ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 26 ஜூலை, 2023

இரவு சிந்தனை ✨

 


இருள் சூழ்ந்த நேரத்தில்

ஏதோவொரு திகில் கூட

சுவாரஸ்யம் தான்!

அதுவொரு மாயை என்று

தெரிந்த பின் மனம் அடையும்

அமைதி வார்த்தைகளால்

வர்ணிக்க இயலாது...

எல்லாமே இங்கே மாயை தான்

நம்மை பயமுறுத்தவில்லை 

என்பதற்காக நீங்கள் 

நம்பும் விசயங்கள்

எப்படி உண்மை ஆகும்?

கொஞ்சம் அமைதியாக 

ஆழ்ந்த தேடலில்

உள் நோக்கி பயணியுங்கள்!

விடை தெளிவாக கிடைக்கும்..

#இரவுசிந்தனை.

26/07/2023.

இந்திய நேரம் இரவு 8:50..


#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...