ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 22 டிசம்பர், 2022

நான் எனும் மாயை..

 

நான் எனும் மாயை

அடங்கும் நேரத்தில்

உள்ளே தெரியும் அந்த ஜோதியின் காட்சியில்

கண்கூசி நிற்கிறேன்..

ஆத்ம ஞானத்தின்

தரிசனத்தை கண்ட பின்

என்னுள் பேரமைதி

நிலவுவதில் நான்

வேடிக்கை பார்க்கிறேன்

என்னையே..

என்னை சுற்றி இருப்பவர்கள்

என்னிடம் இருந்து பயந்து 

விலகி செல்கிறார்கள்..

நான் அதை உணர்கிறேன்

தடுக்க விரும்பவில்லை..

மாறாக ஒரு புன்னகை செய்து

அவர்கள் விலகிய இடத்தை

கொஞ்ச நேரம் அமைதியாக

பார்த்து விட்டு

மெல்லமாக நடந்து

விலகி செல்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...