ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 15 டிசம்பர், 2022

புல்லாங்குழலின் ஓசையில்


 உன் புல்லாங்குழல் இசையில்

என்னை கரைத்து விட

மூச்சிரைக்க

இசை வந்த அந்த திசை

நோக்கி ஓடோடி வந்தேன்..

நீயோ மாயமாய் மறைந்து போனாயே...

வெகுநேரம் அழுதுகொண்டே

இருந்தேன்..

சற்று நேரத்தில் 

கன்னத்தில் வழியும்

கண்ணீரை மெதுவாக

துடைக்கிறது..

ஏதோவொரு சூட்சம கரம்

அந்த பேரன்பில்

நான் இங்கே கிருஷ்ணா

என்று வாய் விட்டு

பிதற்றுவதை

என்னை வேடிக்கை பார்ப்பவர்கள்

சித்தம் கலங்கியவளோ

என்கிறார்கள்...

நானோ உன் மீது பித்தம்

கொண்டவள் என்பதை

உன்னை தவிர

இங்கே எவர் அறியக் கூடும்

கண்ணா...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...