ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 3 டிசம்பர், 2022

நிகழ் கால கவிதை 🍁

 

இங்கே பெய்யும் மழை

எனது இதயத்தில் உள்ள

அத்தனை உற்சாகமான

உணர்வுகளை உள்வாங்கி

என்னுள் ஊற்றாக

இறங்குகிறது...

அந்த மழைக் கால நேரமொன்றில் தான்

நீ எனக்கு அறிமுகம் ஆனாய் என்று நான்

நினைக்கும் போதே

என் மனம் உடனே

அதை பெய்கின்ற மழையில்

உன் நினைவுகளை கரைத்து

என்னை கொஞ்சம்

அன்பு கலந்த அதிகாரத்தில்

மிரட்டுகிறது...

இங்கே பெய்கின்ற மழையை நேசி..

இதை விட தற்போது

உன் காதலியின் நினைவு

பெரிதில்லை என்றது..

நானும் அதுதான் சரி என்று

வெளியே பெய்யும் மழையை

ரசிக்கிறேன்...

அங்கே வீசும் காற்றில்

தெறிக்கும் சாரல்

எனது முகத்தில் முத்தமிட்டு

நொடி பொழுதில் மறைந்தது..

#நிகழ்காலகவிதை

#மழைசாரல்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...