ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 8 செப்டம்பர், 2022

இறப்பென்பது பரிணாமம்

 

பெரும் சாம்ராஜ்யம்

ஆண்டாலும்

இறப்பு என்பது

இழப்பா என்று

கேட்டால்

இழப்பல்ல...

அதுவொரு பரிணாமம்

இந்த உடலில் கிடைத்த

புகழை சுமந்து

இன்னொரு ஜீவன்

அந்த அரண்மனையில் உதிக்கலாம்...

இந்த பிறவியின்

ஞாபகங்கள்

அந்த உடலுக்கு

கிடைக்காமல்

சாதாரண இளவரசியாக

வலம் வரலாம்...

இங்கே இருவினையின்

எச்சத்தை தவிர

வேறெதுவும்

நிலையில்லை...

ஆன்மாவின் பயணம்

முடிவற்றது...

#இரங்கல் கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...