ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 15 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இங்கே தேவை

ஒரு இளைப்பாறுதல்!

அதை விட தேவை

கொஞ்சம் தனிமையோடு

கனிந்து களித்திருத்தல்...

எப்போதும்

ஒரு ஊடலும் இல்லாத 

ஒரு ஜென் நிலையில் 

சுகித்திருத்தலே

என் வாழ்வின் அடையாளம்...

இதைத் தவிர வேறு எந்த வித

தேவையோ சலசலப்போ

இல்லாத நதியின் பயணமிது

என் வாழ்வின் ஒரு பெரும் பயணமான

துயரமற்ற பயணமது....

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...