ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 16 மார்ச், 2023

வலி...

 


வலி_இந்த சொல்லை கேட்டவுடனேயே உங்களுக்கு அவரவர் வலிகள் வந்து நெஞ்சில் நிழலாடும்.ஆமாம் நானும் பெரும்பான்மையான நேரங்களில் இந்த வலியை அனுபவித்து இருக்கிறேன்.அனைவருக்கும் வலியோட தன்மை ஒன்றாக இருப்பதில்லை.அது நடக்கும் நிகழ்வை பொருத்து.ஏற்றுக்கொள்பவரின் மனபக்குவத்தை பொருத்து.சிலபேருக்கு அடுத்தவர்கள் வார்த்தையால் தரும் வலிகளையே வைராக்கியமாகக் கொண்டு வாழ்வில் முன்னேறுவார்கள்.மற்றும் சிலர் வார்த்தைகள் தரும் வலியில் அப்படியே உடைந்து அமர்ந்து விடுவார்கள். இதில் வார்த்தைகள் தரும் வலியை உரமாக இட்டு முன்னேற வேண்டும் என்றே நான் சொல்வேன்.நீங்கள் இடிந்து அமர்ந்து விட்டால் அது எதிராளிக்கு பலத்தை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.அதனால் இனி அப்படி செய்யாதீர்கள் உறவுகளே.ஆனந்தமாக வாழ்வதற்கு இதுவும் ஒரு வழி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...