ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 டிசம்பர், 2022

மழலையின் நிலையில்

 

அன்று பிறந்த குழந்தைக்கு

எவ்வித சஞ்சலங்களும்

இல்லை...

எண்ணங்களே இல்லை..

பிறகெப்படி சஞ்சலங்கள்

தோன்றக் கூடும்..

நான் அத்தகைய நிலையில்

இருக்கும் ஒரு நாளை

ஒரேயோரு நாளை

எதிர்பார்த்து ஏங்கி

தவிக்கிறேன்...

தவித்த நொடிகள் கூட

என் நிலைமையை புரிந்து

கலங்கியது...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...