ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 28 செப்டம்பர், 2022

உணர்வை தொலைத்து ஓர் ஓட்டம்..


பேரன்பு எனும்

உணர்வை குழி தோண்டி

புதைத்து விட்டு 

பேரன்பை தேடி

அலைந்து திரிகிறேன்...

கேட்க நாதியற்று..

நான் கொஞ்சம் பரவாயில்லை

அங்கே பலபேர்

இதை காலம் காலமாக

செய்து வருகிறார்கள்..

உணர்வற்ற இந்த ஓட்டத்தை

ஏன் ஓடுகிறீர்கள் என்று

நான் கேட்டால்

அவர்கள் சொன்ன பதில்

எனை ஆச்சரியப்படுத்தியது..

ஆம்.. நான் இப்படி 

உணர்வற்று ஓடுவதெல்லாம் 

என் மீது பேரன்பு செலுத்தும்

குடும்ப உறுப்பினர்களுக்காக

என்று சொல்லி விட்டு

மீண்டும் உணர்வற்ற ஓட்டத்தில்

தன்னை தொலைக்கிறார்கள்..

இவர்களை தேடி அங்கே

அவர்களை நேசித்து

பேரன்பு கொண்ட

குடும்பத்தினர் தேடி

அலைகிறார்கள்..

தங்கள் பேரன்பை தொலைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...