ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அந்த அலைபேசியின் கதறல்

 

நீதான் அழைக்கிறாய்

என்று தெரிந்தும்

அழைப்பை ஏற்க மறுக்கிறது

என் மனம்...

மீண்டும் மீண்டும்

காதலின் கதறலை

கேட்க என் மனதிற்கு

தைரியம் இல்லை...

நாம் மௌனமாக

விலகி காதலை கண்ணீரில்

கரைத்து பயணிப்போம்

இதுவும் ஒரு துளி

இன்பம் தானே

இங்கே...

எளிதாக சொல்லிக் கொள்கிறேன்...

மனம் தான் ஏற்க மறுத்து

பெரும் கண்ணீரை

பரிசாக அளித்து விடுகிறது..

அதை நம் காதலின் அடையாளமாக

அதன் எல்லா துளிகளையும்

ஒரு தாளில் சேர்த்து 

வைத்துக் கொள்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...