ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 20 ஜூன், 2023

நான் விடை பெறும் போது...

 

நான் யார் என்று

உணரும் போது

அந்த நான் விடைபெறுகிறது!

விடை பெறும் போது

அதை பயத்தினால்

மீண்டும் அரவணைத்துக் கொள்கிறேன்...

அதனோடு சூட்சமமாக மாயையும் எனை

இறுக அணைத்துக் கொள்கிறது!

இங்கே சம்சார தாபத்தின்

தன்மையின் வாசத்தை

என்னில் இருந்து பிரிக்க

போராடும் தருணத்தின் வலியை இங்கே யார் அறியக் கூடும்?

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...