ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 டிசம்பர், 2022

இறைவனிடம் ஒரு பிரார்த்தனை

 

நாய்க்கு கருத்தடை..

குரங்குக்கு கருத்தடை...

இன்னும் இன்னும்

பல ஜீவராசிகளுக்கு

கருத்தடை செய்ய வேண்டும் என்று அங்கே ஆயிரம் பேர்

கூக்குரலிட்டுக் கொண்டு

இருப்பதை பார்த்து

இந்த பூமி தாய் மௌனமாக 

கண்ணீர் வடிக்கிறாள்...

இங்கே அதனதன் வாழ்வை

சிதைத்து விட்டு

மனிதர்களின் கூட்டம்

மட்டும் கூடிக் கொண்டே

போகிறதே என்று...

அதன் மௌன விசும்பலை

பொறுக்க முடியாத நான்

தீவிர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...

இறைவா

இங்கே மனிதர்கள் எனும்

ஜீவ கூட்டத்தை மட்டும்

சில காலம் இல்லாமல் செய்து விடு இறைவா...

அந்த இடைப்பட்ட காலத்தில்

நிம்மதியாக அந்த

பல ஜீவராசிகள்

உயிரோட்டமான வாழ்வை

கொஞ்சம் வாழ்ந்து விட்டு

போகட்டும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...