குள் எழும் 

ஆயிரம் ஆயிரம் கேள்வி....

#வறண்டமனம்.

#நாள்:13/10/2023.

நேரம் மதியம் 1:30.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அமிர்த கடலென நீ எனக்கு...

  எத்தனை துயரங்களையும்  அசராமல் அடித்து நொறுக்கி  அந்த துயரங்களை அயர்வடைய செய்து  என் மோசமான  சூழலை எல்லாம்  கொஞ்சமும்  அலுத்துக் கொள்ளாமல் ...