ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 28 ஜூலை, 2023

எஞ்சிய தேநீர் துளிகளில்

 


நீ அருந்தி முடித்த 

அந்த தேநீர் கோப்பையில்

ஒரு சில எறும்புகள் அதில் உள்ள

இனிப்பு சுவையை தேடுவதாக

இந்த உலகத்தில் உள்ள 

மக்கள் நம்பலாம் !

நான் ஏன் நம்ப வேண்டும்?

அதில் எஞ்சி இருப்பது

என் மீது கொண்ட காதல் துளிகள் 

என்று

எனக்கு தெரியாதா என்ன?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...