ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 15 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இங்கே தேவை

ஒரு இளைப்பாறுதல்!

அதை விட தேவை

கொஞ்சம் தனிமையோடு

கனிந்து களித்திருத்தல்...

எப்போதும்

ஒரு ஊடலும் இல்லாத 

ஒரு ஜென் நிலையில் 

சுகித்திருத்தலே

என் வாழ்வின் அடையாளம்...

இதைத் தவிர வேறு எந்த வித

தேவையோ சலசலப்போ

இல்லாத நதியின் பயணமிது

என் வாழ்வின் ஒரு பெரும் பயணமான

துயரமற்ற பயணமது....

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...