ஒவ்வொரு கோப்பை தேநீர்
பருகி முடிக்கும் போதும்
அடியில் தங்கும்
சில துளி தேநீர் போல
ஒவ்வொரு நாள் முடியும்
அந்த பொழுதின் எச்சத்திலும்
உன் நினைவுகள்
படிமமாக படிந்து
உன் பிரிவின் துயரத்தை
எனக்கு ஞாபகப்படுத்துவதை
தவறுவது இல்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக