ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அன்றொரு நாள்...

 

அன்றொரு நாள்

ரயில் பயணத்தில்

பயணித்தோம்

இதே வழியில்...

அதீதமான காதல் உணர்வோடு..

இன்று இதே பாதையை

நான் கடந்து செல்லும் போது

உன் நினைவுகள் எனும்

சுவடுகளை தவிர

வேறெதுவுமில்லை..

தொலைதூரத்தில்

ஏதோவொரு ஒரு அபூர்வ பூவின்

 வாசம் ஒன்று

என் நாசியை துளைக்கிறது...

அது ஏனோ உன் அருகில்

நான் இருந்து பயணித்த

வாசத்தை ஞாபகப்படுத்துவதை

என்னால் தடுக்க இயலவில்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...