ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 30 ஜூன், 2023

நானும் அந்த பறவையும்..


 காலணி இல்லாமல்

அந்த நண்பகல் வேளையில்

நான் திக்கு தெரியாத திசையில்

நடக்கிறேன்!

அந்த பறவை அதேவேளையில்

திக்கு தெரியாத திசையில்

வானில் பறக்கிறது!

இருவரின் இலக்கும்

எதுவென்று இந்த பிரபஞ்சம்

அறிந்து கொண்டு இருந்தால் 

போதும் 

என்று

நாங்கள் நினைக்கிறோம் !

வானமோ பூமியோ அதை பற்றி

கவலையில்லாமல் 

எங்களை வழி நடத்துகிறது

சூட்சமமாக!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...