ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 23 மார்ச், 2023

மெய் நிகரி

 


பொய்யென நினைக்க

முடியாது...

மெய் போல

நீ தழுவி சென்ற

அந்த தழுவலின் சுகந்தம்

இன்னும் என்னை விட்டு

நீங்கவில்லை...

மெய்யோ மெய் நிகரியோ

எனக்கு தெரியாது...

உன் தழுவலின் சுகந்தம்

என்னை விட்டு நீங்கும் போது

உணரக் கூடும்

அது மெய் நிகரி என்று...

அதுவரை இந்த குழப்பம் தீராது...

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...