குடுவையில் அடைத்த பானத்திற்கு
அதை ருசிப்பவர்களுக்காக
காத்திருப்பு அவசியம்!
இங்கே கரைபுரண்டு
ஓடும் நதிக்கு
எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!
சுதந்திரத்தின் அலாதி சுவையை
அந்த பிரவாகம் எடுத்து ஓடும்
நதியை தவிர யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக