ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

வாழ்வின் சுவை (4)

 

மேலேயுள்ள வாசகத்தை ஒட்டி நான் சொல்வதும் ஒன்று தான்.. தயவுசெய்து பாதுகாப்பாக வாழ நினைக்காதீர்கள்... வாழ்க்கை போரடித்து விடும்..ஒரே மாதிரியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயமாக சுகத்தை தருவதை விடுத்து சோகத்தையே தரும்.. ஆனால் இங்கே ஒரே மாதிரியான வாழ்க்கையை தவிர வாழ வேறு வழியில்லை பல கோடி பேருக்கு...ஒன்று மட்டும் நிச்சமாக சொல்வேன்... வாழ்வின் சுவாரஸ்யங்கள் எப்போதும் உங்களை தவிர வேறொருவர் அனுபவிக்க முடியாது.. அப்போது நீங்கள் பல வித புது தருணங்களை எதிர் கொள்ள வேண்டும்..சம்சாரிகளால் நிச்சயமாக முடியாது.. ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பயணிக்கும் அந்த வாழ்வின் ரசனையான பயணிக்கு சாத்தியம் ஆகும் போது அவனை கொண்டாடுங்கள்.. அவன் நிச்சயமாக நேசிக்கப்பட வேண்டியவன்... நான் அப்படி தான்.. நான் வாழ்வின் சூட்சமத்தை உணர்ந்து கொண்டு அந்த நதியில் மிகவும் நிதானமாக ரசனையோடு நீந்துகிறேன்... நான் எப்போதும் வேறொருவரின் வாழ்க்கையை வாழ விரும்புவதில்லை... நான் என்றால் அது நான் மட்டும் தான்.என்னை போல இன்னொன்று எப்போதும் கிடையாது.. அப்படி இருந்தால் அது போலி... வாழ்வின் இறுதி பயணத்திலும் இந்த பிரபஞ்சத்திற்காக ஒரு கவிதை எழுதி காற்றில் மிதக்க செய்வேன்.. நான் எப்போதும் தனித்துவமானவள்... இந்த சமுதாயமோ எனது வீடோ என்னிடம் ஏதோ எதிர் பார்த்து சோர்ந்து விடுகிறது... அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ? என்னை புரிந்துக் கொள்ள உங்களில் பலபேருக்கு ஒரு யுகம் தேவைப்படலாம்... அது தான் உண்மை...

#வாழ்வின்சுவை(4).

14/08/2023.

பிற்பகல்2:50.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...