ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 மார்ச், 2023

கனவெனும் நீரோடையில்...

 


கனவெனும் நீரோடையில்

கனத்து ஓடுகிறது

ஏதேதோ நினைவுகள்...

அந்த நினைவுகள்

எந்த பாறையிலும் மோதாமல் 

காத்து நிற்கிறேன்...

என் இமைகளை 

கரைகளாக கொண்டு...

இரவெனும் தாயின் 

பேரன்பில் கரைகிறது

நான் நேசித்த இந்த நொடி

கூடவே சத்தம் இல்லாமல்

அந்த நினைவுகளும் தான்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...