ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 28 ஜனவரி, 2023

காலத்தின் பெருந்தன்மை

 

காலம் என்னை

சிரிக்க வைக்கிறது;

காலம் என்னை அழ வைக்கிறது;

காலம் என்னை சஞ்சலப்படுத்துகிறது;

காலம் என்னை

கொல்கிறது...

இப்படி அங்கே பல கோடி பேர் 

பிதற்றுவதை கேட்டு

காலம் எந்தவித கோபமும் இல்லாமல்

கொஞ்சம் புன்னகைத்து

அவர்களை கடந்து செல்கிறது...

காலத்தின் பெருந்தன்மை 

குணத்தை பார்த்து

கொஞ்சம் சிலிர்த்து தான்

போகிறேன் நான்...

#காலம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...