ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 17 ஜூன், 2023

இரவு கவிதை (2)

 

தனிமையின் கரங்களில்

நான் எப்போதும் அடைக்கலம்!

காற்று வெளியிடையே

இந்த அமாவாசை இரவின் கருமையை

ரசிக்கிறேன்..

காதலோடு தென்றல் காற்றின்

ஸ்பரிசத்தை மட்டும்

என்னால் வேண்டாம் என்று

வைராக்கியமாக ஒதுக்க இயலவில்லை!

மற்ற படி காதலுக்கும் எனக்கும்

இருக்கும் தூரம் என்பது

பல கோடி மைல்கள்....

#இரவு கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...