ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

அந்த சாம்பல் நிற மேகம் யூகித்து இருக்கக் கூடும் ☁️

 

நான் தேடிக் கொண்டு இருக்கும் 

பேரமைதியை

இதோ இந்த மழையில் நனையும் 

தருணம்

தந்து விடுகிறது...

இங்கே என்னை சுற்றி நடக்கும் 

புற சூழலை மறந்து 

மழையில் நனையும்

இந்த தருணத்தை

நானும் என் மனதும்

கொண்டாடி தீர்க்கிறோம்...

சச்சரவுகளையே பார்த்து பார்த்து 

அலுத்து விட்ட மனதிற்கு இதமான 

இந்த சூழல் தேவை தான் என்று

அந்த சாம்பல் நிற மேகமும்

யூகித்து இருக்கக் கூடும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் இரவு 8:23.

03/08/2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...