ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

அத்தனையும் துறந்து விடு

 

அத்தனையும்

துறந்து விடு

துறந்து விடு என்கிறார்கள்

அங்கே...

நானோ வெற்று பாத்திரம் கூட 

இல்லாமல் சுற்றுகிறேன்...

என் ஊண் உடம்பை பற்றிய

நினைவுகள் கூட

பாரமென உணர்வற்று

திரிகிறேன்...

என்னை பார்த்து

அத்தனையும் துறந்து விடு

என்கிறார்கள் அங்கே...

எதை என்று

யோசிக்கும் போதே

புரிகிறது...

இதைத் தான் என்று...

#தத்துவகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...