ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 17 செப்டம்பர், 2022

மண் சிறப்புற வேண்டும்

 

இன்று ஒரு தலையங்கம்:-

இதை பற்றி எப்போதோ எழுத வேண்டும் என்று நினைத்தேன்.. இன்று தான் அதற்கான தருணம் அமைந்தது.. சமுதாய வானொலி தொடங்க வேண்டும் என்று பலபேருக்கு ஆசை.. ஆனால் அதற்கான செலவினங்கள் பார்த்தால் அரசாங்கத்திடம் உரிமை வாங்கவே பல இலட்சங்கள் செலவு ஆவதாக சொல்கிறார்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.. இன்றைய தேவையில் சமுதாய வானொலி மிகவும் அவசியமான ஒன்று.. குறிப்பாக விவசாய பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை சமுதாய வானொலி மூலம் வழங்கலாம்.. மதிப்பு கூட்டி வேளாண் பொருட்களை விற்பனை செய்ய...அந்தந்த பகுதி வானிலை அறிவிக்க.. குறிப்பாக அரசாங்கம் அறிவிக்கும் மானியம் தொடர்பான விபரங்களை அடிக்கடி விவசாயிகளுக்கு சொல்ல முக்கியமாக வேண்டும்.. ஏனெனில் தோட்டக்கலைக்கு அரசாங்கம் அவ்வளவு மானியங்கள் அறிவித்து உள்ளது.. நடைமுறையில் அவைகளை உண்மையான விவசாயிகள் அனுபவிக்கிறார்களா என்று பார்த்தால் செய்தித்தாள்களில் வரும் செய்திகளே அதற்கு சான்று.அதில் எந்தளவுக்கு ஊழல் நடைபெறுகிறது என்று..

மத்திய அரசாங்கம் எவ்வளவோ துறைகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.. (தற்போது பெரும்பாலும் பெயரளவில் என்பது வேறு விசயம்) இந்த சமுதாய வானொலி தொடங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கு ஊக்கம் அளித்து விவசாய பணிகளுக்கு உதவினால் என்ன?மண் சார்ந்த விசயங்கள் பாரம்பரிய கலை மற்றும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பண்பாட்டு கலைகள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்க இப்படி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

ஏதேதோ இலவசங்களை அறிவிக்க போட்டி போட்டு கொண்டு யோசிக்கும் அரசியல் கட்சிகள் இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்..

மேலும் விவசாயிகள் முட்டாள்கள் இல்லை.. எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பெரும்பாலும் நன்றாக படித்து விட்டு மிகவும் உற்சாகமாக வயலில் இறங்கி வேலை செய்பவர்கள் அதிகம்.. அவர்கள் இரவில் தினமும் விவசாயம் சார்ந்த விசயங்களை கலந்துரையாடல் செய்வது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்..இதை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால் மக்கள் எல்லோரும் அப்டேட்டாக இருக்கிறார்கள்..

ஆனால் அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு தேர்தல் எதை இலவசமாக கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறது...

இங்கே இந்த பதிவை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் எனது நட்பு வட்டாரத்தில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்..

அவர்கள் இந்த பதிவை கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோடு யோசித்து மேலிடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்...என்பதற்காக தான்..

நீங்கள் கேட்கலாம் இதை நீங்கள் ஏன் மத்திய அரசாங்கத்தின் ஒலிபரப்பு துறைக்கு ஒரு மெயில் அனுப்பி கேட்கக் கூடாது என்று..

அந்த மெயில் எல்லாம் பத்தோடு பதினொன்றாக தான் இருக்கும்..

ஆனால் இங்கே இந்த பதிவை வாசிக்கும் அரசியல் நட்புகள் நேரடியாக முயற்சி செய்யவும் கூடும்.. விவசாயிகள் நலன் கருதி...

யோசிப்பார்கள் என்று நம்புவோம்..

#சமுதாய #வானொலி

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...