ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 24 செப்டம்பர், 2022

நிசப்தம் காத்திருக்கிறது..கொண்டாடி மகிழ


ஆராவாரமான அலைபேசி

அழைப்புகள்

இல்லாத இந்த நாளை

நான் கொண்டாடி தீர்க்கிறேன்..

அத்தனை ஆனந்தம் உள்ளதா

எந்த அழைப்பும் வராமல்

இருப்பதில்?

நான் ஆச்சரியம் அடைந்து

பிரமித்து இருப்பதை பார்த்து

இயற்கை இது என்ன

இன்னும் இருக்கிறது

நீ இங்கே கொண்டாடி மகிழ 

கோடான கோடி நிசப்தங்கள்

உன் வருகைக்காக

காத்திருக்கிறது...

சப்தங்கள் அற்ற

அந்த அற்புத நிகழ்வொன்றில்

கலந்து விடும் போது

வாழ்வின் அர்த்தம்

உயிர்ப்பு அடைகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...