ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


தனித்து சுற்றுசூழலை

மறந்து

இந்த பிரபஞ்சத்தின் ருசியை

அளவற்று ரசித்து ருசித்துக் கொண்டு

இருக்கும் போது

அந்த மரண தேவனும்

தன் கடமையை மறந்து

என்னை இந்த பிரபஞ்சத்தின்

உயிர் நாடியாக விட்டு

சென்று விட்டான்...

அங்கே தன் மேலதிகாரியின்

கோபத்திற்கு 

என்ன பதில் சொல்லி தப்பிப்பான்

என்று இங்கே யாரேனும் 

தெரிந்து இருந்தால் கொஞ்சம் 

சொல்லுங்கள்!

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...