ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 8 செப்டம்பர், 2022

இறப்பென்பது பரிணாமம்

 

பெரும் சாம்ராஜ்யம்

ஆண்டாலும்

இறப்பு என்பது

இழப்பா என்று

கேட்டால்

இழப்பல்ல...

அதுவொரு பரிணாமம்

இந்த உடலில் கிடைத்த

புகழை சுமந்து

இன்னொரு ஜீவன்

அந்த அரண்மனையில் உதிக்கலாம்...

இந்த பிறவியின்

ஞாபகங்கள்

அந்த உடலுக்கு

கிடைக்காமல்

சாதாரண இளவரசியாக

வலம் வரலாம்...

இங்கே இருவினையின்

எச்சத்தை தவிர

வேறெதுவும்

நிலையில்லை...

ஆன்மாவின் பயணம்

முடிவற்றது...

#இரங்கல் கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...