ஒவ்வொரு கோப்பை தேநீர்
பருகி முடிக்கும் போதும்
அடியில் தங்கும்
சில துளி தேநீர் போல
ஒவ்வொரு நாள் முடியும்
அந்த பொழுதின் எச்சத்திலும்
உன் நினைவுகள்
படிமமாக படிந்து
உன் பிரிவின் துயரத்தை
எனக்கு ஞாபகப்படுத்துவதை
தவறுவது இல்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக