ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 8 டிசம்பர், 2022

அந்த மழைக் கால இரவொன்றில்

 


Some one else இந்த குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஒரு அரசியல் விமர்சகராக???

நான்:-கொஞ்சம் அந்த பக்கம் போகிறீர்களா.. நான் தற்போது இங்கே சாரலாக பொழியும் மழையில் ரசித்து கொண்டு இருக்கிறேன் என்றேன்..

Some one else:-அதுவா இப்போது முக்கியம் பாஸ்... இங்கே வாருங்கள் விமர்சனம் செய்யுங்கள்..

நான்:-நான் ஏதாவது சொல்லி உங்களை திட்டுவதற்குள் இங்கே இருந்து நகர்ந்து விடுங்கள்.. நான் தற்போது அரசியல் விமர்சனம் செய்யும் மனநிலையில் இல்லை.. சாரல் மழையை ரசித்து கொண்டே கொஞ்சம் அழகான இசையை கேட்டு கொண்டு இருக்கிறேன்.. தயவுசெய்து நாளை அல்லது நாளை மறுநாள் வாருங்கள்..அதை பற்றி நிறைய பேசலாம்.. ஆமாம் அதை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது.. தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க இது என்ன பகவத் கீதையா.. போங்கள் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு உறங்குங்கள்.. உறக்கம் வரவில்லை என்றால் என்னை போல ஏதாவது இசையோடு மழையை ரசியுங்கள்.. இனிய இரவு வணக்கம்..

Some one else:-இவர்கள் ஏன் தற்போது இப்படி கோபமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று புரிந்தும் புரியாமலும் என் இருப்பிடத்தை விட்டு நகர்ந்தார்..

நான் நிம்மதியாக இசையை ரசித்துக் கொண்டே சில கவிதைகளை எழுதிக் கொண்டே அந்த சாரல் மழையை இமை மூடாமல் ரசித்தேன்.. அதில் சில துளிகள் நான் எதிர்பாராத நேரத்தில் என் கன்னம் வருடி சென்றதை என்னால் தடுக்க இயலவில்லை.. ஆனால் அந்த வருடலின் அவசியம் இப்போது தேவையாக இருந்தது எனக்கு.. ஏனெனில் அவர் மீது கொண்ட கோபத்தை போக்க..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்...

அந்த ஏதோவொரு  தேடலில் தான்  நான் தொலைந்து  போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில்  சென்றதற்காக இவ்வளவு  பெரிய தண்டனை வேண்டாம் என்று  ...