ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 2 ஜூலை, 2023

அரசியல் சாணக்கியத்தனமா?

 


இன்றைய தலையங்கம்:- அரசியல் நகர்வுகள்:-

எதிர் கட்சிகளை பார்த்து பயப்படுகிறதா பிஜேபி என்று கேட்டால் நிச்சயமாக இல்லை நாங்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்று தான் ஒட்டு மொத்த பிஜேபியும் சொல்லும்.. ஆனால் மகாபாரதத்தில் துரியோதனன் சல்லியனை தனது படையில் சேர்க்க என்ன செய்தானோ அதே செயலை தான் தற்போது பிஜேபி செய்கிறது... இதில் என்ன அரசியல் சாணக்கியதனம் என்று தெரியவில்லை.. மகாபாரதம் படித்தவர்கள் சல்லியனை வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிறார்கள்.. ஏன் பல கிராமங்களில் யாரையாவது கீழ்தரமாக திட்ட வேண்டும் என்றால் அவன் கிடக்கிறான் சல்லி பயல் என்று தான் திட்டுவார்கள்.. அதை விடுங்கள்..இங்கே மகாபாரதத்தில் வரும் நல்ல விசயங்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு மோசமான விசயங்களை மட்டும் உள்வாங்கி நடக்கும் நிலையை பிஜேபி கணகச்சிதமாக செய்கிறது.. இங்கே பல சல்லியன்களை நிச்சயமாக பார்க்கலாம் அஜித் பவார் போல... வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு... இப்படியான அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று தான் எண்ண தோன்றுகின்றது... ஆனால் சூத்திரதாரி கிருஷ்ணர் இங்கே சூட்சமமாக செயல்படுவார் என்பதை நினைவில் வையுங்கள் கொஞ்சம்...மாயதிரை எப்போதும் உங்களை கவசமாக பாதுகாக்காது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளும் போது தங்களது அரசியல் பயணம் அஸ்தமனமாகி இருக்கும்...

#இன்றையதலையங்கம்.

#அரசியல்நகர்வுகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...