ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 2 டிசம்பர், 2022

மழையில் நனைந்த சாலை...


மழையில் நனைந்த 

அந்த சாலையை

கொஞ்சம் அது 

தன்னை தானே ரசிக்க...

விட்டு விடக் கூட மனம் இல்லாமல்

அதன் உணர்வுகளை மிதித்து

பயணிக்கும் மனிதர்களை

சாலையோர விளக்குகள்

தன் வெளிச்சத்தில்

கோபத்தை காட்டி மிரட்டி

தனது கண்டிப்பை கடத்துகிறது

அவர்கள் மேனியின் மீது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...